என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhole Baba"

    • கூட்ட நெரிலில் இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • போலே பாபா பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    உத்தர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்கிற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினர். இந்த மத நிகழ்வில் கலந்து கொள்ள அக்கம் பக்க ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஹத்ராஸில் கூடினர். ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்று முடிந்ததும் ஏற்பட்ட கூட்ட நெரிலில் இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில், இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணமான சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்திய போலே பாபா பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி போலே பாபா ஆன்மிக சேவையாற்றுவதற்காக புலனாய்வு துறையில் செய்துவந்த பணியை ராஜினாமா செய்ததாக பலமுறை தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    ஆன்மிக சேவையாற்ற 1990-க்களில் தான் மேற்கொண்டு வந்த புலனாய்வு துறை பணியை ராஜினாமா செய்ததாக தனது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களிடம் போலே பாபா தெரிவித்து இருக்கிறார். உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கில் உள்ள பதௌர் நகரி என்ற கிராமத்தில் நன்னே லால் மற்றும் கதோரி தேவி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் போலே பாபா.

    இவருக்கு இரண்டு சகோதரர்கள், இவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். அவர் உத்தர பிரதேச காவல் துறையில் கான்ஸ்டபிலாக பணியாற்றி வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு புலனாய்வு பிரிவில் பணியாற்றி வந்த போலே பாபா அதன்பிறகு ஆன்மிக நாட்டம் காரணமாக அந்த பணியை ராஜினாமா செய்துள்ளார்.

    வழக்கமாக ஆன்மிக சேவையில் ஈடுபடுவோரை போன்று காவி உடை உடுத்தாமல் போலே பாபா வெள்ளை நிற சூட் மற்றும் டை அணிவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதுதவிர குர்தா-பைஜமா அணிவார். இவருக்கு வழங்கப்படும் நன்கொடை பணம் முழுவதையும் அவர் தனது பக்தர்களுக்கே செலவு செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. 

    • கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்தனர்.
    • போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் கூட்ட நெரிசல்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து போலே பாபா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், " சில சமூக விரோதிகளால் நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.பி சிங்கிடம் தெரிவித்துள்ளேன்.

    மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பர்மாத்மாவிடம் பிரார்த்திக்கிறேன்" என்றார்.

    இதற்கிடையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை தொடங்கப்படும் என்றும், ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

    • ஹத்ராஸ் கூட்ட நெரிசல் வழக்கின் எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படவில்லை.
    • குற்றப்பத்திரிகையில் போலே பாபா பெயர் இடம் பெறாததற்கு மாயாவதி கடும் கண்டனம்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2 பெண்கள் உடைபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கின் எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் தொடர்பாக 3200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதில் 2 பெண்கள் உட்பட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் சாமியார் போலே பாபா பெயர் இதில் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றப்பத்திரிகையில் போலே பாபா பெயர் இடம் பெறாததற்கு உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர், " தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராம் குதிர் ஆசிரமம் நடத்தி வரும் போலே பாபா என்ற இந்துமத சாமியாரின் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது.
    • காவல்துறையும் நிர்வாகமும் விழிப்புடன் இருந்திருந்தால் இந்த துயர விபத்தைத் தவிர்த்திருக்கலாம்.

    ராம் குதிர் தொண்டு நிறுவனம் என்ற பெயர் ஆசிரமம் நடத்தி வரும் போலே பாபா என்ற பிரபல இந்துமத சாமியாரின் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் ஒன்று கடந்த ஜூலை 2, 2024 இல் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்தது.

    இதில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 121 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம்.

    கூட்டநெரிசல் ஏற்பட்டபோது போலே பாபா அங்கிருந்து தனது காரில் தப்பினார். தனது காலடி மண்ணை எடுக்குமாறு போலே பாபா கூறியதும் மக்கள் தல்லுமுல்லுப்பட்டதால் தான் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக உயிர்பிழைத்தவர்கள் பலர் தெரிவித்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

     

    இந்நிலையில் அந்த ஆணையத்தின் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அவையில் தாக்கல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் இந்த சம்பவத்தில் போலே பாபாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    உண்மையான காரணம், ஏற்பாட்டாளர்களின் தவறான நிர்வாகமும், அந்த இடத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகப்படியாகச் சேர்ந்த கூட்டமுமே ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் காவல்துறை தனது பொறுப்பை முறையாகச் செய்யவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தை நிர்வகிப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    காவல்துறையும் நிர்வாகமும் விழிப்புடன் இருந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், ஒருவேளை இந்த துயர விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கடுமையான விதிகளை அமல்படுத்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    இதற்கிடையில் இதே உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் மகா கும்பமேளா ஆன்மீக கூடுகையில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி ஏற்பட்ட கூட்டநெரிசலில் 30 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×