என் மலர்
நீங்கள் தேடியது "assassination attempt"
- துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார். இந்த சம்பவத்தால் பரபர சூழல் உருவானது.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது. இதைத் தொடர்ந்து டிரம்ப்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிரிந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக துப்பாக்கி சூடு நடத்தியவர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 70 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பகுதியில் வசித்து வந்துள்ளார் என்று எஃப்பிஐ தெரிவித்தது.
துப்பாக்கி சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர். இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.
இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- டிரம்ப் தனது பேரணியில் சுடப்பட்டார், அவர் இந்த படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
- அவர் புல்லட் புரூப் ஜாக்கெட் அணியவில்லை என்றால், இந்த படுகொலை தாக்குதலில் இருந்து தப்பியிருக்க மாட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார். இந்த சம்பவத்தால் பரபர சூழல் உருவானது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது. இதைத் தொடர்ந்து டிரம்ப்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர். இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார்.

அதில், "டிரம்ப் தனது பேரணியில் சுடப்பட்டார், அவர் இந்த படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார், ஆனால் இடதுசாரிகள் அவநம்பிக்கை அடைந்துள்ளனர்... அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
"கிட்டத்தட்ட 80 வயதாகும் இந்த மீது பல தோட்டாக்கள் துளைத்தாலும் அமெரிக்கா வாழ்க என்று கத்திக் கொண்டே எழுந்து இந்த தேர்தலில் வெற்றி பெறுவார். வலதுசாரிகள் ஒருபோதும் சண்டையை துவங்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் தான் சண்டையை முடித்து வைப்பார்கள்.
ட்ரம்ப் தனது மார்பில் ஒரு தோட்டாவை வாங்கினார். அவர் புல்லட் புரூப் ஜாக்கெட் அணியவில்லை என்றால், இந்த படுகொலை தாக்குதலில் இருந்து தப்பியிருக்க மாட்டார். இடதுசாரிகள் ட்ரம்பை கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஒருபோதும் வெறுப்பும் வன்முறையின் வெற்றி பெறாது" என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

- துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது.
- நியூயார்க்கில் நடந்த ஜெகந்நாதரின் முதல் ரத யாத்திரையில் பக்தர்களுக்கு ட்ரம்ப் உதவி செய்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார். இந்த சம்பவத்தால் பரபர சூழல் உருவானது.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது. இதைத் தொடர்ந்து டிரம்ப்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
துப்பாக்கி சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர். இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடவுள் ஜெகந்நாதரின் அருளால் தான் சிறு காயங்களுடன் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் உயிர் தப்பினார் என்று "சர்வதேச கிருஷ்ணர் விழிப்புணர்வுக்கான சமூக அமைப்பு" (ISKCON) தெரிவித்துள்ளது.
48 ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கில் நடந்த ஜெகந்நாதரின் முதல் ரத யாத்திரையில் பக்தர்களுக்கு ட்ரம்ப் உதவி செய்தார். தற்போது ஜெகந்நாதரின் 9 ஆவது ரத யாத்திரை நடைபெறவுள்ள நிலையில், அதன் பிரதிபலனாக தற்போது ட்ரம்பின் உயிரை ஜெகந்நாதர் காப்பற்றியுள்ளார்" என்று இஸ்கான் செய்தித் தொடர்பாளர் ராதாரமன் தாஸ் தெரிவித்துள்ளார்.
- இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உள்ளூர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- சில நாட்களுக்கு முன்புதான் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்தது.
அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு அருகே சாமுவேல் ஷார்ப் என அடையாளம் காணப்பட்ட நபர் ஓஹியோ காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு அருகிலுள்ள வீடற்ற முகாமில் வசித்து வரும் சாமுவேல் ஷார்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. அவர் சம்பத்தன்று 2 கைகளிலும் கத்தியை வைத்து கொண்டு ஒருவரை தாக்க சென்றதாகவும் பாதுகாப்பு கருதி அவரை சுட்டு கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உள்ளூர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்புதான் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.
- கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.
- ஏற்கனவே என்னை கொல்வதற்காக ஈரான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மீது அடுத்தடுத்து கொலை முயற்சிகள் நடந்து வருவது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜூலை 13 ஆம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் மேடையில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். காதில் குண்டு உரசிச்ச சென்ற நிலையில் நூலிழையில் டிரம்ப் உயிர் தப்பினார். மேத்யூ க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான்.


இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி புளோரிடாவில் தனது சொந்தமான கோல்ப் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த டிரம்ப்பை மீது ரயான் வெஸ்லி ரூத் என்ற 58 வயது நபர் ஏகே 47 துப்பாக்கியால் சுட முயன்றார். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடியவே தப்பியோடிய அவரை போலீஸ் துரத்திப் பிடித்தது. தொடர்ந்து டிரம்ப் குறிவைக்கப்பட்டு வரும் நிலையில் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல்களுக்கு வெளிநாட்டு சதி காரணமா என்ற கேள்விகள் எழுந்தவரும் நிலையில் தனது உயிருக்கு ஈரான் நாட்டினால் அதிக அச்சுறுத்தல் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் கூறியதாவது, எனது உயிருக்கு ஈரானால் அச்சுறுத்தல் உள்ளது. மொத்த அமெரிக்க ராணுவமும் விழுப்புடன் காத்திருக்கிறது. ஏற்கனவே என்னை கொல்வதற்காக ஈரான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஆனால் மீண்டும் அவர்கள் என்னை கொல்ல முயற்சிக்கக்கூடும். இது யாருக்கும் நல்லதல்ல. இதற்கு முன் இருந்ததை விட என்னைச் சுற்று அதிக பாதுகாவலர்கள் ஆயுதத்துடன் எந்நேரமும் காவலுக்கு இருக்க வேண்டிய சூழல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்டதும், அதற்கு இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா ஈரானுக்கு அழுத்தம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
- தலையை சற்று அசைத்ததால் அவரது காதில் குண்டு உரசி நூலிழையில் உயிர் தப்பினார்
- "மிகவும் எளிமையான செய்தியை வழங்க இங்கு திரும்பி வந்துள்ளேன்
அதிபர் தேர்தல்
உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்காவுக்கான அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராகக் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
பென்சில்வேனியா துப்பாக்கிசூடு
தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் டிரம்ப் மீது கொலை முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. முதலாவதாக கடந்த ஜீலை 13 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பட்லர் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த டிரம்ப் மீது தாமஸ் குரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். அப்போது தலையை சற்று அசைத்ததால் டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பினார். இருப்பினும் அவரது காதில் குண்டு உரசி காயம் ஏற்பட்டுள்ளது.

தாமஸ் குரூக்ஸ் அந்த இடத்திலே சுட்டுக் கொல்லப்பட்டான். இதைத்தொடர்ந்து புளோரிடா கோல்ப் மைதானத்தில் வைத்து கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி மற்றொரு கொலை முயற்சி நடந்தது. ஆனால் அதில் இருந்தும் அவர் உயிர்தப்பினார். இந்நிலையில் முதல் முதலில் பென்சில்வேனியா தன்மீது துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் டிரம்ப் தற்போது மீண்டும் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறார்.

எலான் மஸ்க் விஜயம்
அவரோடு தொழிலதிபர் எலான் மஸ்கும் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் இந்த அதிபர் தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக மாறியுள்ளார். வெற்றி பெற்றால் மஸ்க்குக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் தருவேன் என்றும் டிரம்ப் உறுதியளித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்த இடத்துக்கே மீண்டும் திரும்பியுள்ள டிரம்ப் அங்கு வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

