என் மலர்
நீங்கள் தேடியது "aruppukottai"
அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.ரெட்டிய பட்டி முத்துராமலிங்க புரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 45) விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இருவருக்கும் அந்த பகுதியில் அருகருகே தோட்டம் உள்ளது. தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அழகர்சாமி தனது தோட்டத்தில் குப்பைகளை எரித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகர்சாமியும், அவரது பேரன் தமிழரசனும் சேர்ந்து கட்டையால் கண்ணனை தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த கண்ணனை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார். எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர்சாமி, தமிழரசனை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
பாலையம்பட்டி:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ளது ராமசாமி நகர். இங்குள்ள அய்யங்கரன் என்பவரது தோட்டத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் முகம் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது ஆடைகள் அலங்கோலமாக கிடந்தன.
இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
முகம் கருகிய நிலையில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த பெண்ணின் கையில் சங்கீதா என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. அவர் அருகே விஷபாட்டில்களும் கிடந்தன. அந்த பெண்ணை யாராவது இந்த தோட்டத்துக்கு கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்றும், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை தீ வைத்து எரித்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்? என்பதை அறிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.