என் மலர்
நீங்கள் தேடியது "bowling"
- ஆகாஷ் அசோக் குமார் மற்றும் ஆந்திராவின் சுமதி நல்லபந்து ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
- அமீபா பௌலிங் மையத்தில் ARC 33வது தேசிய டென்பின் பௌலிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்றது.
பெங்களூரில் உள்ள அமீபா பௌலிங் மையத்தில் நடந்து முடிந்த ARC 33வது தேசிய டென்பின் பௌலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடகாவின் ஆகாஷ் அசோக் குமார் மற்றும் ஆந்திராவின் சுமதி நல்லபந்து ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
தனது ஏழாவது தொடர் இறுதிப் போட்டியில், கர்நாடகாவின் ஆகாஷ் டெல்லியின் ஷேக் அப்துல் ஹமீதை (425- 353) இரண்டு கேம் டைட்டில் மோதலில் எளிதாக வென்று 3வது பட்டத்தை வென்றார்.
ஸ்டெப்லேடர் சுற்று ஆட்டங்களில், 2 கேம்களின் மொத்த பின்ஃபால் அடிப்படையில், டெல்லியின் ஷேக் அப்துல் ஹமீத், டெல்லியின் துருவ் சர்தாவை (433-335) 98 பின்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
முதல் போட்டியில், டெல்லியின் துருவ் சர்தா, தமிழகத்தின் ஷபீர் தன்கோட்டை (412-372) வீழ்த்தினார்.
தமிழ்நாடு அணியின் ஷபீர் தன்கோட், கணேஷ் என்டி மற்றும் மஹிபால் சிங் ஆகியோர் முறையே 4, 5 மற்றும் 7வது இடத்தைப் பிடித்தனர்.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஆந்திராவின் சுமதி நல்லபந்து, கர்நாடகாவின் பிரீமல் ஜேவை (342–286) தோற்கடித்தார். இது சுமதியின் 4வது தேசிய கிரீடம்.
முன்னதாக, சுமதி (ஆந்திரப் பிரதேசம்) அனுராதா சர்தாவை (டெல்லி) தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் (356-272) மற்றும் ஆட்டம் 1 இல், சுமதி காஷ்மீர் குடாலேவை (மகாராஷ்டிரா) தோற்கடித்தார் (424-309)
விருதுகள் வழங்கப்பட்ட வீரர்கள் பின்வருமாறு.
சிறப்பு விருதுகள்:
1) மிகவும் நம்பிக்கைக்குரிய வீரர் - தனுஷ் ரெட்டி (கர்நாடகா)
2) 225க்கு மேல் பெற்ற அதிகபட்ச பின்பால்(ஆண்கள்) – ஷேக் அப்துல் ஹமீத் (டெல்லி) (11)
3) 200 ககு மேல் பெற்ற அதிகபட்ச பின்பால் (பெண்கள்) - ஷபீனா கஸ்மானி (மகாராஷ்டிரா) (4)
4) 6 விளையாட்டுகளில் அதிக பின்பால் (ஆண்கள்) - ஷேக் அப்துல் ஹமீத் (டெல்லி) (1359 பின்கள்)
5) 6 விளையாட்டுகளில் அதிக பின்பால் (பெண்கள்) - அனுராதா சாரதா(டெல்லி) (1081 பின்பால்)
6) பெர்ஃபெக்ட் கேம்- ஷேக் அப்துல் ஹமீத் (டெல்லி)
விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. 19-வது ஓவரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி வெற்றியை தன்வசப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் கடைசி ஓவரில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 2 பவுண்டரிகள் உள்பட 14 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் இந்திய அணி வெற்றி வாய்ப்பை தாரை வார்த்தது. எனவே உமேஷ் யாதவின் கடைசி ஓவர் பந்து வீச்சு குறித்து பலரும் கடும் விமர்சனம் செய்தனர்.
