என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BSF"

    சர்வதேச எல்லையைக் கடந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். #IndoPakInternationalBorder #PakNationalHeld #BSF
    புதுடெல்லி:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பனாஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் ஒருவர் நேற்று மாலை நுழைய முயன்றுள்ளார். இதனைக் கவனித்த இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர், அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.

    சிந்தி மொழி பேசிய அந்த நபர், பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அலி (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கட்ச் மாவட்டம் பலசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவரிடம் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை.



    இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது சம்பவம் இது. கடந்த 6ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தானியர், எல்லையைக் கடந்து இந்திய பகுதிக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IndoPakInternationalBorder #PakNationalHeld #BSF

    ஜம்மு காஷ்மீரில் உள்ள அக்னூர் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர். #Jammu#Akhnoor #BSF
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள அக்னூர் பகுதியில் போதை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அக்னூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது சுமார் 3 கிலோ எடையிலான ஹெராயின் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் என்றும், தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #Jammu#Akhnoor #BSF
    திரிபுரா மாநிலத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 258.5 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பாதுகாப்பு படை மற்றும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். #Tripura #CannabisCaptured
    அகர்டலா:

    திரிபுரா மாநிலம் ஆடாம்பூர் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இந்த தகவலை அடுத்து, போலீசாருடன் அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டில் சிறிய அளவில் சுரங்கம் ஒன்றை ஏற்படுத்தி அதனுள் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர்.



    கைப்பற்றப்பட்ட கஞ்சா 258.5 கிலோ அளவிலான எடை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் மீது போதைமருந்து தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #Tripura #CannabisCaptured
    மேற்கு வங்காள மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், இருவேறு எல்லைப்பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் எடை ஒன்றரை கிலோவுக்கும் அதிகமானதாக உள்ளது. #WestBengal
    கொல்கத்தா:

    வங்காள தேசத்தில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் வழியாக தங்கம், போதை மருந்துகள் போன்றவை கடத்தப்படுவது அடிக்கடி நடந்துவருகிறது. இதனை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அமுதியா எல்லைப்பகுதியில் இருந்து 384.325 கிராம் கடத்தல் தங்கத்தை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 12 லட்சத்து 33 ஆயிரத்து 684 என கணக்கிடப்பட்டுள்ளது.

    இதேபோல், கோஜடாங்கா எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 39 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை ஆயிரத்து 300 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கம் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #WestBengal
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் உடனான என்கவுண்டரில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒரு வீரர் படுகாயமடைந்துள்ளார்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், ஒரு வீரர் படுகாயங்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    போர் நிறுத்தத்தின் புனிதத்தை பாகிஸ்தான் எப்போதுமே மதித்ததில்லை என எல்லை பாதுகாப்பு படை உதவி இயக்குனர் ஜெனரல் கமல்நாத் சவுபே தெரிவித்துள்ளார். #BSF #ADG #KamalNathChoubey #PakistanCeasefire
    ஜம்மு: 

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

    இதற்கிடையே, ஜம்முவின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.   இதில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும், 3 வீரர்கள் காயம் அடைந்தனர். 



    இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை உதவி இயக்குனர் ஜெனரல்  கமல்நாத் சவுபே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    போர் நிறுத்தம் என்பது இருநாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தம். நாம் அந்த ஒப்பந்தத்தை மதித்து நடந்து வருகிறோம். ஆனால், பாகிஸ்தான் போர் நிறுத்தத்தின் புனிதத்தை எப்போதுமே மதிப்பதில்லை என தெரிவித்துள்ளார். #BSF #ADG #KamalNathChoubey #PakistanCeasefire
    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீற மாட்டோம் என்று அடிக்கடி கூறும் பாகிஸ்தானை நம்பவே முடியாது என்பதை இன்றைய துப்பாக்கிச் சூடு நிரூபித்துள்ளதாக எல்லைப் பாதுக்காப்பு படை ஐ.ஜி. குறிப்பிட்டுள்ளார். #PakCeasefireviolation
    ஜம்மு:

    இந்தியா-பாகிஸ்தான் இடையே உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    இந்நிலையில், எல்லைப்பகுதி துப்பாக்கிச் சூட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இருநாடுகளை சேர்ந்த ராணுவ செயல்பாட்டு பிரிவு டைரக்டர் ஜெனரல்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சில முடிவுகள் எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த இரு வீரர்கள் உயிரிழந்தனர். 

    பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் தொடர்பாக ஜம்மு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய எல்லைப் பாதுக்காப்பு படையின் ஜம்மு பகுதி ஐ.ஜி. ராம் அவ்தார், ‘போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீற மாட்டோம் என்று அடிக்கடி கூறும் பாகிஸ்தானை நம்பவே முடியாது என்பதை இன்றைய துப்பாக்கிச் சூடு நிரூபித்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

    இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு நிச்சயமாக போர் நிறுத்த மீறலாகும். இதற்கு நாமும் தக்க பதிலடி கொடுத்துள்ளோம். இதில் எதிர்தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? என்பதை யூகிக்க இயலவில்லை. எனினும், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை பாதிக்காத வகையில் இன்றைய பதில் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். #PakCeasefireviolation 
    குஜராத் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக இன்று இந்தியாவுக்குள் நுழைந்தவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். #Pakistanimannabs #BSF
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம், கவாடா பகுதியில் உள்ள 
    இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, ரான் என்ற இடத்தில் உள்ள எல்லை கம்பம் 1085 மற்றும் 1090-க்கு இடைப்பட்ட பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஒருவர் நுழைய முயன்றதை கண்டு அவரை மடக்கிப் பிடித்தனர்.

    பிடிபட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனது பெயர் ராஜு என்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்த கைபேசியும் மூன்று சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. #Pakistanimannabs #BSF
    ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் தாக்குதலை நிறுத்தும்படி இந்திய படையினருக்கு வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான் படையினர், மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.#JKFiring #CeasefireCiolation #PakistanTroops #PleadForCeasefire
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில்  மட்டும் 700 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 18 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 38 பேர் பலியாகி உள்ளனர்.

    பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம் அழிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர்.

    இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பகுதியில் பதுங்கு முகாமில் ஏற்பட்ட சேதத்தின் வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.

    இவ்வாறு வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் மீண்டும் முன்னறிவிக்கப்படாத துப்பாக்கி சூடு தாக்குதலை நேற்றிரவு 10.30 மணியளவில் நடத்தியுள்ளனர். சிறிய ரக ஆயுதங்களை கொண்டு ராம்கார் பிரிவில் நாராயணபூர் பகுதியில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தினர்.  இதில் எல்லை பாதுகாப்பு படையினரின் முகாம்கள் மற்றும் கிராமங்கள் இலக்கிற்கு உள்ளாகின.

    இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் ராணுவத்தினரை கட்டுப்படுத்த பதில் தாக்குதல் நடத்தினர்.  தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்து வருகிறது.  இதில் சேதவிவரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

    இதேபோல் ஆர்னியா செக்டாரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று காலை 7 மணியளவில் பாகிஸ்தான் படையினர் தாக்குதலைத் தொடங்கினர். 3 இந்திய நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் கூடுதலாக இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு, பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டையில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. #JKFiring #CeasefireCiolation #PakistanTroops #PleadForCeasefire
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் மீது நேற்றிரவு பாகிஸ்தான் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். #PakistanTroops #SambaCeasefire #JammuAndKashmir

    ஸ்ரீநகர்: 

    ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில்  மட்டும் 700 முறை அது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 18 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 38 பேர் பலியாகி உள்ளனர். 

    இதனால் ஆத்திரமடைந்த எல்லைப்பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடியை கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம் அழிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். 

    இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பகுதியில் பதுங்கு முகாமில் ஏற்பட்ட சேதத்தின் வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது. 

    இந்நிலையில், பாகிஸ்தான் படையினர் நேற்றிரவு மீண்டும் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் மீது நேற்றிரவு பாகிஸ்தான் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவீசி தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய படையினர் பதிலடி கொடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் யாரும் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை. #PakistanTroops #SambaCeasefire #JammuAndKashmir
    சர்வதேச எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதலை நிறுத்தும்படி இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #PakistanTroops #BSF #PleadForCeasefire

    ஸ்ரீநகர்: 

    ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில்  மட்டும் 700 முறை அது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 18 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 38 பேர் பலியாகி உள்ளனர். 

    இதனால் ஆத்திரமடைந்த எல்லைப்பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடியை கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம் அழிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். 



    இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பகுதியில் பதுங்கு முகாமில் ஏற்பட்ட சேதத்தின் வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது. #PakistanTroops #BSF #PleadForCeasefire
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார். #CeaseFireViolation #BSF #SambaSector
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டார் அருகே எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளை குறிவைத்து இன்று காலை தாக்கியது. துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகளால் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை காவலர் தேவேந்திர குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ×