என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baramati"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயின்றவர், பயிற்றுவிப்பவர் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டன
    • விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை

    மகாராஷ்டிரா மாநில புனே மாவட்டத்தில் உள்ளது பாராமதி தாலுக்கா.

    பாராமதியில் விமான ஓட்டுதல் பயிற்சி அளிக்கும் ரெட் பேர்ட் விமான பயிற்சி நிறுவனம் (Red Bird Flight Training Academy) எனும் நிறுவனத்திற்கு சொந்தமான டெக்னாம் விடி-ஆர்பிடி (Tecnam VT-RBT) விமானம் ஒன்று, நேற்று காலை 08:00 மணியளவில் அம்மாவட்டத்தின் கோஜுபாவி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு வயலில் கீழே விழுந்து நொறுங்கியது.

    அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    ஆனால், அவ்விமானத்தில் பயிற்சி பெற்று கொண்டிருந்த விமானி ஒருவருக்கும் அவருக்கு பயிற்றுவிப்பவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அவசரமாக தரையிறங்க முற்பட்ட போது இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொண்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

    கடந்த 19 அன்று பாராமதி தாலுகாவில் ஒரு விமானம் கீழே விழுந்தது என்பதும் அச்சம்பவம் நடந்து 4 நாட்களில் அதே போன்ற இரண்டாவது சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மகாயுதி 175 இடங்களை பெறுவார்கள் என்ற நான் நினைக்கவில்லை.
    • தண்ணீர் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, குற்றச்செயல்கள் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது.

    288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாயுதி கூட்டணி கட்சிகள் (பா.ஜ.க., சிவசேனா (ஏக் நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்)), மகா விகாஸ் அகாடி கட்சிகள் (காங்கிரஸ், சிவசேனா (UBT-உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் ((சரத்சந்திரா பவார்)- சரத் பவார்) தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

    பாராமதி தொகுதியில் துணை முதல்வர் அஜித் பவரை எதிர்த்து சரத் பவார் பேரன் யுகேந்திர பவார் களம் இறக்கப்பட்டுள்ளார். தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் யுகேந்திர பவார், மகா விகாஸ் அகாடி 175 முதல் 180 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக யுகேந்திர பவார் கூறுகையில் "மகாயுதி 175 இடங்களை பெறுவார்கள் என்ற நான் நினைக்கவில்லை. மகா விகாஸ் அகாடி 175 இடங்கள் முதல் 180 இடங்களை பிடிக்கலாம்.

    நவம்பர் 23-ந்தேதி சரியாக எத்தனை இடங்கள் என்பதை நம்மால் பார்க்க முடியும். வெற்றி நமதே. தண்ணீர் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, குற்றம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது. இவைகள் அனைத்தும் மிகப்பெரிய பிரச்சனை. இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுகாணும் வகையில் நாங்கள் பணியாற்றுவோம். பொதுவாக இந்தியா எப்போதும் மிகப்பெரிய மதச்சார்பற்ற நாடாக இருந்து வருகிறது.

    இவ்வாறு யுகேந்திர பவார் தெரிவித்தார்.

    ×