என் மலர்
நீங்கள் தேடியது "bank fraud case"
- வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது.
- முக்கிய குற்றவாளியான வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தாவை கைது செய்தனர்.
மும்பை:
மும்பையை சேர்ந்த நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் ரூ.122 கோடி மோசடி நடந்தது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது. மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்து பணத்தை எடுத்து கட்டுமான அதிபர், தொழில் அதிபர் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்த முக்கிய குற்றவாளியான வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தாவை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள வங்கியின் முன்னாள் தலைவர் ஹிதேன் பானு, அவரது மனைவி கவுரி பானுவை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே முக்கிய குற்றவாளியான ஹிதேஷ் மேத்தாவுக்கு போலீசார் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டனர் இந்த சோதனையில் போதுமான அளவு வழக்கு தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து போலீசார் அவருக்கு 'பிரைன் மேப்பிங்' சோதனை மேற்கொள்ள உள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் ஹிதேஷ் மேத்தாவுக்கு 'பிரைன் மேப்பிங்' சோதனை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம். அதுதொடர்பான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏற்கனவே அவருக்கு தடயவியல், உளவியல் சோதனைகள் மேற்கொள்ள கோர்ட்டு அனுமதி அளித்துவிட்டது" என்றார்.
- ஹிமேஷ் என்பவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை செய்து வருகின்றனர்.
- வங்கி அதிகாரிகளான குருமூர்த்தி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் 2 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சூளைமேடு பஜனை கோவில் இரண்டாவது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் ஹிமேஷ் என்பவரது வீட்டில் 5 சி.பி.ஐ. அதிகாரிகள் காலை 8.30 மணியில் இருந்து சோதனை நடத்தி விசாரணை செய்து வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் கார்டன் இரண்டாவது குறுக்கு தெருவில் உள்ள வாடகை வீட்டில் 6 மாதங்களாக வசித்து வரும் வங்கி அதிகாரிகளான குருமூர்த்தி அவரது மனைவி உமா சங்கரி வீட்டில் சி.பி.ஐ. 6 அதிகாரிகள் பலர் காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
- கடன் பெற்று மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- புனே காண்டிராக்டர் வீட்டில் இருந்து ஹெலிகாப்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை:
17 வங்கிகள் கூட்டமைப்பை ஏமாற்றி ரூ.34,615 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் கபில் வதாவன், இயக்குனர் தீபக் வதாவன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த மோசடி பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் தொடர்பாக பல்வேறு இடங்களிலும் கடந்த சில நாட்களாக சி.பி.ஐ. சோதனை நடத்திவருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் புனேயில் அவினாஷ் போசாலே என்ற பிரபல காண்டிராக்டரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஹெலிகாப்டரை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குஜராத்தை சேர்ந்த முன்னணி மருந்து நிறுவனம் ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட். ரூ.8 ஆயிரத்து 100 கோடி வங்கிக்கடன் மோசடி செய்தது தொடர்பாக, அந்த நிறுவனத்தின் அதிபர்கள் நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, சேத்தன் குமார், தீப்தி சேத்தன், ஹிதேஷ்குமார் நரேந்திரபாய் படேல் ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்தது.
டெல்லியில் உள்ள கூடுதல் செசன்சு கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் சில சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. கோர்ட்டு, காலவரையற்ற பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி கோர்ட்டில் நீதிபதி சதீஷ் குமார் அரோரா முன்பு நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல் நிதேஷ் ராணா கூறியதாவது:-
ஸ்டெர்லிங் நிறுவன அதிபர்கள் 4 பேரும் இத்தாலி மற்றும் நைஜீரியாவில் பதுங்கி இருக்கிறார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப அடிக்கடி நாட்டை மாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்‘ பிறப்பிக்க சர்வதேச போலீசை அணுக விரும்புகிறோம். அவர்களை நாடு கடத்தி அழைத்துவர நடவடிக்கை தொடங்கப்பட்டு இருக்கிறது. அதற்கு கோர்ட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #SterlingBiotech #Promoters #BankFraudCase