என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bjp mp"

    • கார்கே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு வீழ்ச்சியடைந்தது குறித்து பேசினார்.
    • கார்கே பேசி கொண்டிருக்கும்போது பாஜக எம்.பி. நீரஜ் சேகர் குறுக்கிட்டார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் நேற்று கூடியது.

    அப்போது மாநிலங்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்தது குறித்து பேசினார்.

    கார்கே பேசி கொண்டிருக்கும்போது பாஜக எம்.பி. நீரஜ் சேகர் குறுக்கிட்டார். இதனால் கோபமடைந்த கார்கே,"நானும் உனது அப்பாவும் (சந்திர சேகர்) ஒரு காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். அப்போது உன்னை நான் ஒரு குழந்தையாக பார்த்தேன். இப்போது நீ என்ன பேசி கொண்டிருக்கிறாய். பேசாமல் அமைதியாக உட்காரு" என்று கோபத்துடன் பேசினார்.

    அப்போது இருவரையும் சமாதானப்படுத்த முயன்ற அவை தலைவர் ஜெகதீப் தன்கர், "சந்திர சேகர் இந்நாட்டின் உயர்ந்த தலைவர்களில் ஒருவர். அவருக்கு நாம் மரியாதையை செலுத்த வேண்டும். ஆகவே முன்னாள் பிரதமர் சந்திர சேகர் குறித்த உங்களது கருத்துக்களை திரும்ப பெறுங்கள்" என்று வலியுறுத்தினார்.

    அதற்கு பதில் அளித்த கார்கே, "நானும் சந்திர சேகரும் ஒருகாலத்தில் ஒன்றாக கைதானோம். அதனால் தான் அவரது அப்பாவை எனது தோழன் என்று குறிப்பிட்டேன். நான் யாரையும் இழிவுபடுத்த வேண்டுமென்று பேசவில்லை. பாஜக தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இழிவுபடுத்தினார்கள்." என்று தெரிவித்தார்.

    சமாஜ்வாதி கட்சியில் இருந்த நீரஜ் சேகர் 2019 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அவரது தந்தை சந்திர சேகர் 1990 அக்டோபர் முதல் 1991 ஜூன் வரை பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வாடகை வீடுகளில் வாழும் இளைஞர்களுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தும்.
    • நிவாரணம் தேவைப்படும் நேரத்தில் நாங்கள் அவர்களைத் துன்புறுத்துகிறோம்.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 25 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அரிசி, தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி, மீன், தேன், உலர்ந்த காய்கறிகள், உலர்ந்த மக்கானா, கோதுமை மாவு தயிர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் வசூலிக்கப்படுகிறது. இதனால் இந்த பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ஆளும் பா.ஜ.க எம்.பி வருண் காந்தி விமர்சித்துள்ளார். இது ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதிக்கும் என்று தமது டூவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த முடிவு நடுத்தரக் குடும்பங்களுக்கு, குறிப்பாக வாடகை வீடுகளில் வாழும் இளைஞர்களுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள வருண்காந்தி, அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படும் நேரத்தில் நாங்கள் அவர்களைத் துன்புறுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

    தேர்தலில் சீட் தர மறுத்ததால் அதிருப்தி அடைந்த டெல்லி பா.ஜனதா எம்.பி. உதித்ராஜ் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று காங்கிரசில் இணைந்தார். #BJPMP #UditRaj #Congress
    புதுடெல்லி:

    பா.ஜனதா கட்சி சார்பில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடமேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், உதித்ராஜ். இந்த தேர்தலில் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட அவர் கட்சித்தலைமையிடம் ‘சீட்’ கேட்டார். ஆனால் அவருக்கு ‘சீட்’ மறுத்த கட்சித்தலைமை, அவருக்கு பதிலாக பாடகர் ஹன்ஸ்ராஜ் ஹன்சுக்கு அந்த தொகுதியை ஒதுக்கியது.

