என் மலர்
நீங்கள் தேடியது "Brahmin"
- சனாதன தர்மத்தைப் பாதுகாக்க பிராமண தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் பெறுவது முக்கியம்.
- நமது வருங்கால தலைமுறையை காக்க வேண்டியது உங்கள் கடமை
மத்தியப் பிரதேசத்தில் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அம்மாநில அரசின் பிராமண நலவாரியத் தலைவர் விஷ்ணு ரஜவுரியா அறிவித்துள்ளார்.
இந்தூரில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா, "சனாதன தர்மத்தைப் பாதுகாக்க பிராமண தம்பதிகள் நான்கு குழந்தைகளைப் பெறுவது முக்கியம். அதனால் அவர்களில் ஒருவர் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், குடும்பத்திற்காக சம்பாதிக்க முடியும் மற்றும் 'மோட்ச தர்மத்தை' அடைய முடியும்.
நாடு நாளுக்கு நாள் முன்னேறி வருவதால், இந்தியாவில் வளங்களுக்குப் பஞ்சமில்லை. நம்மிடம் வலுவான மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசாங்கம் உள்ளது.
வறுமை மற்றும் பணவீக்கம் தொடர்பான பிரச்சனைகளை நாம் பேசக்கூடாது. சமீபகாலமாக 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். வலிமையான தேசத்தை உருவாக்கி வருகிறோம். எனவே சனாதன தர்மத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். .
கல்விதான் முக்கியம் என கற்பிக்கப்படுவதால் இளம் தலைமுறையினர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்கின்றனர். நமது வருங்கால தலைமுறையை காக்க வேண்டியது உங்கள் கடமை" என்று தெரிவித்துள்ளார்.
சென்னை:
தேடிக்கிட்டே இருக்கிறோம் இன்னும் பெண் கிடைக்கவில்லை என்று பலர் சொல்ல கேட்டிருக்கலாம். பிராமணர் சமூகத்தில் தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் இளைஞர்கள் பெண் கிடைக்காமல் தவித்து கொண்டிருப்பதாக பிராமணர் சங்க தலைவர் நாராயணன் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிராமண பெண்களை தேடுவதற்காக ஒரு அமைப்பே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி படிக்கவும், பேசவும் தெரிந்தவரை இதற்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட உள்ளார்.
30 முதல் 40 வயதுக்குட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பிராமண இளைஞர்கள் மணப்பெண்களை கண்டுபிடிக்க முடியாததால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமண வயதில் 10 பிராமண ஆண் குழந்தைகள் இருந்தால், தமிழகத்தில் திருமண வயதில் ஆறு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர்.
எனவே லக்னோ மற்றும் பாட்னாவில் உள்ள மக்களுடன் தான் தொடர்பு கொண்டு வருகிறார்கள். பிராமணர்கள் மத்தியில் இந்த நடவடிக்கையை வர வேற்றாலும், வேறு கருத்துக்களும் உள்ளன.
திருமண வயதில் தமிழ் பிராமணப் பெண்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்றாலும் ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைக்காததற்கு இது ஒன்றே காரணம் அல்ல.
மணமகன்களின் பெற்றோர்கள் திருமணங்களில் ஆடம்பர நிகழ்ச்சியையும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் திருமணத்தை எளிமையான முறையில் நடத்துவதற்கு எது தடையாக இருக்கிறது? ஏன் கோவிலோ அல்லது வீட்டிலோ செய்யக் கூடாது?.
இன்றைய காலத்திலும் கூட, தமிழ் பிராமண திருமணங்கள் இரண்டு முதல் 3 நாட்கள் வரை நீட்டிக்கப்படுகின்றன. இதில் வரவேற்பு மற்றும் பிற திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய சடங்குகள் அடங்கும்.
நகைகள், திருமண மண்டபத்தின் வாடகை, உணவு மற்றும் பரிசுப் பொருட்களுக்கான செலவுகள் உள்பட மொத்தமாக இந்த நாட்களில் குறைந்த பட்சம் ரூ. 12 முதல் 15 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும் என்றார்.
சந்தேகத்திற்கு இடமின்றி இது மணமகளின் குடும்பத்திற்கு மிகப்பெரிய பொருளாதாரச் சுமையாகும். சிலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை செலவிடுவார்கள். மற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடனில் மூழ்கி இருப்பார்கள்.
இங்கே நாம் செலவு செய்யக்கூடியவர்களைப் பற்றி பேசவில்லை. பிரச்சினை என்னவென்றால், அத்தகைய செல்வந்தர்கள் ஒரு அளவுகோலை நிர்ணயிப்பார்கள். அதை வாங்க முடியாதவர்களும் பின்பற்ற வேண்டும் என்று சமூகம் விரும்புகிறது.
இதில் மோசமாக பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கம், கீழ் நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை பிராமணர்கள். ஏழை பிராமணக் குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக பல வருடங்களாக போராடுவதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.
நன்றாக செயல்படுபவர்கள் தங்கள் ஈகோவைக் கைவிட தயாராக இருந்தால் அவர்கள் தமிழ்நாட்டில் மணப்பெண்களைக் காணலாம் என்றார்.
சில ஆண்டுகளுக்கு முன் ஐயங்கார் சமூகத்தில் தென்கலை, வடகலை பிரிவினருக்கு இடையே திருமணங்கள் நடக்காமல் இருந்தது. இன்று அதுவும் நடக்கிறது. சங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் சிலர் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்...திருவண்ணாமலையில் மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது
சென்னை:
ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டின் காவலாளிகள் என பிரதமர் மோடி தெரிவித்தார். இதையடுத்து நானும் காவலாளி தான் என்ற ஒரு பிரசாரத்தை பா.ஜ.க.வினர் தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் டுவிட்டரில் சவுக்கிதார் (காவலாளி) நரேந்திர மோடி என பெயரை மாற்றி உள்ளார். அமித்ஷா, அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் தங்களது பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என மாற்றி உள்ளனர்.
இந்த நிலையில் ஒரு தனியார் டி.வி.க்கு பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சவுக்கிதார் என்ற பெயர் மாற்றத்தை கட்சியினர் செய்து வர நீங்கள் மட்டும் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சுப்பிரமணியசாமி சர்ச்சையான பதிலை அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
நான் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் காவலாளி ஆக முடியாது. பிராமணர்கள் காவலாளிகளாக முடியாது.
இதுதான் உண்மை. நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே காவலாளிகளின் பணியாகும். இதைதான் சவுக்கிதார்களிடம் எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அதனால் நான் காவலாளியாக முடியாது.
இவ்வாறு அவர் சர்ச்சையாக கூறியுள்ளார். #SubramanianSwamy #BJP