என் மலர்tooltip icon

    ஆஸ்திரேலியா

    • இந்திய அணி அக்டோபர், நவம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
    • அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் ஆடுகிறது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 19-ம் தேதி பெர்த்தில் நடக்கிறது. எஞ்சிய இரு ஒருநாள் போட்டிகள் அடிலெய்டு (அக்டோபர் 23), சிட்னியில் (அக்டோபர் 25) நடைபெறுகிறது.

    டி20 ஆட்டங்கள் கான்பெர்ரா (அக்டோபர் 29), மெல்போர்ன் (அக்டோபர் 31), ஹோபர்ட் (நவம்பர் 2), கோல்டுகோஸ்ட் (நவம்பர் 6), பிரிஸ்பேன் (நவம்பர் 8) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் ஆஸ்திரேலியா செல்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்டில் விளையாடுகிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பெர்த்தில் மார்ச் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பகல்-இரவு போட்டியாக நடைபெறுகிறது.

    • விலைவாசி உயர்வு, வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும்.
    • இந்த தேர்தல் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலியாவின் கவர்னர் சாம் மாஸ்டினை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் சென்று சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

    விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்தப் பொதுத்தேர்தல் ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2022 தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தேர்வாகினர். இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
    • இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமானது 'பார்முலா 1' பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    'பார்முலா 1' கார் பந்தயத்தின் முதல் சுற்றான ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது.

    இதில் மெக்லரன் அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 42.06 நிமிடங்களில் கடந்தார்.

    நெதர்லாந்தை சேர்ந்த வெர்ஸ்டாப்பர்ன் (ரெட்புல்) 2-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்சல் (மெர்சிடஸ்) 3-வது இடத் தையும் பிடித்தார்.

    பார்முலா 1' கார் பந்தயத்தின் 2-வது சுற்று சீனா கிராண்ட் பிரீ வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

    • 13 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 39 குற்றங்களில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
    • வன்கொடுமை செய்வதை வீடியோ பதிவு செய்ததுடன், எக்ஸெல் ஷீட்டில் அவர்களின் தோற்றத்துக்கு மதிப்பெண் கொடுத்து வந்தார்.

    ஆஸ்திரேலியாவில் 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இந்து மதத் தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத் தலைவராக அறியப்பட்டவர் பாலேஷ் தன்கர் (43). ஆஸ்திரேலியாவின் இந்து மத ஆணையத்தின் செய்தி தொடர்பாளராக செயல்பட்ட பாலேஷ் தன்கர், பாஜக கட்சியின் அந்நாட்டு குழு ஒன்றையும் உருவாக்கி நிர்வகித்து வந்தார்.

    இதற்கிடையே போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டு, வேலை தேடி வந்த பெண்களை, சிட்னியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று போதை மருந்து கொடுத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் 21 முதல் 27 வயதுக்குட்பட்ட கொரியா நாட்டினர். அவர்களை வன்கொடுமை செய்வதை வீடியோ பதிவு செய்ததுடன், எக்ஸெல் சீட் ஒன்றை உருவாக்கி அதில் அப்பெண்களின் விவரங்கள், அவர்களின் அறிவு, தோற்றம் குறித்து மதிப்பெண் அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. குற்றத்தின்போது அவர்கள் அனைவரும் மயக்க நிலையில் இருந்தனர்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு சிட்னியிலுள்ள அவரது வியாபார மையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது மயக்க மருந்துகள் மற்றும் கடிகாரத்தினுள் மறைத்து வைக்கப்பட்ட கேமரா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    2023 ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, அவர் 13 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 39 குற்றங்களில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் நேற்று (மார்ச் 07) டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம், பாலேஷ் தன்கருக்கு 40 வருட சிறை தண்டனை விதித்துள்ளது. 2053 வரை 30 ஆண்டுகளுக்கு அவருக்கு பரோல் வழங்கப்படாது என்றும் அவரது 83 வது வயதில் அவர் விடுதலை செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • 1954 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் ஹாரிசன் ரத்த தானம் கொடுக்க தொடங்கினார்.
    • தனது 81 ஆவது வயது வரை 1,173 முறை ரத்த தானம் கொடுத்து ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.

    ரத்த தானத்தின் மூலம் சுமார் 2.4 மில்லியன்(24லட்சம்) குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88) காலமானார். Man with the golden arm என அறியப்படும் ஹாரிசன் கடந்த பிப்ரவரி 17 அன்று நியூ சவுத் வேல்ஸ்சில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    1954 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் ஹாரிசன் ரத்த தானம் கொடுக்க தொடங்கினார். அன்று தொடங்கி கடந்த 2018 இல் தனது 81 ஆவது வயது வரை 1,173 முறை ரத்த தானம் கொடுத்து ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.

