என் மலர்
நீங்கள் தேடியது "ball tampering"
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- சென்னை அணி பந்து வீசும் போது பால் டேம்பரிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் ஜெயித்த சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 19.1 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சென்னை அணி பந்து வீசும் போது பால் டேம்பரிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கலீல் அகமது தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை கேப்டன் ருதுராஜ் கையில் கொடுப்பார். அதனை வாங்கி கொண்ட ருதுராஜ், மறைத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்வார்.
இந்த வீடியோவை வைத்து மும்பை ரசிகர்கள் உள்பட ஐபிஎல் ரசிகர்கள் சென்னை அணி பால் டேம்பரிங் செய்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சூதாட்டத்தில் சிக்கியதாக 2 ஆண்டு சிஎஸ்கே அணி விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் பால் டேம்பரிங் செய்ததாக பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
- தலைமை பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
- பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார்.
டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தலைமை பதவி வகிப்பதற்கான தடை நீக்கப்பட்டு விட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு பால்-டாம்பரிங் (பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்துவது) குற்றச்சாட்டில் சிக்கியதை அடுத்து டேவிட் வார்னர் தலைமை பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக மூன்று பேர் அடங்கிய அமர்வு, தடை நீக்கப்படுவதற்கான அனைத்து விதிளையும் டேவிட் வார்னர் பூர்த்தி செய்துள்ளதால் தடை நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், வார்னர் மரியாதை மற்றும் வருத்தம் தெரிவித்ததாக அமர்வு தெரிவித்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் டேவிட் வார்னர் இனி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தலைமை வகிக்க முடியும். இதில் அவர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக செயல்படலாம்.
மூன்று பேரின் தடைக்காலம் 9 மாதங்கள் நிறைவந்து விட்டன. ரசிகர்கள் பால் டேம்பரிங் சம்பவத்தை ஓரளவிற்கு மறந்து விட்டனர். ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான தொடருக்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் பேட்டி பாக்ஸ் கிரிக்கெட் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரம் ரிக்கி பாண்டிங்கை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘ஒரு முழுமையான பத்திரிகையின் அணுகுமுறையில் இருந்து, ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் பேட்டி ஒளிபரப்பப்பட்டதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியும். இன்று ஏராளமான மக்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாளை அவர்கள் இதுகுறித்த செய்தியை படிப்பார்கள். என்ன நடக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.
இது வீரர்கள் அல்லது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு எப்படி மகிழ்ச்சியாக இருக்கும் என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியாது. இன்றைய பாக்சிங் டே டெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் சிறப்பான தருணம். ஆகவே, இந்த பேட்டி எப்படி எதிரொலிக்கப்போகிறது என்று பார்ப்போம்.
பேட்டியின் சில தலைப்புகளை பார்த்தேன். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. சில விஷயங்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. கேப் டவுனில் என்ன நடந்து என்பதை கடந்த 9 மாதங்களாக நாம் பெரிய அளவில் விவாதித்து விட்டோம். தற்போது இந்த செய்தி வெளிவந்துள்ளது. நாளைய செய்தி பேப்பரில் எப்படி எழுதப்போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்’’ என்றார்.
இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.
இந்த விவகாரத்திற்குப் பிறகு முதன்முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது ‘‘நான் பால் டேம்பரிங் விவகாரத்தை தடுத்திருக்கலாம். கேப்டன் பொறுப்பில் தோல்வியடைந்து விட்டேன்’’ என்று கூறினார்.

இந்நிலையில் துணைக்கேப்டனாக இருந்த வார்னர்தான் பந்தை சேதப்படுத்தும்படி என்னைத் துண்டினார் என்று பான் கிராப்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பான் கிராப்ட் கூறுகையில் ‘‘நாங்கள் பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது வார்னர் என்னிடம் வந்து பந்தை சேதப்படுத்தும்படி கூறினார். அது நல்லதா? என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நான் இளம் வீரர் என்பதால் அணியில் தன்னுடைய மதிப்பு என்ன என்பதை யோசிக்க வேண்டியிருந்தது.
சீனியர் வீரர்களிடம் இருந்து மரியாதை பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. மேலும் தவறுக்காக மிகப்பெரிய விலைக்கொடுக்க போகிறோம் என்பதையும் உணர்ந்திருந்தேன்’’ என்றார்.
இந்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. முக்கிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால் ஆஸ்திரேலியா அணி திணறி வருகிறது.
உட்சக்கட்டமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பால் டேம்பரிங் தனித்துவிடப்பட்ட விஷயம் அல்ல. எனது காலக்கட்டத்தில் இதுபோன்று நடக்கவே நடக்காது என்று ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் லேங்கர் கூறுகையில் ‘‘விளையாட்டு நடந்த கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் உப்பத்தாளை (sandpaper) என்படி எடுத்தார்கள் என்பதை ஒரு நொடி என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. எனக்கு தெரிந்த வகையில் பால் டேம்பரிங் என்பது உலகளவில் இருந்து கொண்டு வருகிறது. இது மிகவும் கவலைத்தரக்கூடிய விஷயம். குறிப்பாக ஆடுகளம் பந்து வீச்சுக்கு எடுபடாத நிலையில்தான் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுகிறது’’ என்றார்.
ஒருபக்கம் தடைவிதித்தாலும் மறுபக்கம் அவர்களுடைய தண்டனையை திரும்பப் பெற வேண்டும் என்று வலுயுறுத்தப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதை நிராகரித்தது.

