என் மலர்
நீங்கள் தேடியது "Brahmotsavam Festival"
- பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு அலங்கார ரூபத்தில் சாமி அம்பாள் எழுந்தருள, வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சம்பந்த விநாயகர், உண்ணாமலை சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கொட்டும் பணியையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு வழிபட்டனர்.
உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி அம்பாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர்.
மாட்டு பொங்கல் தினத்தன்று சாமி அம்பாள் அருணாசலேஸ்வரர் கோவில் திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சி தந்து மாட வீதியில் வலம் வருவர். மாடவீதியில் 3 முறை வலம் வந்த பின்னர் மாலையில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெறும்.
மாட்டுப் பொங்கல் தினத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தியம் பெருமான் பலகாரங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தருவார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அன்னதானத்திட்ட அதிகாரி வேணுகோபால் கூறியதாவது:-
பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம், குடிநீர், மோர், காபி, டீ, பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. திருமலையில் உள்ள தறிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் தினமும் காலை 8 மணியில் இருந்து இரவு 12 மணிவரை அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதுதவிர திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 1,2,3,4 ஆகியவற்றில் நிரந்தரமாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருமலையில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிகள் அருகில், தரிசன கவுண்ட்டர்கள், நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகள், திருப்பதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் கதம்பம், சாம்பார், தயிர், புளிசாதம், உப்புமா ஆகிய உணவுகள் வழங்கப்படுகின்றன. ஆக மொத்தம் பிரம்மோற்சவ விழாவையொட்டி தினமும் 1 லட்சம் பக்தர்களுக்குமேல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
பிரம்மோற்சவ விழா தொடக்க நாளான 13-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை 6 நாட்கள் மொத்தம் 16 லட்சத்து 16 ஆயிரம் பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. கருடசேவை அன்று 5 லட்சத்து 76 ஆயிரம் பக்தர்களுக்கு உணவும், 3 லட்சம் மோர் பாக்கெட்டுகளும், 3 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. தினமும் 10 டன் காய்கறிகளை பக்தர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
13-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை 7 நாட்களாக மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 826 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். #Tirupati #Brahmotsavam