என் மலர்
நீங்கள் தேடியது "Balkuta"
- அம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.
- இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன்பட்டியில் காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 7-ம் நாளான இன்று கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
முன்னதாக விநாயகர் கோவிலில் குழுமிய பக்தர்கள் அங்கிருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.