    இதனால் அதிருப்தி அடைந்த உதித்ராஜ் பா.ஜனதாவில் இருந்து விலகி நேற்று காங்கிரசில் இணைந்தார். கட்சித்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார்.

    அவரை ராகுல் காந்தி வரவேற்றார். அப்போது கட்சியின் மூத்த தலைவர்களும் உடனிருந்தனர்.  #BJPMP #UditRaj #Congress 
    பாராளுமன்ற தேர்தலில் பீகாரின் பாட்னா சாகிப் தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், பாஜக அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்கா டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். #Congress #RahulGandhi #ShartrughanSinha
    புதுடெல்லி:

    பிரபல இந்தி நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சத்ருகன் சின்கா பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

    ஆனால் பா.ஜனதா மேலிடம் அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. அவர் போட்டியிட்டு 2 முறை வென்ற பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை நிறுத்த பா.ஜனதா மேலிடம் முடிவு செய்தது. இதையடுத்து, தனது தேர்தல் நிலைப்பாடு குறித்து ஹோலி பண்டிகைக்கு பிறகு அறிவிப்பதாக சத்ருகன் சின்கா தெரிவித்து இருந்தார்.

    தற்போது ரவிசங்கர் பிரசாத் பாட்னா சாகிப் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சத்ருகன் சின்கா அதிருப்தி அடைந்துள்ளார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அதன் தலைவர் ராகுல் காந்தியை சத்ருகன் சின்கா இன்று சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், நவராத்திரி வரை பொறுத்திருங்கள். நல்ல முடிவை அறிவிக்க உள்ளேன் என தெரிவித்தார். அவர் ஏப்ரல் 6-ம் தேதி காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Congress #RahulGandhi #ShartrughanSinha
    உத்தரபிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த எம்பி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். #ShyamaCharanGupta #BJPMP #joinedSamajwadi #LokSabhaElections2019
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக சார்பில் நாடு முழுவதும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் இந்த வேட்பாளர் தேர்வில் உள்ள அதிருப்தி காரணமாக முக்கிய தலைவர்கள் விலகி உள்ளனர்.

    அசாம் மாநிலத்தில், பாஜக கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய தேஜ்பூர் எம்பியுமான ஆர்.பி.சர்மா, கர்நாடக மாநிலத்தில் மூத்த தலைவர் கே.பி.ஷனப்பா ஆகியோர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.



    இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் அலகாபாத் தொகுதியின் எம்பியான ஷியாமா சரண் குப்தா, பாஜகவில் இருந்து இன்று திடீரென விலகி, சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் விலகி உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பாந்தா தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பாக ஷியாமா சரண் குப்தா போட்டியிட, வாய்ப்பு வழங்கி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #ShyamaCharanGupta #joinedSamajwadi #LokSabhaElections2019 #BJPMP
    பிரியங்கா காந்தி டெல்லியில் ஜீன்சும், கிராம பகுதிகளில் சேலையும் அணிகிறார் என்ற பாரதீய ஜனதா எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் எழுந்துள்ளது. #Priyanka #bjpmp #congress #rahulgandhi
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளராக பிரியங்கா காந்தி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து உத்தரபிரதேச மேற்கு பகுதி பொது செயலாளராக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பட்டார். அதன்பின் உத்தர பிரதேசத்திற்கு முதன்முறையாக பிரியங்கா காந்தி இன்று சென்றார்.  அவருடன் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் சென்றார்.

    இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. ஹரீஷ் திவிவேதி தனது பஸ்தி தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, பிரியங்கா காந்தி டெல்லியில் ஜீன்ஸ் மற்றும் டாப் அணிகிறார்.  ஆனால் கிராமப்புற பகுதிகளுக்கு அவர் வரும்பொழுது சேலை கட்டி கொண்டு, பொட்டு வைத்து கொள்கிறார் என கூறினார்.

