search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Army commander"

    • அப்போதிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.
    • வெவ்வேறு இடங்களுக்கு சென்றாலும் இன்று வரை இருவரும் தொடர்பிலேயே உள்ளனர்

    இந்திய ராணுவத்தின் தளபதியான மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். ராணுவ துணை தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் திவேதி நாட்டின் 30வது ராணுவ தலைமை தளபதியாவார்.

     

    இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பதவியேற்று தற்போது இந்திய கடற்படை தளபதியாக இருந்துவரும் தினேஷ் திரிபாதியும் இந்திய ராணுவத் தலைமைத் உபேந்திரா திவேதியும் ஒரே வகுப்பில் படித்த மாணவர்கள் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

     

    இந்திய வரலாற்றிலேயே ஒரே வகுப்பில் படித்த இருவர் ஒரே நேரத்தில் ராணுவத் தளபதியாகவும் , கடற்படைத் தளபதியாகவும் உள்ளது இதுவே முதல் முறை ஆகும். மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள சைனிக் பள்ளியில் இருவரும் 1970களில் ஆண்டு ஐந்தாம் வகுப்பு A பிரிவில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போதிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். ராணுவத் தளபதி உபேந்திராவின் ரோல் நம்பர் 931 ஆகவும், கடற்படைத்  தளபதி தினேஷ் திரிபாதியின் ரோல் நம்பர் 938 ஆகவும் இருந்துள்ளது.

     

    அதன்பின்னர் வெவ்வேறு இடங்களுக்கு சென்றாலும் இன்று வரை இருவரும் தொடர்பிலேயே உள்ளனர். தற்போது இருவரும் நாட்டின் முக்கியமான இரண்டு பொறுப்புகளில் உள்ளது ராணுவப்படைக்கும், கப்பற்படைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும். மேலும் இருவரின் முன்னேற்றம் குறித்து ரேவா சைனிக் பள்ளி ஆசிரியர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். 

    • பொலிவியன் ராணுவத்தின் சில பிரிவுகளால் ஒழுங்கற்ற அணி திரட்டல்களை நாங்கள் கண்டிக்கிறோம்.
    • சிறிது நேரத்தில் ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது.

    சுக்ரே:

    தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபராக லூயிஸ் ஆர்ஸ் உள்ளார். இந்த நிலையில் அங்கு ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா திடீரென்று ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது உத்தரவின்பேரில் ராணுவத்தின் சில பிரிவினர் ராணுவ புரட்சிக்கு முயன்றனர்.

    அதிபர் மாளிகை, பாராளுமன்றம் அமைந்துள்ள பிளாசா முரில்லோ வரலாற்று சதுக்கத்தில் ராணுவ வீரர்கள், டாங்கிகள் குவிக்கப்பட்டன. இதில் ஒரு டாங்கி மூலம் அதிபர் மாளிகையின் கதவை உடைக்க முயன்றனர். அதேபோல் அரசு கட்டிடங்களும் முற்றுகையிடப்பட்டன.இதனால் பெரும் பதற்றம் நிலவியது.

    இதுதொடர்பாக ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா கூறும்போது, ஜனநாயகத்தை ஆயுதப் படைகள் மறுசீரமைக்க விரும்புகின்றன. அதை உண்மையான ஜனநாயகமாக மாற்ற விரும்புகின்றன. நாங்கள் எங்கள் தாயகத்தை மீட்டெடுக்கப் போகிறோம். அதிபர் லூயிஸ் ஆர்சை மதிக்கிறேன்.

    அதேவேளையில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும். சிறையில் உள்ள முன்னாள் தலைவர் ஜீனைன் அனெஸ் உட்பட அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றார். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு ராணுவ வீரர்கள் பின்வாங்கினர். ராணுவ டாங்கிகளும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. அதன்பின் சிறிது நேரத்தில் ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிபர் லூயிஸ் ஆர்ஸ் கூறும்போது, பொலிவியன் ராணுவத்தின் சில பிரிவுகளால் ஒழுங்கற்ற அணிதிரட்டல்களை நாங்கள் கண்டிக்கிறோம். ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். மீண்டும் ஒரு முறை, பொலிவியர்களின் உயிரைப் பறிக்கும் சதி முயற்சிகளை நாம் அனுமதிக்க முடியாது.

    ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒரு தேசிய அணி திரட்டலுக்கு மக்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்றார். ராணுவ தளபதி ஜூனிகா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

    பொலிவியாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்கா, பிரேசில்,சிலி, ஈக்வடார், பெரு, மெக்சிகோ, கொலம்பியா,வெனிசுலா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    ×