என் மலர்
நீங்கள் தேடியது "Avinashi Temple"
- கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், உபயதாரர் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
- ரூ. 1.62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்ய பாலாலய ஹோம பூஜைகள் நடைபெற்றது.
அவிநாசி:
அவிநாசி கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இதற்கு அச்சாரமாக, அரசமரத்து விநாயகருக்கு முதலில் திருப்பணி செய்ய இந்து அறநிலையத்துறையினர் முடிவெடுத்தனர். இதனால் ரூ. 1.62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி செய்ய பாலாலய ஹோம பூஜைகள் நடைபெற்றது.
சிவக்குமார சிவம், தியாகராஜ சிவம் உட்பட கோவில் சிவாச்சாரியார்கள் வாஸ்து ஹோமம், கணபதி ஹோமம் உட்பட பூஜை செய்து, பாலாலயம் செய்து வைத்தனர். கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், உபயதாரர் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
- ராஜராஜ சோழனின்,1037ம் ஐப்பசி சதய திருவிழாவை முன்னிட்டு தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது.
- 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
அவிநாசி :
அவிநாசி கோவிலில் தேவாரத்தை மீட்டெடுத்த திருமுறை கண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின், 1037ம் ஐப்பசி சதய திருவிழாவை முன்னிட்டு தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது.
அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த விழாவில், தேவார திருப்பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. பழநி சண்முகசுந்தர தேசிகர் மற்றும் கரூர் குமார சாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் பங்கேற்று தேவாரம், திருமுறை விண்ணப்பம் செய்தனர்.
முன்னதாக கோவில் உள்பிரகாரத்தில் உள்ள, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. அவிநாசி கோவிலை சேர்ந்த ஆரூர சுப்ரமண்ய சிவாச்சார்யார், நானிலம் போற்றும் நால்வரின் பெருமைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
சிவக்குமார் சிவாச்சார்யார் தலைமையில், பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் தலைமையில் , கோவில் ஓதுவாமூர்த்தி சிவசங்கர் மற்றும் பலர் செய்திருந்தனர்.
- கோவில் உள்பிரகாரத் பூக்களால் புஸ்பாஞ்சலி பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசியில் வாசி அவினாசி என்ற சிறப்புவாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் தர்மசாஸ்தா காசி யாத்திரை குழு சார்பாக அவினாசிலிங்கேசுவரர் கோவில் சிவாச்சாரியார் ஆரூர் சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கங்கை நீர் எடுத்து வந்து 108 வலம்புரி சங்குபூஜை நடந்தது.
முன்னதாக கோவில் உள்பிரகார கொடிகம்பம் முதல் சுவாமி சன்னதி வரை செவ்வந்தி கம்பங்கி, மருகு, மரிக்கொழுந்து, தாமரை மல்லி, முல்லை உள்ளிட்ட பல்வேறு பூக்களால் புஸ்பாஞ்சலி பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு ஆராதனை, வழிபாடுகள் நடந்தது. இதில் அவினாசி திருப்பூர், பூண்டி, சேவூர்,உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- தமிழகத்தில் 3-வது பெரிய தேரான அவினாசி கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும்.
- 14 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கோவில் கோபுரங்கள் மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும் முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம்பாடி உயிருடன் மீட்டெடுத்த வரலாற்று சிறப்புமிக்கதாகவும் பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது. அவினாசியப்பருக்கு ஏழுநிலை கோபுரமும், கருணாம்பிகை அம்மனுக்கு ஐந்து நிலை கோபுரமும் கலைநயத்துடன் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3-வது பெரிய தேரான அவினாசி கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். இக்கோவிலுக்குசாமிதரிசனம் செய்வதற்காக தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும், கர்நாடகா கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.
