search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bank holiday"

    • ரம்ஜான், ஹோலி உள்ளிட்ட பண்டிகைகள் மார்ச் மாதத்தில் தான் வருகிறது.
    • அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை மற்றும் 2, 4-வது சனிக்கிழமை விடுமுறை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.

    சில மாநிலத்திற்கான பண்டிகை அல்லது விழாக்களுக்கு அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரம்ஜான், ஹோலி உள்ளிட்ட பண்டிகைகள் மார்ச் மாதத்தில் தான் வருகிறது. மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு விடப்பட்டுள்ள 14 நாட்கள் விடுமுறை விபரம் வருமாறு:-

    மார்ச் 2 (ஞாயிறு)-வார விடுமுறை

    மார்ச் 7 (வெள்ளி)-சாப்சர் குட்-மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் விடுமுறை

    மார்ச் 8 (2-வது சனிக்கிழமை)-வார விடுமுறை

    மார்ச் 9 (ஞாயிறு)-வார விடுமுறை

    மார்ச் 13 (வியாழன்)-ஹோலிகா தஹான், ஆட்டுக்கல் பொங்கல் பண்டிகை-உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், கேரளா.

    மார்ச் 14 (வெள்ளி)-ஹோலி, திரிபுரா, ஒடிசா, கர்நாடகா, தமிழகம், மணிப்பூர், கேரளா மற்றும் நாகாலாந்து மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்களில் பொது விடுமுறை.

    மார்ச் 15 (சனிக்கிழமை)-அகர்தலா, புவனேஸ்வர், இம்பால் மற்றும் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் விடுமுறை.

    மார்ச் 16 (ஞாயிறு)-பொதுவிடுமுறை

    மார்ச் 22 (4-வது சனிக்கிழமை)-பிஹார் திவாஸ்

    மார்ச் 23 (ஞாயிறு)-பொதுவிடுமுறை

    மார்ச் 27 (வியாழன்)-ஷதப் இ கத்ர்-ஜம்மு உள்ளூர் விடுமுறை

    மார்ச் 28 (வெள்ளி)-ஜூமத் உள் விதா-ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் விடுமுறை

    மார்ச் 30 (ஞாயிறு)-பொதுவிடுமுறை

    மார்ச் 31 (திங்கள்)-ரம்ஜான் விடுமுறை

    இதனால், அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ., சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடர்ந்து 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருவதாக பரவிவரும் தகவல்களுக்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. #Bankholiday #Bankbranches #Septemberfirstweek
    புதுடெல்லி:  

    செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மூன்றாம் தேதி திங்கட்கிழமை முதல் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை  தொடர்ந்து 6 நாட்கள் நாடு முழுவதும் தேசிய வங்கிகளுக்கு விடுமுறை வருவதாக நேற்றிலிருந்து சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

    இந்த தகவலை சில பத்திரிகைகளும் கேள்விக்குறியுடன் செய்தியாக வெளியிட்டன.  இதற்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். ‘செப்டம்பர் முதல் வாரத்தில் அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும். வங்கியியல் பணிகள் தங்குதடையின்றி நடைபெறும். 2-9-2018 ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது சனிக்கிழமையான 8-9-2018 ஆகிய இருநாட்கள் மட்டும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

    3-9-2018 அன்று சில மாநிலங்களில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக இருக்கும். மற்றபடி, நாடு தழுவிய அளவில் வங்கிகள் மூடப்படாது. அந்த நாட்களிலும் அனைத்து மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் திறந்திருக்கும். ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது.



    அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் போதுமான அளவு பணம் இருப்பில் உள்ளதை கண்காணிக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bankholiday #Bankbranches #Septemberfirstweek 
    ×