    எங்களது கட்சிக்கோ அல்லது எனக்கோ பிரியங்கா ஒரு விசயமே இல்லை.  ராகுல் காந்தி ஏற்கனவே தோல்வி அடைந்து விட்டார்.  பிரியங்காவும் தோல்வியை மிக விரைவில் நிரூபித்திடுவார் என்றும் கூறினார்.

    அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம். வீரப்பமொய்லி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து விமர்சனம் செய்துள்ளனர்.

    கடந்த மாதம், பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறும்பொழுது, பிரியங்காவை சூர்ப்பனகை என்றும் அவரது சகோதரர் ராகுலை ராவணன் என்றும் கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். #Priyanka #bjpmp #congress #rahulgandhi
    அரசு விழாக்கள் மற்றும் கூட்டங்களில் அசைவ உணவுக்கு தடை விதிக்கக்கோரி பாஜக எம்பி பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். #WinterSession #PrivateMembersBill
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அரசு தாக்கல் செய்த பல்வேறு மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், தனி நபர் சார்பிலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மக்களவையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    மேற்கு டெல்லி தொகுதி பாஜக எம்பி பர்வேஷ் சாகிப் சிங் தாக்கல் செய்துள்ள தனி நபர் மசோதாவில், அரசு விழாக்கள் மற்றும் கூட்டங்களின்போது அசைவ உணவு வழங்குவதை தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதேபோல், அரசு சின்னங்கள் (இலச்சினைகள்) மற்றும் பெயர்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தில் திருத்தம் கேட்டு மற்றொரு மசோதாவும் தாக்கல் செய்துள்ளார்.


    விளையாட்டு மோசடிகளை தடுத்து அபராதம் விதிக்கவும், ஆன்லைன் கேம்களை கட்டுப்படுத்தவும் பயனுள்ள அமைப்பை உருவாக்க கோரி காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனி நபர் மசோதா தாக்கல் செய்துள்ளார்.

    வேலை நேரத்திற்குப் பிறகும், விடுமுறை தினங்களிலும் வேலை தொடர்பாக வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்க மறுப்பதற்கு உரிமை அளிக்கும் வகையில், தொழிலாளர் நல ஆணையத்தை உருவாக்க கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி சுப்ரியா சுலே ஒரு மசோதா தாக்கல் செய்துள்ளார்.

    எல்ஜிபிடி சமூகத்தினருக்கு ராணுவத்தில் சம உரிமை வழங்கும் வகையில் ராணுவச் சட்டத்தில் திருத்தம் கோரி பாஜக எம்பி ஜகதாம்பிகா பால் மசோதா தாக்கல் செய்துள்ளார்.

    மக்களவையில் நேற்று மட்டும் 85க்கும் மேற்பட்ட தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #WinterSession #PrivateMembersBill
    ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. டவுசா ஹரிஸ் சந்திர மீனா, நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். #BJPMLA #HarishChandraMeena #Congress
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பா.ஜனதா கட்சி தனது வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

    இதில், தங்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த பொது சுகாதாரத்துறை மந்திரி சுரேந்திர கோயல் மற்றும் நாகவூர் தொகுதி எம்.எல்.ஏ. ஹபிபூர் ரஹ்மான் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்து விலகினர்.

    இந்தநிலையில் ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. டவுசா ஹரிஸ் சந்திர மீனா, நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

    ராஜஸ்தானின் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில தலைவர் சச்சின் பைலட் மற்றும் மாநில பொறுப்பாளர் அவினேஷ் பாண்டே ஆகியோர் முன்னிலையில் டவுசா ஹரிஸ் சந்திர மீனா தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். 
    மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சிந்தாமணி மாளவியா, ‘நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்’ என தெரிவித்துள்ளார். #BJP #ChintamaniMalviya #FireCrackers
    போபால்:

    தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சிந்தாமணி மாளவியா, ‘நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் தீபாவளி பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவேன். இரவு 10 மணிக்கு லட்சுமி பூஜை முடிந்த பிறகே பட்டாசுகள் வெடிப்பேன். இந்து பாரம்பரியங்களில் பிறரின் தலையீட்டை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். என் மத பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்காக சிறை செல்வதாக இருந்தாலும், அதற்காக சந்தோஷப்படுவேன். இந்து விழாக்களை எப்போது கொண்டாட வேண்டும் என்பதற்கு ஏற்கனவே இந்து நாட்காட்டி உள்ளது. விழாக்களை நடத்த கால நேரம் நிர்ணயம் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முகலாயர்கள் ஆட்சியின் போது கூட, இந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது இல்லை.

