என் மலர்
நீங்கள் தேடியது "Australian Open 2025"
- முதல் சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), நிஷேஷ் பசவரெட்டி (அமெரிக்கா) ஆகியோர் மோதினார்.
- மற்றொரு ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ், அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ ஆகியோர் மோதினர்.
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' ஆன ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), நிஷேஷ் பசவரெட்டி (அமெரிக்கா) ஆகியோர் மோதினார்.
இதில் முதல் செட்டை கோகோவிச் 4-6 என இழந்தார். அடுத்த மூன்று செட்டுகளை 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பானிஷ்) அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ (கஜகஸ்தான்) ஆகியோர் மோதினர். இதில் அல்காரஸ் 6-1, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வென்றது.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி, குரோசியாவின் இவான் டோடிக்-பிரான்சின் கிறிஸ்டினா மிலாடெனோவிச் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 12 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
- அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா- பாலா படோசா ஆகியோர் மோதினார்.
- இதில் 6-4, 6-2 என்ற கணக்கில் சபலென்கா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) - ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோதினார்.
இதில் 6-4, 6-2 என்ற கணக்கில் சபலென்கா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ் போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக் அணிகள் இன்று மோதவுள்ளனர். இதில் வெற்றி பெறும் வீராங்கனை நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்காவுடன் விளையாடுவார்கள்.