search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Capital Structure Works"

    • சந்திரபாபு நாயுடு அமராவதி சென்று பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தலைநகர் கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இன்று முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அமராவதி சென்று பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அமராவதி சுற்றுசாலைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு கட்டப்படும் வீட்டு வளாகங்கள் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை பார்வையிட்டார்.

    ஏற்கனவே அமராவதியில் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அந்த பணிகளையும் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பதவியேற்றதும் போல வரம் திட்டம் நடைபெறும் இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களை மீண்டும் கொண்டு வந்து செயல்படுத்தவும் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

    ×