    இவ்வாறு சிந்தாமணி மாளவியா கூறி உள்ளார். 
    என்னை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகத் தயாராக இருக்கிறேன் என சாக்சி மகராஜ் சவால் விடுத்துள்ளார்.
    உன்னாவ்:

    உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. எம்பி சாக்சி மகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் என்னை எதிர்த்து (உன்னாவ் தொகுதியில்) போட்டியிட தயாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சவால் விடுகிறேன். அவர் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டு விலகுவேன். ஆனால் தோல்வி அடைந்தால் இத்தாலிக்கு செல்ல வேண்டும்.

    ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரையை எதிர்க்கவில்லை. பா.ஜ.க. ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஆனால், அதுபோன்ற யாத்திரைக்கு தூய்மை அவசியம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, யாத்திரையை தொடங்கும் முன்வாக அவர் தூய்மையானவராக ஆகியிருக்க வேண்டும். அசைவ உணவு சாப்பிட்டுவிட்டு தரிசனம் செய்வதை நியாயப்படுத்த முடியாது.

    எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வைப் பார்த்து பயப்படுகின்றன. அதனால்தான் மெகா கூட்டணி அமைக்க முயற்சி செய்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். #SakshiMaharaj
    மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதை தடை செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என மக்களவையில் பா.ஜ.க. எம்பி வலியுறுத்தினார். #PopulationControlLaw
    புதுடெல்லி:

    மத்திய பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி. உதய் பிரதாப் சிங், மக்களவையில் இன்று ஜீரோ அவரில்  பேசியதாவது:-

    நாட்டில் மக்கள் தொகை பெருகி வருவதால் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சீனா உள்ளிட்ட நாடுகள் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. அதேபோன்று இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதை தடுக்கவும் வகை செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும்.



    பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்திய அரசால், இதுபோன்ற சட்டத்தையும் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PopulationControlLaw
    நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் முதல் மந்திரியாகி விடுவேன் என பிரபல பாலிவுட் நடிகையும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எம்.பியுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார். #Hemamalini #BJP
    ஜெய்ப்பூர்:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதி எம்.பியாக பதவி வகித்து வருபவர் பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி. இவர் சமீபத்தில்
    ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாராவில் ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்போது செய்தியாளர்கள் சிலர் ஹேமமாலினியிடம் கேள்விகள் கேட்டனர். அதில் ஒன்று, உத்தரப்பிரதேச முதல் மந்திரியாக விருப்பமா? என்றனர்.

    அதற்கு பதிலளித்த ஹேமமாலினி, எம்.பி ஆவதற்கு முன்னரே பா.ஜ.க.வின் கட்சி பணிகளால் ஈடுபட்டுள்ளேன். நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை அது என் சுதந்திரத்திற்கு முடிவாக அமைந்துவிடும் என தெரிவித்தார்.
     
    மேலும், பிரதமர் மோடி பெண்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் உழைத்து வருகிறார். மோடி போன்ற பிரதமரை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது அவ்வளவு சிறப்பானவர் அவரது ஆட்சியின் கீழ் அனைவரும் வளர்ச்சி அடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். யார் தேசத்திற்காக அதிகம் உழைக்கிறார்கள் என்பதையே முதலில் பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் முதல் மந்திரியாகி விடுவேன் என பிரபல பாலிவுட் நடிகையும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எம்.பியுமான ஹேமமாலினி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. #Hemamalini #BJP
    ×