என் மலர்
நீங்கள் தேடியது "Bigg Boss"
- பிக்பாஸ் 6-வது சீசன் 16 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
- நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்கால் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினை வெடித்துள்ளது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்துநிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6
இதையடுத்து பிக்பாசில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் மொத்தம் 19 பொம்மைகள் இடம்பெற்றிருக்கும் ஆனால் 18 பொம்மைகளை மட்டுமே போட்டியாளர்களால் எடுக்கப்பட்டு அந்த அறையில் வைக்கப்படும். மீதம் உள்ள ஒரு நபரின் பெயர் இடம்பெற்றிருக்கும் பொம்மை எடுக்க தவறினால் அந்த பொம்மையில் இருக்கும் நபர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றபடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 6
இந்த டாஸ்கில் பல விதமான சண்டைகள் உருவாகி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரோமோவில் அசீமை தனலட்சுமியிடம் மன்னிப்பு கேட்கும் படி விக்ரமன் கூறுகிறார். அதற்கு அசீம் முடியாது என்று மறுக்கிறார். இறுதியில் அசீமிடம் அமுதவாணன், விக்ரமன், தனலட்சுமி மூன்று பேரும்சண்டையிடுகின்றனர். அப்போது தனலட்சுமி நீங்கதான் எல்லாத்துக்கும் காரணம் என்று அசீமை குற்றம் சாட்டுகிறார். பின்னர்அமுதவாணன், அசீமிடம் உன்னை போன்று என்னால் கத்த முடியாது என்று கூறிவிட்டு செல்கிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது. மொத்தத்தில் பொம்மை டாஸ்கால் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிக்பாஸ் தமிழ் 6-வது சீசனில் கடந்த வாரம் அசல் வெளியேறினார்.
- தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதில் தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 23-வது நாளை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் அசீம் ஜட்ஜ்மெட்டுக்கு உக்காரும் போது அவங்க வாதத்திற்கு பிரதிவாதம் நீங்க வலுவா வைக்கனும் என்று ஏ.டி.கே. விடம் கூறுகிறார். இதனால் கடுப்பான மகேஸ்வரி நீங்க என்ன ஜட்ஜ்னா இப்படி பண்ணுங்க அப்படி பண்ணுங்கனு சொல்லிக்கிட்டே இருக்கீங்க. நீங்க என்ன ஜட்ஜ்க்கு படிச்சிட்டு வந்திருக்கீங்களா? உங்க வேலைய சரியா செய்தா போதும். யாரையாது புடிச்சிக்க வேண்டியது ஒன்ன குறிப்பிட வேண்டியது அப்பறம் கத்த வேண்டியது வேற எதாவது தெரியுதா? உங்களுக்கு என்று கூறிக் கொண்டே வெளியே செல்கிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது.
- தெலுங்கில் பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா நடிப்பது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தற்போது தெலுங்கில் பிக்பாஸ் 6-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் நாகார்ஜுனா விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். நாகார்ஜுனா மட்டுமன்றி பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கும் பதில் மனு தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாகர்ஜுனா
மேலும், இந்த வழக்கு விசாரணையை 14 நாட்களுக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை எட்டியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் இந்த சீசன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிக்பாஸ் 6-வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் ஷாந்தி மற்றும் அசல் எலிமினேட் செய்யப்பட்டார். ஜிபி முத்து தாமாக முன்வந்து வெளியேறினார். இப்படி பரப்பரப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி 24 நாட்களை எட்டியுள்ளது. கடந்த வாரம் தொகுப்பாளர் கமல்ஹாசன் சகபோட்டியாளர்களை உடல் மொழி கேலி செய்த அசீமையும் மணிகண்டனையும் கண்டித்து பேசினார். இதற்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

கமல்ஹாசன்
இந்நிலையில், ரசிகர் ஒருவர், "கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உடல்மொழி கேலி செய்த அசீம் மற்றும் மணிகண்டனை கமல்ஹாசன் கையாண்ட விதம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைந்துள்ளது. அதோடு நிறுத்தாமல், ஏடிகேவை அனைவரையும் போல நடித்து காண்பிக்க செய்து வித்தியாசத்தை விளக்கினார்" என்று கமலை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