     

    அவரது ரத்த தானம் மூலம் உலகம் முழுவதிலும் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஹாரிசன் உடைய ரத்தத்தின் பிளாஸ்மாவில் ஆன்டி -டி (Anti-D) என்ற அரியவகை Antibody உள்ளது.

    இது பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைக்குப் பரவும் தீங்கு விளைவிக்கும் Antibody களை தடுக்கும் வல்லமை கொண்டது. 2005 முதல் கடந்த 2022 வரை அதிக ரத்த பிளாஸ்மா தானம் கொடுத்ததற்கான உலக சாதனையை ஹாரிசன் தன்வசம் வைத்திருந்தார்.

    அதன் பின் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த சாதனையை முறியடித்தார். ஜேம்ஸ் ஹாரிசன் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • இந்திய அணி ஏற்கனவே வலுவான அணியாக உள்ளது.
    • அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது கூடுதல் பலனளிக்கும் என்றார்.

    சிட்னி:

    சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு பெரும் நன்மை அளிக்கிறது.

    அவர்கள் ஏற்கனவே வலுவான அணியாக உள்ளனர். அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு கூடுதலாக பலனளிக்கும்.

    எல்லா போட்டிகளையும் அங்கு விளையாடுவதன் மூலம் அவர்கள் வெளிப்படையான பலனைப் பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    • இன்னும் இரண்டு வீரர்கள் மட்டுமே அவருக்கு மேலே இருக்கிறார்கள்.
    • உடல் தகுதி அடிப்படையில் அவர் சிறப்பாகவே இருக்கிறார் என்றார்.

    சிட்னி:

    சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். இது அவரது 51-வது சதமாகும். இந்தப் போட்டியில் விராட் கோலி 14,000 ரன்கள் கடந்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    இந்நிலையில், ரிக்கி பாண்டிங் விராட் கோலியின் ஆட்டம் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது குறித்து பேசியதாவது:

    விராட் கோலியை விட ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரரை நான் பார்த்ததே இல்லை. அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் என்னை முந்தி இருக்கிறார்.

    இன்னும் இரண்டு வீரர்கள் மட்டுமே அவருக்கு மேலே இருக்கிறார்கள். நிச்சயமாக அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக தனது பெயரை பார்க்க விரும்புவார்.

    உடல் தகுதி அடிப்படையில் அவர் சிறப்பாகவே இருக்கிறார். அதற்காக கடினமான உழைப்பை செலுத்துகிறார்.

    சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியுமா என யோசித்துப் பார்ப்பது நமக்கு விசித்திரமான உணர்வை ஏற்படுத்துகிறது.

    விராட் கோலி இத்தனை ஆண்டுகள் சிறப்பாக ஆடியும் இன்னும் சச்சினின் சாதனையை நெருங்குவதற்கு அவர் 4,000 ரன்களை குவிக்க வேண்டும்.

    இது சச்சின் எந்த அளவுக்கு சிறப்பாக ஆடி இருக்கிறார் என்பதை நமக்கு காட்டுகிறது. எத்தனை ஆண்டுகள் சச்சின் இந்த விளையாட்டை விளையாடி இருக்கிறார் என்பதை நாம் இதன்மூலம் புரிந்து கொள்ளலாம். ஆனால், விராட் கோலி போன்ற ஒருவர் இந்த சாதனையை முறியடிக்க மாட்டார் என நாம் ஒதுக்கித் தள்ளி விட முடியாது.

    விராட் கோலியிடம் பசி இருந்தால், நிச்சயமாக அவர் சச்சின் சாதனையை முறியடிக்க மாட்டார் என என்னால் சொல்ல முடியாது என தெரிவித்தார்.

    • சம்பவம் ஷெல்டன் மெக்பார்லேன் தனது ஹெல்மெட்டில் பொருத்தி இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.
    • வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் பயிற்சியாளரை பாராட்டி பதிவிட்டனர்.

    ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜோன்ஸ். 'ஸ்கை- டைவிங்' சாகசங்களில் ஈடுபடும் இவர் 4 ஆயிரம் அடி உயரத்தில் 'ஸ்கை- டைவிங்' சாகசம் செய்து காற்றில் பறந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பாதியிலேயே வலிப்பு ஏற்பட்டு மயங்கினார். இதனால் அவர் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக தரையை நோக்கி சென்றார்.

    இதை அவரது பயிற்சியாளரான ஷெல்டன் மெக்பார்லேன் என்பவர் கவனித்தார். உடனடியாக அவர் பாராசூட் ரிப் கார்டை பிடித்து இழுத்து கிறிஸ்டோபர் ஜோன்சை மீண்டும் சுய நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்தார். இதன் பயனாக கிறிஸ்டோபரை காப்பாற்ற முடிந்தது. இந்த சம்பவம் ஷெல்டன் மெக்பார்லேன் தனது ஹெல்மெட்டில் பொருத்தி இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.

    இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் பயிற்சியாளரை பாராட்டி பதிவிட்டனர். 

    • யூத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று மருத்துவ ஊழியர்கள் வீடியோ வெளியிட்டனர்.
    • இந்த வீடியோ வேதனையளிக்கும் விதமாக உள்ளது என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.

    ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு சுகாதார ஊழியர்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நோயாளிகளை கொலை செய்து விடுவதாக மிரட்டிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மருத்துவ ஊழியர்கள் வெளியிட்ட டிக் டாக் வீடியோவில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்றும் அவர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

    இந்த வீடியோ வைரலாக நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், "இந்த வீடியோ வேதனையளிக்கும் விதமாகவும், அவமானகரமானதாகவும் உள்ளது" என்று தெரிவித்தார்.

    • பறப்பதற்கு முன் விரைவான ஒரு பம்ப் என்று கூறியவாறே அவர் இன்ஜின் முன் ஏறினார்.
    • பாதுகாப்பு மீறலை தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் தங்களை பார்க்க வேண்டும் என்பதற்காக பலர் ஆபத்தான விஷயங்களை செய்து வருகின்றனர். இதனால் பல முறை உயிர்பலிகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது பாடிபில்டர் ஒருவர் ஓடும் விமான இன்ஜின் மீது ஏறி தண்டால் எடுத்த வீடியோ பரவி வருகிறது.

    பிரெஸ்லி ஜினோஸ்கி என்ற 23 வயதான பாடிபில்டர் ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் ஓடுதளத்தில் நின்றுகொண்டிருந்த விமானத்தின் ஓடும் இன்ஜின் பகுதி முன் புஷ்-அப்களை எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

    பறப்பதற்கு முன் விரைவான ஒரு பம்ப் என்று கூறியவாறே அவர் இன்ஜின் பகுதிக்கு முன் ஏறி ஆபத்தான முறையில் புஷ்-அப் எடுப்பதை பலரும் கண்டித்துள்ளனர். இந்த நிகழ்வு கடந்த ஆண்டு நடந்துள்ளது, அதை அவர் சமீபத்தில் இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.

    இதுகுறித்து பதிலளித்துள்ள சிட்னி விமான நிலையம், பாதுகாப்பு மீறலை தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகதெரிவித்துள்ளது.

    • ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த சிக்கன் உணவுக்குள் கத்தி இருந்ததாக கூறி அதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
    • வீடியோவை பார்த்த பலரும் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பதிவிட்டனர்.

    சமீப காலமாக உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமிலி என்ற பெண் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த சிக்கன் உணவுக்குள் கத்தி இருந்ததாக கூறி அதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

    வீடியோவுடன் அவரது பதிவில், சம்பவத்தன்று உள்ளூர் ஓட்டலில் சிக்கன் உணவு ஒன்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்திருந்தேன். உணவு வீட்டுக்கு வந்தவுடன் ஆர்வமாக சாப்பிட தொடங்கினேன். அப்போது, பல்லில் ஏதோ கடினமான பொருள் கடிபடுவதை உணர்ந்தேன். அது கேரட் துண்டுகளாக இருக்கலாம் என தவறாக நினைத்தேன். ஆனால் உணவை பிரித்து பார்த்தபோது அதற்குள் ஆரஞ்சு நிற கைப்பிடியுடன் கூடிய கத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என பதிவிட்டிருந்தார்.

    அவரது இந்த வீடியோவை பார்த்த பலரும் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பதிவிட்டனர்.

    • சாலையோரங்களில் நிறுத்தியிருக்கும் கார்களை கூட பனி சூழ்ந்துள்ளது.
    • சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பயனர்களை அதிர்ச்சியடைய செய்யும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், ஆஸ்திரேலியாவில் உள்ள போர்ட் ஆர்தர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் வீடுகள் முன்பும், சாலையோரங்களில் நிறுத்தியிருக்கும் கார்களை கூட பனி சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில் அங்கு ஒரு வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் கண்ணாடி தெரியாத அளவுக்கு பனி சூழ்ந்திருந்த நிலையில், பனியை அகற்றுவதற்காக ஒரு வாலிபர் 3 மாத கைக்குழந்தையை பயன்படுத்திய காட்சிகள் உள்ளது. அந்த வாலிபர் தனது காரின் கண்ணாடியில் இருந்த பனியை துடைப்பதற்காக 3 மாத குழந்தையை கருவி போல பயன்படுத்தி பனியை அகற்றும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

    டிக்-டாக் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த வாலிபரின் செயலை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×