இவ்வாறு பல சிறப்பு பெற்ற இக்கோவிலில். கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கோவில் கோபுரங்கள் மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது. ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
வரலாற்று சிறப்புமிக்க அவினாசிலிங்கேசுவரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்து அறநிலையத்துறையினருக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்த நிலையில் கடந்த ஜூலை மாதம் கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தி கும்பாபிஷேக ஏற்பாடுகள் விரைந்து செய்வதென முடிவு செய்தனர். ஆனால் பல மாதங்களாகியும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான எந்த வேலையும் நடைபெறாதது வருத்தமளிக்கிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆகாசராயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேரத்திகடன் செலுத்துவதற்காக ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அவினாசி அருகே உள்ள ராயம்பாளையம் மற்றும் கருணை பாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து பக்தர்கள் அழகிய மண்குதிரைகளை சுமந்துவந்து இக்கோவிலில் வைத்து வழிபடுவார்கள். மேலும் ஏராளமானோர் தங்களது குழந்தைகளுக்கு இங்கு முடி எடுத்து காதுகுத்தி, கிடாய் வெட்டி விஷேசம் செய்வது ஆண்டாண்டுகாலமாய் நடந்துவருகிறது. பழமை வாய்ந்த இக்கோவில் பல பகுதிகளில் பழுதடைந்தும்சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டு சாய்ந்த நிலையில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் இக்கோவில் திருப்பணிகள் செய்து இதற்கும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாக தரப்பில் கூறுகையில், கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பிஅனுமதி கேட்கப்பட்டு அதற்கு அரசிடம் இருந்து அனுமதியும் கிடைத்துள்ளது. இருப்பினும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பராமரிப்பு பணிகள் மற்றும் கும்பாபிஷேக பணிகளுக்கு செலவினம் அதிகம் தேவைப்படுவதால் உபயதாரர்களுக்காக எதிர்பார்ப்பில் உள்ளது. அதற்கு உண்டான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடியவிரைவில் கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
- அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் தீபம் ஏற்றும் திருவிழா நடந்தது.
- கடந்த ஒருவாரமாக கோவில் வளாகம் முழுவதும் தூய்மைபடுத்தும் பணி நடந்தது.
அவினாசி :
அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் கடந்த 2015ம் ஆண்டு லட்சத்து எட்டு தீபம் ஏற்றும் திருவிழா நடந்தது.இதையடுத்து இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் அறநிலையத்துறை ஒத்துழைப்புடன். இரண்டாம் முறையாக லட்சத்து எட்டு தீபத் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த ஒருவாரமாக கோவில் வளாகம் முழுவதும் தூய்மைபடுத்தும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் ,சமூக ஆர்வலர்கள், வழிபாட்டு குழுவினர் திரளானோர் ஆர்வமுடன் கோவில் பணிகளில் ஈடுபட்டனர். விருந்தாச்சலத்திலிருந்து லட்சத்து எட்டு அகல்விளக்குகள் கொண்டுவரப்பட்டது. தீபத்திருவிழாவிற்காக ஏராளமானோர் எண்ணை, திரி ஆசியவற்றை வழங்கினர். லட்சத்து எட்டு விளக்குகளில் பெண்கள் உள்ளிட்ட பலர் எண்ணை ஊற்றினர்.
இதையடுத்து கோவில் சபா மண்டபம், திருக்கல்யாண உற்சவம் மண்டபம், கனகசபை கோயில்பிரகாரங்கள், தீபஸ்தம்பம், நடராசர் சன்னதி, அம்மன் சன்னதி. உள்பிரகார வழிநெடுகிலும் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட கோவில் வளாகம் முழுவதும், லிங்க வடிவம், நந்தி வடிவம் விளக்கு , வேல் உள்ளிட்ட பலவடிவங்களில் தீபம் பிரகாசித்து ஒளிர்ந்தது பக்தர்களை மிகவும் கவர்ந்தது.
லட்சத்து எட்டு தீப திருவிழாவை காண அவினாசி,தெக்கலூர், கருவலூர், பழங்கரை, சேவூர், அன்னூர், திருமுருகன்பூண்டி, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் திரண்டனர்.முன்னதாக கோவை கவுமார மடாலய ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.இதையடுத்து கோவில் முன் | உள்ள தீபஸ்தம்பத்தில் கோவில் அர்ச்சகர் தீபம் ஏற்றிவைத்தார்.
