என் மலர்
நீங்கள் தேடியது "board exam"
- பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. தேர்வை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றிலிருந்து 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்துத் தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறைகளில் உச்சம் தொட வாழ்த்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பத்து, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.
- 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2025, பிப்ரவரி 15-ல் தொடங்கி மார்ச் 18 வரை நடைபெறுகிறது.
புதுடெல்லி:
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்து வந்தது.
இந்நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025, பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிப்ரவரி 15-ம் தேதி ஆங்கிலம், 20-ம் தேதி அறிவியல், 27-ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறும்.
மார்ச் 10-ம் தேதி கணிதம், 13-ம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதேபோல், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொழிற்கல்வி பாட தேர்வுகளுடன் தொடங்குகிறது.
பிப்ரவரி 21-ம் தேதி இயற்பியல், 24-ம் தேதி புவியியல், 27-ம் தேதி வேதியியல் தேர்வுகள் நடைபெறுகிறது.
பொதுத்தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இயற்பியல் தேர்வு நடைபெற்றது. தேர்வில் காப்பியடிப்பதைத் தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் சென்று கண்காணித்தனர்.

மேலும், தேர்வு மையத்தில் இருந்து, விடைகள் எழுதப்பட்ட பேப்பர்கள், துப்பாக்கி மற்றும் செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட 17 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 17 பேரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். #UPBoardExam