search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balakrishna"

    துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சந்தியா தனது காதல் கணவரான பாலகிருஷ்ணன் பெயரை நெஞ்சில் பச்சை குத்தியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Sandhya #Balakrishnan
    சென்னை:

    துணை நடிகை சந்தியாவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் கைதாகி இருக்கும் கணவர் பாலகிருஷ்ணன் மனைவி சந்தியா தன் மீது எவ்வளவு காதலுடன் இருந்தார் என்பது பற்றிய தகவலை நண்பர்கள் வட்டாரத்தில் வெளியிட்டுள்ளார்.

    சந்தியாவும் நானும் உயிருக்கு உயிராக காதலித்துதான் திருமணம் செய்துகொண்டோம். அந்த காதல் கொலை செய்யும் நாள் வரை குறையவே இல்லை. என் மீதுகொண்ட அளவு கடந்த காதலால் என்னை எந்த சூழ்நிலையிலும் மறக்க கூடாது என்று உடலில் 3 இடங்களில் பச்சை குத்திக்கொண்டார்.

    முக்கியமாக அவர் வலது நெஞ்சில் என் பெயரை குத்திக் கொண்ட போது வலியால் துடித்தார். அதை பார்த்து நானே அழுது விட்டேன். ஆனால் அவர் பிடிவாதமாக குத்திக் கொண்டார். எங்களுக்கு சிவனை மிகவும் பிடிக்கும். தினமும் வணங்குவோம். அதனால் சிவன் பார்வதியை வலது கையில் பச்சை குத்திக்கொண்டார். சிவன் பார்வதி போல நாங்கள் வாழ வேண்டும் என்று இருவருமே ஆசைப்பட்டோம்.

    நான் அவளுக்காகவும் குழந்தைகளுக்காகவும் மிகவும் கஷ்டப்பட்டேன். சினிமா வாய்ப்பு இல்லாததால் பிரியாணி கடை வைத்தேன். அதன் பின்னர் தான் டைரக்டர் ஆனேன். என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த புதுமுகங்களுக்கு அந்த படத்தில் வாய்ப்பு கொடுத்தேன். சமீபத்தில் தான் என்னுடைய பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிட்டு மீண்டும் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். இந்த நேரத்தில் இப்படி நடந்துவிட்டது.

    இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.



    சந்தியாவின் உடலை துண்டித்தபோது பாலகிருஷ்ணன் முதலில் வலது கையை தான் துண்டித்துள்ளார். தன்னை காதலிப்பதற்காக பச்சை குத்திக்கொண்ட வலது கையை முதலில் துண்டிக்க காரணம் சந்தியா செய்த துரோகத்தால் அவர்மீது ஏற்பட்ட வெறுப்புதான் என்கிறார்கள்.

    இதற்கிடையே சந்தியாவின் தலையையும் இடது கையோடு கூடிய உடல்பாகங்களை தேடும் பணியில் 20 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இரவு பகலாய் தேடி வருகிறார்கள். பெருங்குடி குப்பை கிடங்கை தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் குப்பை சேமிப்பு நிலையத்திலும் தேடுதல் வேட்டை நடக்கிறது.

    பெருங்குடியில் 20 அடி உயர குப்பையில் 15 அடி வரை தோண்டி தேடிவிட்டார்கள். தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் டைசன் நாய்க்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து இதற்காக பெங்களூருவில் இருந்து இன்னொரு மோப்ப நாய் வரவைக்கப்பட உள்ளது.

    துணை நடிகை சந்தியாவின் தாயார் பிரசன்னகுமாரி மற்றும் உறவினர்கள் நாகர்கோவில் அருகே உள்ள ஞாலம் பகுதியில் வசித்து வருகிறார்கள். மகள் சாவு குறித்து பிரசன்னகுமாரி கூறியதாவது:-

    கொடூரமான முறையில் எனது மகள் கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது உடலின் சில பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. கிட்னி, இதயம், கண் போன்ற முக்கிய பாகங்கள் கிடைக்கவில்லை. அவரது உடல் உறுப்புகள் திருடி விற்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. இந்த கொலையில் பாலகிருஷ்ணனுக்கு மட்டும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.

    எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். எனது மகள் சாவிற்கு நியாயம் கிடைக்கவேண்டும்.

    இவ்வாறு பிரசன்னகுமாரி கண்ணீர் மல்க கூறினார். #Sandhya #Balakrishnan
    சேலம் பசுமை வழி சாலை விவசாயிகள் கறுப்பு கொடி போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #GreenWayRoad

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலத்திலிருந்து சென்னைக்கு பசுமை வழிச் சாலை என்ற பெயரில் புதிதாக ஒரு சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 10,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட இருக்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

    சாலைக்காக விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 6000 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. விவசாயிகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், ஏரிகள், குளங்கள் என நீராதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட இருக்கிறது. சுமார் 1000 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகள் உட்பட இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும்.

    ஆயிரக்கணக்கானோர் தங்களின் குடியிருப்புகளை இழந்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

     


    ஆனால், அரசு போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவி மிரட்டுவது, அச்சுறுத்துவது, பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய சட்டவிரோத அணுகு முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    தமிழக அரசின் அடக்கு முறையைக் கண்டித்தும், லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் பசுமைச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாளை (26-ந் தேதி) காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் நலன் காக்க நடைபெறும் இப்போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GreenWayRoad

    ×