- காசிக்கு நிகரான கோவில் என்ற பல்வேறு சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
- கற்பகவிருட்ச வாகனம் கோவிலில் புறப்பட்டு நான்கு ரதவீதிவழியாக வலம் வந்தது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரான கோவில் என்ற பல்வேறு சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
இந்தநிலையில் கருணாம்பிகா டிரஸ்ட் சார்பாக அவினாசிலிங்கேசுவரருக்கு இலுப்பை, அத்தி, மாவுலிங்கம் ஆகிய மரங்களினால் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மரத்தினால் மயில், கிளி, அன்னப்பறவை, மற்றும் வாழை, மாதுளை, பலா, ஆப்பிள், திராட்சை உள்ளிட்ட கனிவகைகளுடன் கூடிய புதிதாக கற்பகவிருட்ச வாகனம் கலைநயத்துடன் நேர்த்தியாக அமைக்கப்பட்டது. இந்த புதிய கற்பகவிருட்ச வாகனத்தின் பாலாலயம் மற்றும் வெள்ளோட்ட நிகழ்ச்சி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் நடந்தது. கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சாமிகள், அவினாசி காமாட்சி தாச சாமிகள் ஆகியோர் தலைமையில் நடந்த கற்பகவிருட்ச வாகன வெள்ளோட்டத்திற்கு செங்குந்த ஹோத்ரம் கருணாம்பிகை அம்மன் டிரஸ்ட் தலைவர் ஆண்டவர் ராமசாமி, செயலாளர் குமரேசன், பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கற்பகவிருட்ச வாகனம் கோவிலில் புறப்பட்டு நான்கு ரதவீதிவழியாக வலம் வந்தது. இதில் திரளான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இது குறித்து கருணாம்பிகா டிரஸ்ட் தலைவர் ஆண்டவர் ராமசாமி கூறுைகயில், கடந்த 40 ஆண்டுகளாக அவினாசிலிங்கேசுவரர் தேர்த்திருவிழா நிகழ்ச்சியின்போது டிரஸ்ட் மூலம் கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் சாமிகளுடன் கற்பகவிருட்ச வாகனம் ரதவீதிகள் வழியாக வலம்வரும். இதற்கு முன்பு இருந்த கற்பகவிருட்ச வாகனம் பழுதடைந்துபோனதால் டிரஸ்ட் மூலம் புதிதாக கற்பக விருட்ச வாகனம் வடிவமைக்கப்பட்டு தற்போது வெள்ளோட்ட நிகழ்ச்சி நடந்துள்ளது.
- கோபுரத்துக்கு வர்ணம் தீட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவை ராமானந்தா அடிகளார் அறக்கட்டளையினர் முன்வந்துள்ளனர்.
- திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெறும்.
அவிநாசி ூ
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த அம்மன் ராஜகோபுரம் பாலாயம் செய்யப்ப ட்டுள்ளது. கோபுரத்துக்கு வர்ணம் தீட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவை ராமானந்தா அடிகளார் அறக்கட்ட ளையினர் முன்வந்து ள்ளனர்.
இதனால் அம்மன் ராஜகோபுரத்துக்கு மூங்கில் சாரம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெறும் என செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் தெரிவித்தார்.
- கருணாம்பிகை அம்மனுடன், லிங்கேஸ்வரர் எழுந்தருளினார்.
- சிவாச்சார்யார்கள் வேதபாராயணம் செய்ய உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
அவிநாசி :
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், தல வரலாற்றில் இடம் பெற்ற முதலை வாய்ப்பிள்ளை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, கோவில் திருக்கல்யாண உற்சவ மண்டபத்தில், கருணாம்பிகை அம்மனுடன், லிங்கேஸ்வரர் எழுந்தருளினார்.
ஓதுவா மூர்த்திகள், அவிநாசி தேவாரம் பாட, சிவாச்சார்யார்கள் வேத பாராயணம் செய்ய முதலை வாய்ப்பிள்ளை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது இந்தக் கோவில் தேர்.
- ஷெட்டை பிரிக்கும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடந்தது.
அவிநாசி :
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேரோட்டம் வருகிற 25ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்றது இந்தக் கோவில் தேர். கோவில் வளாகத்தில் தகர ஷெட்டால் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ள தேரை தயார்படுத்து வதற்காக ஷெட்டை பிரிக்கும் பணிகள் கடந்த இரு நாட்களாக நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் தேர் விழாவிற்கான முகூர்த்த ஆயக்கால் பூஜை நடந்தது.
செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் கூறிய போது,தொடர்ந்து தேரை தயார்படுத்தி அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெறும் என்றார்.
- அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற 25ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்குகிறது.
- மே 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கிறது.
அவினாசி :
அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு தேரோட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று தாலுகா அலுவலகத்தில நடந்தது.திருப்பூர் மாவட்டம் அவினாசியில் ஏழு கொங்கு சிவாலயங்களில் முதன்மை பெற்ற கோவில், காசிக்கு நிகரான கோவில் என்ற பெருமை பெற்றதும், தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் உடையது என பல்வேறு சிறப்புகள் பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற 25ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன்தேர் திருவிழா தொடங்குகிறது. மே 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கிறது.விழாவை முன்னிட்டு தேரோட்டம் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அவினாசி தாலுக்கா அலுவலகத்தில் சப் கலெக்டர்.ஸ்ருதன் ஜெயநாராயணன் தலைமையில் நடந்தது. இதில்பொதுப்பணித்துறை, மின்வாரியம் , காவல்துறை, நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சி துறை ,உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேரோட்டத்தின் போது தேரோடும் பாதையில் மின் வினியோகத்தை துண்டிப்பு செய்ய வேண்டும்,தேரோட்டம் முடியும் வரை பாதுகாப்புக்கு பணியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும், தேரோடும் பாதையில் வருவாய் துறையின்மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் பொழுதுஉடனிருந்து தக்க உதவிகளை செய்ய வேண்டும், தேரோடும் போது தேரின் சக்கரத்திற்கு அருகில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் வராமல் இருப்பதற்கு தகுந்த அறிவிப்பினை அவ்வப்போது ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்க வேண்டும்.