தோல்விக்கு பிறகு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடைசி ஓவரில் இதுபோல் நடக்க தான் செய்யும். எந்தவொரு சூழ்நிலையிலும் கடைசி கட்ட பந்து வீச்சு எப்பொழுதும் கடினமானது தான். இறுதி கட்ட பந்து வீச்சு இரண்டு வகையாகவும் போகும். உங்களது பந்து வீச்சில் சிறப்பாக முயற்சித்தாலும், தெளிவான திட்டத்துடன் பந்து வீசினாலும் சில நாட்களில் நமக்கு பலன் கிடைக்கும். சில நாட்களில் நினைத்த மாதிரியான பலன் கிடைக்காமலும் போகக்கூடும். எனவே அது பற்றி கவலைப்படக்கூடாது. நெருக்கமான போட்டி நிலவிய இந்த ஆட்டத்தில் எங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்க முயற்சித்தோம். ஆனால் அதற்கு தகுந்த பலன் கிடைக்கவில்லை.
‘டாஸ்’ வென்றது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமைந்தது. வெற்றி இலக்கு சிறியதாக இருந்ததால் ஆஸ்திரேலிய அணி ஒரு ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து விட்டால் அந்த ஓவரில் அடுத்த பந்துகளை ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டாத நிலை இருந்தது. நாங்கள் முதலில் ஆடியதால் நல்ல ஸ்கோரை எடுக்க அடித்து ஆட வேண்டிய நிலையில் இருந்தோம். இது தான் இந்த ஆட்டத்தில் இரண்டு அணிக்கும் இடையிலான வித்தியாசமாகும்.
இந்த ஆடுகளத்தில் 140 முதல் 145 ரன்கள் எடுத்து இருந்தால் மிகவும் நல்ல ஸ்கோராக இருந்து இருக்கும். உயரம் குறைவாக பந்து பவுன்ஸ் ஆனதால் பெரிய ஷாட் அடிப்பது கடினமாகி விட்டது. இதுபோன்ற ஆடுகளத்தில் சேசிங் செய்வது கடினமானதாகும். 15 முதல் 20 ரன்கள் நாங்கள் குறைவாக எடுத்தாலும் போட்டி அளிக்கக்கூடிய ஸ்கோரை எட்டினோம். நாங்கள் நினைத்ததை விட இரண்டு, மூன்று விக்கெட்டுகளை கூடுதலாக இழந்து விட்டோம். இந்த ஆடுகளத்தில் அதிக ஸ்கோர் எடுப்பது என்பது கடினமானதாகும். நாங்கள் எல்லா வகையிலும் சிறப்பான முயற்சி எடுத்தோம். டோனியும் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் கிரிக்கெட்டில் இது போல் நடக்க தான் செய்யும்.
லோகேஷ் ராகுல் நன்றாக பேட்டிங் செய்தார். புதிய ஷாட்களை அவர் விளையாடினார். அவரை போன்ற சிறந்த வீரர் பார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு நல்ல விஷயமாகும். கம்மின்ஸ் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி அடித்ததுடன், கடைசி பந்தில் 2 ரன் சேர்த்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். அவர் நம்பிக்கையுடன் விளையாடக்கூடிய திறமையான வீரர்.
இவ்வாறு ஜஸ்பிரித் பும்ரா கூறினார்.
43 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் அளித்த பேட்டியில், ‘உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெறுவேனா?. எந்த வரிசையில் நான் பேட்டிங் செய்வேன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வேன். இந்த ஆட்டத்தை போல் வரும் ஆட்டங்களிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற முடியும்.
இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றின.
இந்தியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்தியா எசக்ஸ் அணியுடன் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது.

5 டெஸ்ட் தொடர் என்பதால் நீண்ட நாட்கள் நடைபெறும். அனைத்து பவுலர்களும் தொடர்ந்து உடல் தகுதியுடன் இருப்பது அவசியம். இந்த டெஸ்ட்டில் தொடர்ந்து இந்திய அணி சிறப்பாக ஆடும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர் ஆகிய 5 வேகப்பந்து வீரர்கள் உள்ளனர். இதில் பும்ரா உடல் தகுதியுடன் இல்லை. இஷாந்த், உமேஷ், முகமது ஷமி ஆகிய 3 பேர், 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் வலியுறுத்தி உள்ளார். #ENGvIND #TeamIndia #ZaheerKhan