என் மலர்
நீங்கள் தேடியது "Boeing"
- போயிங் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கை இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தில் எதிரொலிக்கும்.
- மொத்த ஆட்குறைப்பில் 3-ல் ஒரு பங்கு டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதாரம் மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது.
இதன் விளைவாக பெரும் நிதியிழப்பை சந்தித்து வரும் உலகின் முன்னணி நிறுவனங்கள் செலவினங்களை குறைக்கும் விதமாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக கூகுள், பேஸ்புக், டுவிட்டர், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் கொத்து, கொத்ததாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' நிறுவனமும் ஆட்குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விமானங்கள் மட்டும் இன்றி ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வரும் போயிங் நிறுவனம், சமீப ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
குறிப்பாக போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான 'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானங்கள் இரண்டு, 5 மாத இடைவெளியில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதும், இந்த விபத்துகளுக்கு விமானத்தின் வடிவமைப்பே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்ததும் போயிங் நிறுவனத்துக்கு பேரடியாக அமைந்தது.
இந்த நிலையில் போயிங் நிறுவனத்தில் நிதி மற்றும் மனித வளங்கள் பிரிவில் பணியாற்றும் 2 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் வளங்களை தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு குவிக்கும் வகையில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போயிங் நிறுவனத்தின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்திலும் எதிரொலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, மொத்த ஆட்குறைப்பில் 3-ல் ஒரு பங்கு டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் வழங்கப்பட்டவில்லை.
இதனிடையே அலுவலக பணியில் ஆட்குறைப்பு செய்யும் அதேவேளையில் பொறியியல் மற்றும் உற்பத்தி பிரிவில் பணியாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் போயிங் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் உற்பத்தி பிரிவில் 15 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தியதாகவும், இந்த ஆண்டு மேலும் 10 ஆயிரம் பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் போயிங் நிறுவனம் தெரிவித்தது.
- போயிங் தலைமை செயல் அதிகாரி தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
- ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை தொடர்கிறோம்.
உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் அதிரடி பணிநீக்க நடவடிக்கையை துவங்கியுள்ளது. உலகம் முழுக்க பணியாற்றி வரும் போயிங் ஊழியர்களில் 10 சதவீதம் பேர், சுமார் 17 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி ஜனவரி மாத மத்தியில் பணிநீக்க நடவடிக்கை அமலுக்கு வரவுள்ளது.
பணிநீக்க நடவடிக்கையில் தெற்கு கரோலினா மற்றும் வாஷிங்டன் ஆலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். பணிநீக்க நடவடிக்கை தொடர்பாக போயிங் தலைமை செயல் அதிகாரி தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், "நாங்கள் ஏற்கனவே அறிவித்தப்படி நிதி சார்ந்த திட்டங்கள் மற்றும் முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஏற்ற வகையில் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை தொடர்கிறோம். சந்தையில் போட்டித்தன்மையை தொடர்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால மதிப்புகளை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை முக்கியமான ஒன்று ஆகும்," என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் பிரிவை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விமானப்படைக்கு நவீன ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக அமெரிக்கா மற்றும் அந்த நாட்டு விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்குடன் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
பல்லாயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய விமானப்படைக்கு 22 அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்கள் தயாரித்து வழங்க போயிங் முன்வந்தது. இந்த ஹெலிகாப்டர்களின் முதல் தொகுப்பை இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி இதில் முதல் ஹெலிகாப்டரை போயிங் நிறுவனம் தற்போது இந்திய விமானப்படைக்கு வழங்கி உள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்துக்கு உட்பட்ட மேசா பகுதியில் அமைந்திருக்கும் போயிங் விமான உற்பத்திப்பிரிவில் வைத்து முறைப்படி இந்த தாக்குதல் ஹெலிகாப்டர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஏ.எச்-64 இ (1) என்ற ரகத்தை சேர்ந்த இந்த அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை ஏர் மார்ஷல் புடோலா தலைமையிலான இந்திய விமானப்படை குழுவினர் பெற்றுக் கொண்டனர். அப்போது போயிங் நிறுவன பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.
இந்த ஹெலிகாப்டரை இயக்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அலபாமாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர்தான் இந்திய விமானப்படையிலும் மேற்படி ஹெலிகாப்டர்களை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய விமானப்படைக்கான எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த ஹெலிகாப்டர்களில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பன்னோக்கு ரகத்தை சேர்ந்த இந்த அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்கள் மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் தரை இலக்குகளின் அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளில் போர் புரிய மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இந்த ஹெலிகாப்டர்கள் உதவியாக இருப்பதுடன், தரைப்படையினருக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் அவர்கள் கூறினர். இந்த அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்களால் விமானப்படையின் ஹெலிகாப்டர் பிரிவு மேலும் வலுவடையும் என அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டனர்.
இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் இருந்து 189 பேருடன் கடந்த மாதம் 29-ம் தேதி புறப்பட்டு சென்ற லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 20 நிமிடங்களில் சுமத்ரா தீவின் அருகே ஜாவா கடல் பகுதியில் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் சென்ற அனைவரும் உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் பலியானவர்களில் ஒருவர் ரியோ நன்டா பிராட்டாமா(26) விரைவில் மணக்கோலம் காண இருந்த ரியோ இறந்துபோன தகவல் அவருக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த மணப்பெண் வெளியிட்ட சில புகைப்படங்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பலரை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த பயணத்தின்போது நான் திரும்பி வராவிட்டாலும் உனது திருமண உடையுடன் எடுக்க இருந்த ‘போட்டோ ஷூட்’-டை தவற விட்டு விடாதே என தனது வருங்கால கணவர் ரியோ குறிப்பிட்டிருந்ததாக இன்ட்டா சியாரி(26) என்னும் அந்த பெண் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், போயிங் 737 ரகத்தை சேர்ந்த விபத்துக்குள்ளான விமானத்தில் பாதுகாப்பு தொடர்பான ஒரு முக்கிய தொழிநுட்ப பிரச்சனையை சரிசெய்ய போயிங் நிறுவனம் அக்கறை காட்டாததால் இந்த விபத்து நேர்ந்ததாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தோனேசியா விபத்தில் 189 உயிர்கள் பலியானதற்கு போயிங் நிறுவனத்தின் அஜாக்கிரதை தான் காரணம் என ரியோவின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.
போயிங் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Indonesiajetcrash #LionAirplanecrash #LionAirplanecrash