கமல்ஹாசன்
இந்த பதிவிற்கு பதிலளித்த கமல், "நன்றி மவுலி அநாகரிகமோ, அவமானமோ இல்லாமல் நகைச்சுவை செய்யத் தூண்டிய தலைவர்களில் நீங்களும் ஒருவர். உங்களைபோல் பெருமைமிகுந்த மனிதர்களின் வரிசையில் நாங்களும்" என பதிலளித்தார்.

கமல்ஹாசன்
கமலின் பதிவை பார்த்த ரசிகர், "தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது போல் தெரிகிறது. ஆனால் என்னுடைய கருத்துகள் தங்களை வந்தடைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒன்று கூறுகிறேன், திரைதுறையில் மாற்றுப் பாலினத்தவர் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன்
தொடர்ந்து, நடிகர் கமல் "இயக்குனரும் மூத்த நடிகருமான மௌலி என தவறுதலாக நினைத்துவிட்டேன். இருந்தாலும் தங்களுடைய பாராட்டுக்கு நன்றி!" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குனரும், மூத்த நடிகருமான திரு. மெளலி என தவறுதலாக நினைத்துவிட்டேன். இருந்தாலும், தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி.
— Kamal Haasan (@ikamalhaasan) November 1, 2022
- பிக்பாஸ் 6-வது சீசன் இன்றுடன் 26 நாட்களை எட்டியுள்ளது.
- இந்த நிகழ்ச்சியில் இன்று வெளியான இரண்டாவது புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதில் தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 26-வது நாளை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் என்னை மதிக்காத டீம் இருந்தா என்ன? இல்லைனா என்ன? என்று அசீம் மகேஸ்வரியிடம் கத்துகிறார். அதற்கு பதிலளித்த மகேஸ்வரி நீங்க ரொம்ப நல்ல பேசுறிங்க அசீம் என்று கூறுகிறார். தொடர்ந்து அசீம் உங்கள மாதிரி எல்லாம் எனக்கு பேசத் தெரியாது மா என்று சொல்கிறார். இதற்கு மகேஸ்வரி உங்களுக்கு அறிவு இருக்குதுல அப்ப ஏன் பிரேக்கிங் நியூஸ் எப்படி இருக்கனும்னு முதல்ல யோசிக்கல என்று கூறுகிறார். இறுதியில் அசீம் நீங்கள் ஜட்ஜிங்கில் பூஜ்ஜியம் என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் பெரும் பூகம்பம் கிளம்பியுள்ளது.
- பிக்பாஸ் 6-வது சீசன் தற்போது 32-நாட்களை எட்டியுள்ளது.
- இதன் புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல் வெளியேறினார். கடந்த வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 32-வது நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் இந்த வீட்டில் நல்லவர் என்று முகமூடி அணிந்திருக்கும் நபர் யார் என்று பிக்பாஸ் கேள்வி எழுப்புகிறார். இதற்கு ஏ.டி.கே. என்று ஜனனி பதிலளிக்க இருவருக்குள்ளும் முட்டிக் கொள்கிறது. கோபத்தின் உச்சிக்கு சென்ற ஏ.டி.கே. ஜனனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மேலும் நான் ஏன் உன்னை கூப்பிட்டு அறிவுரை கூறுகிறேன் உன்னிடம் ஒரு தனிப்பட்ட அன்பு இருப்பதால் தான்.

