என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banking scam"

    • மோசடியில் ஈடுபட்ட வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தா கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் தொழில் அதிபர் அருணாச்சலம் உலகநாதன் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளனர்.

    மும்பை:

    மும்பையை சேர்ந்த நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் ரூ.122 கோடி மோசடி நடந்தது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடியில் ஈடுபட்ட வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தா கைது செய்யப்பட்டார்.

    அவர் வங்கி பெட்டகத்தில் இருந்த பணத்தை எடுத்து கட்டுமான அதிபர், தொழில் அதிபர் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. வழக்கு தொடர்பாக போலீசார் தொழில் அதிபர் அருணாச்சலம் உலகநாதன் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளனர்.

    இதில் அருணாச்சலம் உலகநாதன், ஹிதேஷ் மேத்தாவிடம் இருந்து வாங்கிய பணத்தில் ரூ.15 கோடியை ஜார்கண்டை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் பாண்டே என்ற பவன் குப்தாவிடம்(வயது45) கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 28-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • ஆன்லைன் சேவை நிறுத்தப்பட்டதால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு.
    • வட்டி மானியம் வசதியான வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டதாக புகார்.

    ஹெனான்:

    சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பல கிராமப்புற வங்கிகளில் நிதி மோசடி நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சட்டவிரோதமாக பெறப்பட்ட நிதியின் ஒரு பகுதியை வங்கி அதிகாரிகள் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்

    வங்கிகளின் வட்டி மானியம் தரகர்களால் சுரண்டப்பட்டதாகவும்  பணக்கார வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அது வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ஹெனான் மாகாணத்தில் உள்ள நான்கு கிராமப்புற வங்கிகள் தங்கள் ஆன்லைன் சேவைகளை நிறுத்திவிட்டன, இதனால் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வங்கிகள் நிதி முறைகேடு சீன மக்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீன மத்திய வங்கியின் கிளைக்கு வெளியே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் வைப்பு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக 234 அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

    ×