என் மலர்
நீங்கள் தேடியது "ATM cards"
- மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள், ஏற்கனவே நிதி இல்லாமல் தவிக்கின்றனர்.
- இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல்.
வங்கிகள் மாத வரம்பிற்கு மேல் ஏடிஎம் பணம் எடுப்பதற்கு ரூ. 23 வரை வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணங்களை அதிகரிக்க வங்கிகளை அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.
இந்த முடிவை விமர்சித்து மு.க,.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.
அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.
ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- புதியதாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.
- 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் புதியதாக தேர்வு செய்யப்பட்ட 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் வழங்கினார்.
இதில் சரவணக்குமார் எம்.எல்.ஏ, மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது,
தேனி மாவட்டத்தில் 15.09.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தகுதியான பயனாளிகள் என தேர்வு செய்யப்பட்ட 2,04,281 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, அதற்கான ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு தகுதியான நபரும் விட்டுவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் இத்திட்டத்தில் விடுபட்ட நபர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கான வசதியினை ஏற்படுத்தினார்.
அதன்படி, இத்திட்டத்தில் மேல்முறையீடு செய்த பயனாளிகளின் விண்ணப்பங்கள் குழு அமைத்து, கள ஆய்வு செய்து அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு, தகுதியான மனுக்கள் என தேர்வு பெற்ற 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, அதற்கான ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டது.
மேலும், மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் விசாரணை செய்யும் பணிகள் விரைவில் முடிவடைந்து, உரிமைத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பேசினார்.
முன்னதாக முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விழாவின் நேரலை நிகழ்வினை புதியதாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுடன் அமர்ந்து நிகழ்ச்சியினை பார்வையிட்டனர்.
- விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.
- தாசில்தார் ஜெய்சிங்சிவக்குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் தனியார் திருமணமண்டபத்தில் கலைஞர் உரிமை தொகை 2-ம் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் விழா ஏற்கனவே உரிமை தொகை பெற்றவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கும் விழா பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து ெகாண்டு 1,239 மகளிருக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினர்.
விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் 604 மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கியதற்கான ஏ.டி.எம். கார்டு மற்றும் 635 மகளிருக்கு முதல்-அமைச்சரின் வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மாதம் ரூ.1000 அரசு கொடுத்திருக்கிறது என்று அலட்சியப்படுத்தாமல் இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய குடும்பத்தினுடைய நன்மைக்கும் அதன் மூலமாக இந்த நாட்டினுடைய நன்மைக்கும் பயன்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்
விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி் ஜெய்பீம், ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ராம்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாநகராட்சி பவன்குமார் கிரியப்பனவர், பல்லடம் நகர்மன்றத்தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார், அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஜெய்சிங்சிவக்குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 1068 பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அமலுக்கு வந்தது.
யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வகையில், புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யு.பி.ஐ. மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம்.
இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
விரைவு பேருந்துகளில் ஜி பே, கிரெடிட்/டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கூகுள் பே, போன் பே போன்றவற்றில் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
- நடத்துனர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது குறிப்பிட்ட பேருந்துகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பே, போன் பே போன்றவற்றில் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில், பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "அரசு பேருந்துகளில், ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை மூலம் பயணிகளுக்குப் பயண சீட்டு வழங்கும் நடத்துனர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பதே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. அதனால் பலருடைய பாக்கெட்டுகளையும் வண்ண, வண்ண கலரிலான ஏ.டி.எம். டெபிட், கிரெடிட் கார்டுகள் அலங்கரித்து வருவதை பார்க்கமுடிகிறது.

மேலும் படிப்படியாக புதிய தொழில்நுட்பத்துக்கு ஏ.டி.எம். கார்டுகள் மாற்றப்பட்டு வருவதாகவும், பழைய ஏ.டி.எம். கார்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். #ATMCard