பிக்பாஸ் சீசன் 6
அந்த அன்பை கொச்சப்படுத்திட்டீங்க. நான் ஒரு தங்கச்சி மாதிரி அந்த அவளை பார்த்தேன். அவள் மீது வைத்த பாசம் போல் இந்த வீட்டில் யாரின் மேலும் நான் வைக்கவில்லை. அதனால் தான் மீண்டும் மீண்டும் சென்று அவளிடன் ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய் என்று கேட்பேன். இதனுடம் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- பிக்பாஸ் 6-வது சீசன் 33 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இன்று வெளியான புரோமோவால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல் வெளியேறினார். கடந்த வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 33-வது நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் இந்த வார போட்டிகளில் சிறப்பாக பங்கேற்காத ஒரு நபரை தேர்வு செய்ய சொல்லி பிக்பாஸ் விக்ரமனிடம் கூறுகிறார். இதற்கு ஜனனி என்று விக்ரமன் சொல்லவே அமுதவாணன் வாதிடுகிறார். இதனால் கடுப்பான ஜனனி, அமுதவாணனை நீங்கள் எல்லாத்தும் இப்படி தான் பிரச்சினை பண்றீங்க என்று கதறி அழுகிறார். இதனுடம் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழில் பிக்பாஸ் 6-வது சீசன் 74 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இதில் இன்று வெளியான மூன்றாவது புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 74-வது நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு 1980-களில் இருக்கும் கலை கல்லூரியாக மாறியுள்ளது. இதில் இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் நீங்கள் விரும்பும் நபரை அழைத்து நேர்காணல் செய்யலாம் என்று விக்ரமன் கூறுகிறார். இதைத்தொடர்ந்து, ஏடிகே, அசீமை நேர்காணல் செய்கிறார்.

பிக்பாஸ், சீசன் 6
அப்போது இந்த வீட்டை பற்றிய புரிதல் உங்களுக்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்று நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று ஏடிகே, அசீமிடம் கூறுகிறார். இதற்கு அசீம் நான் நானாக இருக்கிறேன் என்று யாரெல்லாம் கூறுகிறார்களோ அவர்கள் அவர்களாக இல்லை என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- தமிழில் பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இப்போது பிக்பாஸ் வீட்டில் ஒன்பது போட்டியாளர்கள் உள்ளனர்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 10 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 78 நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இதில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில், இந்த வாரம் நாமினேஷனுக்கு நபர்களை தேர்ந்தெடுக்கும்படி பிக்பாஸ் கூறுகிறார். இதற்கு அசீம் இந்த வீட்டில் பெரிதாக எதும் செய்தது போல் எனக்கு தெரியவில்லை என்று சிவினை நாமினேட் செய்கிறார். பதிலுக்கு சிவின் எந்த திருத்தமும் நடக்காத மாதிரி நான் உணர்கிறேன் என்று அசீமை நாமினேட் செய்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த நிகழ்ச்சி இன்றுடன் 86 நாட்களை நெருங்கியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 9 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 86 நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், ரக்ஷிதா இதுவரைக்கும் என்ன செய்தீர்கள் என்று அசீம் கேட்கிறார். அதற்கு எந்த டாஸ்க்லையும் நான் பண்ணுனத நீங்க பாத்ததே இல்லையா. ரீல் முகம் ரியல் முகம் எல்லாம் நான் நடிச்சிட்டேன் அசீம் இங்க வந்து நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்ல என்று வாதிடுகிறார். இதற்கு சரி இங்க வந்து ஸ்டார்ட் கேமரா இல்லாம நடிச்சிட்டு இருக்கீங்களா என்று வெளுத்து வாங்குகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார்.
- இரண்டாவது இடம் விக்ரமனுக்கு வழங்கப்பட்டது.
சென்னை:
பிக்பாஸ் சீசன் 6 போட்டி மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த சீசனில் 3 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர்.
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் யாருக்கு என்ற போட்டியில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோருக்கு இடையே போட்டி தீவிரமானது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீசனின் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் விக்ரமனுக்கும், மூன்றாவது இடம் ஷிவினுக்கு வழங்கப்பட்டது.
- பிக்பாஸ் ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
- ஆறாவது சீசனில் நடிகர் அசீம் டைட்டிலை வென்றார்.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து ஏழாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் ஏழாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரேகா நாயர், மாகபா ஆனந்த், விஜே பாவனா, கே.பி.ஒய்.சரத் ஆகியோரிடம் ஆடிஷன் நடந்ததாக தெரிகிறது. இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.