என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bees"

    தென் ஆப்பிரிக்காவின் கடற்கரை நகரான டர்பன் விமான நிலையத்தில் விமான என்ஜினில் கூடுகட்டிய தேனீக்களை நிபுணர்கள் பத்திரமாக வெளியேற்றினர். #Bees #SouthAfricanPlanes
    டர்பன்:

    தென் ஆப்பிரிக்காவின் கடற்கரை நகரான டர்பன் விமான நிலையத்தில் மேங்கோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது என்ஜினில் இருந்து தேனீக்கள் வெளியே வந்து பறந்தன.

    அதை பார்த்த விமானி ஒருவர் விமான என்ஜினில் சோதனை செய்தார். அங்கு தேனீ கூடு கட்டி இருந்தது தெரிய வந்தது. உடனே தேனீ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவை அங்கிருந்து அகற்றப்பட்டன. மொத்தம் 20 ஆயிரம் தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அங்கிருந்து புறப்பட வேண்டிய 3 பயணிகள் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றன. விமான என்ஜினில் தேனீக்கள் கூடு கட்டுவது இல்லை. இது மிகவும் அபூர்வமானது என நிபுணர்கள் தெரிவித்தனர். #Bees #SouthAfricanPlanes
    கோவை கிணத்துக்கடவு அருகே கோவிலில் குடும்பத்துடன் பொங்கல் வைத்தபோது தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயமடைந்தனர்.
    கிணத்துக்கடவு:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காளியண்ணன்புதூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). விவசாயி.

    இவர் அதே பகுதியில் உள்ள ஆற்றுகாளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து கிடா விருந்து வைக்க திட்டமிட்டார். இதற்காக நேற்று உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள ஆலமரத்துக்கு அடியில் பெண்கள் பொங்கல் வைத்து கொண்டு இருந்தனர்.

    அப்போது மரத்தில் இருந்த தேனீக்கள் வெளியேறியது. ஆக்ரோசமாக காணப்பட்ட தேனீக்கள் கூட்டம் பொங்கல் வைத்து கொண்டு இருந்தவர்கள், அங்கு அமர்ந்து இருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் அனைவரும் சிதறியடைத்து ஓடினர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தேனீக்கள் கொட்டியதில் ரவிச்சந்திரன், அவரது மனைவி கலாமணி, மகன் லோகமுருகன், உறவினர்கள் சந்திரகுமார், தவமணி உள்பட 30 பேர் காயமடைந்தனர்.

    இவர்கள் கோவை, பொள்ளாச்சி மற்றும் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சேர்ந்தனர். அங்கு இவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
    ×