பக்தர்கள் எவரும் தேருக்கு அருகில் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேரோட்டத்தின் போது தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு ஒலி எழுப்புதல், தேரோடும் சாலையில் வண்டிகளில் உணவு வைத்து விநியோகம் செய்வது தடுக்கப்பட வேண்டும்,மீட்பு பணிகள் துறை தீயணைப்பு ஊர்தியுடன் வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தேரோட்டத்தின் போது சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் .அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கிட ஏதுவாக மூன்று அவசர ஊர்திகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேரோட்ட சாலைகளில் வேகத்தடைகள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேரோடும் சாலைகளின் குறுக்கே செல்லும் கேபிள் வயர்கள் போன்ற அனைத்து கம்பிகளையும் அப்புறப்படுத்த வேண்டும், குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிவறைகள் அமைக்க வேண்டும்,தனி நபர்களால் வழங்கப்படும் அன்னதானம் தரமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
- கோவில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- கோவில் சுற்றுப்பிரகாரம், பிரகார மேடை ஆகிய வற்றில் உள்ள குப்பைகளை அகற்றினா்.
அவினாசி :
அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் தோ்த்திருவிழாவை முன்னிட்டு சிவனடியாா்கள் சாா்பில் உழவாரப்பணி நடைபெற்றது.கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலி ங்கேஸ்வரா் கோவில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை யொட்டி, சிவனடியாா்கள் கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டனா். கோவில் சுற்றுப்பிரகாரம், தளம், பிரகார மேடை ஆகிய வற்றில் உள்ள குப்பைகளை அகற்றினா். இதையடுத்து பட்டி அரசமர விநாயகா், அவிநாசி லிங்கேஸ்வரா், கருணாம்பிகையம்மன், முருகன், விநாயகா் , சண்டிகேஸ்வரா், காலபைரவா் கோவில்கள், அா்த்தமண்டபம், கனகசபை, மகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தினா்.
இதைத்தொடா்ந்து மூலவா், உற்சவமூா்த்தி, பஞ்சலிங்கம், நந்திதேவா், கொடிக்கம்பம், பலிபீடம் ஆகியவற்றையும் கழுவி தூய்மைப்படுத்தினா். சுவாமிக்கு அணிவி க்கக்கூடிய அனைத்து வஸ்திரங்களையும் சலவை செய்து உலரவைத்து தூய்மை செய்தனா். உழவா ரப்பணியில் பெண்கள் உள்பட 100 க்கும் மேற்ப ட்டோா் பங்கேற்றனா். பிறகு தெப்பக்குளத்தையும் சுத்தம் செய்தனா். மதியம் அவிநாசி லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனைகள் நடைபெற்றன. நிறைவாக சிவனடியாா்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பஞ்சபுராணத்துடன் அனைவரும் கூட்டு பிராா்த்தனை செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- திருமுருகநாத சுவாமி, அணைப்புதூரில் உள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளினார்.
- அபிஷேகம், அலங்காரம் ஆகியவை திருமுருகநாத சாமிக்கு நடைபெற்றது.
அவிநாசி :
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு திருமுருகநாதர் வருகை நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.இதையொட்டி திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி, அணைப்புதூரில் உள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளினார்.
அபிஷேகம், அலங்காரம் ஆகியவை திருமுருகநாத சாமிக்கு நடைபெற்றது. தொடர்ந்து அவிநாசி போஸ்ட் ஆபீஸ் வீதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஸ்ரீசந்திரசேகர சுவாமி, திருமுருகநாதரை எதிர்கொண்டு அழைக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.தொடர்ந்து பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள ஊமையஞ் செட்டியார் தண்ணீர் பந்தல் மண்டபத்தில் கட்டளைதாரர்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் திருமுருகநாத சுவாமி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்தார்.