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியதிற்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது டேவிட் பீவெர் 2-வது முறையாக சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் டேவிட் பீவெர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இயர்ல் எட்டிங்ஸ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் சர்வதேச போட்டியிலும், ஐபிஎல் தொடரில் வார்னர் பங்கேற்கவில்லை. அதன்பிறகு வெளிநாட்டில் நடைபெறும் லீக்கிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகவும் குறைந்த லெவல் தொடரிலும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.

சமீபத்தில் கனடா சென்று கனடா குளோபல் டி20 லீக் தொடரில் விளையாடினார். இந்நிலையில் இன்று முதன்முறையாக தடைக்குப்பின் சொந்த மண்ணில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் வார்னர் கலந்து கொண்டு விளையாடினார்.
டார்வினில் ஸ்ட்ரைக் லீக் தொடர் நடைபெறுகிறது. இதில் சிட்டி சைகுளோன் அணிக்காக விளையாடி 32 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார். ‘‘நான் இங்கு கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறேன். அதை நான் விரும் செய்துகிறேன்’’ என்றார்.
அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டியின்போது இலங்கை கேப்டன் சண்டிமல் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் சண்டிமலுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் பந்தை சேதப்படுத்தும் வீரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான விதிமுறையை தெளிவாக வகுக்க வேண்டும் என்றும் முன்னணி வீரர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இந்நிலையில் ஐசிசியின் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பந்தை சேதப்படுத்தினால், குற்றத்திற்கான லெவல் 4-ன் கீழ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டது. இதனால் இனிமேல் பந்தை சேதப்படுத்திய விவகாரம் நிரூபிக்கப்பட்டால் 6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படும்.

ஆனால், தரம்குறைந்த உள்ளூர் போட்டிகளிலும், வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கிலும் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னணி பேட்ஸ்மேன்களான இவர்கள் இருவரும், பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ், மிட்டிசெல் மார்ஷ் ஆகியோர் இல்லாமல் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் தடுமாறி வருகிறது.
எப்போதும் இல்லாத அளவிற்கு 34 ஆண்டுகளுக்குப் பிறகு 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. அத்துடன் 481 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான உலக சாதனையை தன்வசமாக்கியுள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இடம்பிடிப்பதில் சிக்கல் இருக்காது என மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘தற்போது வரை இதுகுறித்து பேசுவது கடினம்தான். ஆனால், தரமான வீரர்கள் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறுவார்கள் என்பதை நீங்கள் சொல்லனும். அணியின் வளர்ச்சிக்கு அவர்கள் எல்லாவற்றையும் சரியாக செய்வார்கள். அவர்கள் சிறந்த டச் உடன்தான் இருக்கிறார்கள். அதேபோல் நல்ல உடற்தகுதியுடன் உள்ளனர். காயம் குறித்த எந்த கவலையும் கொள்ள வேண்டியதில்லை. எல்லாவற்றிலும் சரியாக இருந்தும், தரமான வீரர்கள் என்பதால் நேராக உள்ளே வருவது குறித்து யோசிக்க வேண்டும்.
நீண்ட காலமாக அவர்கள் இருவரும் சிறந்த வீரர்களாக இருந்துள்ளனர். கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்தை பிடித்ததுடன், ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரராகவும் இருந்துள்ளனர். அவர்கள் மீண்டும் அணிக்க திரும்ப எல்லா வழிகளும் உள்ளது என்று நினைக்கிறேன்’’ என்றார்.
2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டத்திற்கு இலங்கை வீரர்கள் களம் இறங்க தயாராக இருந்த நிலையில், போட்டி நடுவர்கள் இலங்கை நிர்வாகத்திடம் 2-வது நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி (கேப்டன் சண்டிமல்) பந்தை சேதப்படுத்தியுள்ளது. இதனால் வேறு பந்துடன் நீங்கள் பந்து வீச வேண்டும் என்று கூறினார்கள்.
இதற்கு இலங்கை அணி கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் களம் இறங்க மறுத்துவிட்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இலங்கை வீரர்கள் களம் இறங்கினார்கள். சண்டிமல் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக போட்டி நடுவர் அவருக்கு 100 சதவிகித அபாரத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தார். இதை எதிர்த்து சண்டிமல் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில் 3-வது நாள் காலையில் ஒன்றரை மணி நேரம் களம் இறங்காதது ஐசிசியின் விதிமுறையை கடுமையாக மீறியதாக மூன்று பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த மைக்கேல் பெலோஃப்-ஐ ஐசிசி அறிவித்துள்ளது. இவர் விசாரணை முடிவில் தண்டனை வழங்குவார்கள். இவர்கள் செய்த குற்றம் ஐசிசியின் லெவல் 3 அபாரதத்திற்குள் வருவதால், இரண்டு முதல் நான்கு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அல்லது நான்கில் இருந்து 8 ஒருநாள் போட்டியில் விளையாட தடைவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