செய்தி
அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "மிகவும் எளிமையான செய்தியை வழங்க பட்லருக்கு (Butler) திரும்பி வந்துள்ளேன், நாம் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற போகிறோம், நாம் தேர்தலில் வெற்றி பெற போகிறோம் என்பது தான் அந்த செய்தி.
இங்கு என்மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் என்னையும் , உருவாக இருக்கும் மிகப்பெரிய இயக்கத்தையும் தடுக்கும் நோக்கத்துடன் இருந்தார்" என்று பேசியுள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தில் பேசிய எலான் மஸ்க், ஜனநாயக கட்சியினர் அமெரிக்க மக்களிடம் இருந்து, பேச்சுரிமையையும், ஆயுதம் வைத்து இருப்பதற்கான உரிமையையும் பறிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
- அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
- இல்லையென்றால் நான் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.
வங்கதேசத்தில் கடந்த வருடம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. அந்நாட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்தும் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரியும் மாணவர்கள் பல வாரங்களாக நடத்திய போராட்டங்கள் மற்றும் மோதல்களில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
இட ஒதுக்கீட்டை ரத்து செய்தபோதிலும் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று உறுதியாக இருந்த மாணவர்களை சமாதானப்படுத்தமுடியவில்லை. இறுதியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார். பிரதமர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அனைத்தையும் சூறையாடினர்.
தப்பிவந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார் ஷேக் ஹசீனா. அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவரை திரும்ப அனுப்ப வங்கதேசத்தில் உருவாகியுள்ள முகமது யூனுஸ் தலைமையான இடைக்கால அரசு இந்தியாவை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட தருணத்தில், தன்னையும், தனது தங்கையான ஷேக் ரெஹானாவையும் கொல்ல எதிர்கட்சியினரால் சதி நடந்ததாக 76 வயதாகும் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது மேற்கு வங்க அவாமி லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில் ஷேக் ஹசீனா பேசும் ஆடியோ உரை ஒன்று நேற்று [வெள்ளிக்கிழமை] வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆடியோவில், "ரெஹானாவும் நானும் உயிர் பிழைத்தோம் - 20-25 நிமிட இடைவெளியில் நாங்கள் மரணத்திலிருந்து தப்பித்தோம்" என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடந்த கொலை முயற்சிகளில் இருந்து தப்பிப்பிழைத்தது கடவுளின் செயல் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

2004, ஆகஸ்ட் 21 நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல், கோட்டலிபாராவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல், இறுதியில் நடந்த கொலை முயற்சியில் தப்பித்தது கடவுளின் விருப்பம். இல்லையென்றால் நான் இப்போது உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.
அவர்கள் என்னை எப்படி கொல்ல திட்டமிட்டனர் என்பதை நீங்கள் பின்னர் பார்த்தீர்கள். நான் எனது நாடு இல்லாமல் இருக்கிறேன், எனது வீடு எரிக்கப்பட்டது, நான் கஷ்டப்பட்டாலும், என்னை கடவுள் உயிருடன் வைத்திருக்க ஒரு காரணம் இருக்கும் என்று நம்புகிறேன் என கண்ணீர் குரலில் ஷேக் ஹசீனா அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.
ஆகஸ்ட் 21, 2004 அன்று டாக்கா பங்கபந்து அவென்யூவில் அவாமி லீக் ஏற்பாடு செய்த பயங்கரவாத எதிர்ப்பு பேரணியில் கையெறி குண்டுத் தாக்குதல் நடந்தது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக ஷேக் ஹசீனா, 20,000 பேர் கொண்ட கூட்டத்தில் டிரக்கின் பின்புறத்தில் இருந்து உரையாற்றி முடித்த பிறகு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஹசீனாவுக்கும் சில காயங்கள் ஏற்பட்டன.
முன்னதாக கோட்டலிபாராவில் உள்ள கல்லூரியில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூலையில், ஷேக் ஹசீனா உரையாற்ற இருந்த பகுதியில் 40 கிலோ வெடிகுண்டு மீட்கப்பட்டது.
இறுதியாக ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் 5 ஆம் தேதி புறப்படும் சமயத்தில் 20- 25 நிமிட இடைவெளியில் உயிர்தப்பியதாக கூறியுள்ளார். முந்தைய கொலை முயற்சிகளையும், கடைசியாக உயிர்தப்பிய நிகழ்வையும் ஷேக் ஹசீனா உருக்கமான முறையில் விவரித்த ஆடியோ அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.