என் மலர்
நீங்கள் தேடியது "Chandrasekhar Rao"
தெலுங்கானா மாநில சட்டசபையில் ஆளும் கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். #TelanganaElections #ChandrashekharRao
ஐதராபாத்:
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.
இதற்கிடையே, தெலுங்கானாவில் கடந்த 7-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம் எல் ஏக்களின் கூட்டம் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் தெலுங்கானா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சந்திரசேகர ராவ் தனது ஆதரவாளர்களுடன் தெலுங்கானா மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் என தெரிகிறது. #TelanganaElections #ChandrashekharRao
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதால் ஆட்சியை தக்கவைக்க வாய்ப்பு உள்ளது. #Results2018 #TelenganaElections #ChandrasekharRao
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 10.30 மணி நிலவரப்படி சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) 86 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. முதல்வர் சந்திரசேகர ராவ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 5 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்தது. ஆட்சி அமைக்க 60 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், அதைவிட அதிக தொகுதிகளில் டிஆர்எஸ் வெற்றியை நெருங்குகிறது. எனவே கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதேபோல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. #Results2018 #TelenganaElections #ChandrasekharRao
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, முதல்-மந்திரியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பா.ஜனதா ஆகிய 3 அணிகளுக்கிடையே போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 43 மையங்களில் எண்ணப்பட்டு தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன.

காலை 10.30 மணி நிலவரப்படி சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) 86 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. முதல்வர் சந்திரசேகர ராவ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 5 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்தது. ஆட்சி அமைக்க 60 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், அதைவிட அதிக தொகுதிகளில் டிஆர்எஸ் வெற்றியை நெருங்குகிறது. எனவே கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதேபோல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. #Results2018 #TelenganaElections #ChandrasekharRao
அமித்ஷாவுக்கு மாட்டுக்கறி பிரியாணி அனுப்ப வேண்டும் என சந்திரசேகரராவுக்கு ஒவைசி எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். #AsaduddinOwaisi #AmitShah #ChandrasekharRao
ஐதராபாத்:
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து அங்கு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சந்திரசேகராவின் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி, காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி, பா.ஜனதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவை இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆதிலாபாத்தில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பேசும் போது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியை கடுமையாக சாடினார். அக்கட்சியுடன், சந்திரசேகரராவின் கட்சி ரகசியமாக நட்பு வைத்து உள்ளது. மஜ்லிஸ் கட்சியினருக்கு சந்திரசேகரராவ் பிரியாணியை அனுப்புகிறார் என்று கூறினார்.
இதற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
குகட்பாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒவைசி பேசியதாவது:-

பிரதமர் மோடி திடீரென்று பாகிஸ்தானுககு சென்று முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மோடியை நவாஸ்செரீப் விருந்துக்கு அழைக்கவில்லை. ஆனால் நவாஸ்செரீப் கையை பிடித்தபடி அவரது வீட்டுக்குள் மோடி சென்றார். அப்போது அங்கு என்ன சாப்பிட்டார் என்பதை அமித்ஷாவிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #AsaduddinOwaisi #AmitShah #ChandrasekharRao
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து அங்கு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சந்திரசேகராவின் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி, காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி, பா.ஜனதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவை இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆதிலாபாத்தில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பேசும் போது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியை கடுமையாக சாடினார். அக்கட்சியுடன், சந்திரசேகரராவின் கட்சி ரகசியமாக நட்பு வைத்து உள்ளது. மஜ்லிஸ் கட்சியினருக்கு சந்திரசேகரராவ் பிரியாணியை அனுப்புகிறார் என்று கூறினார்.
இதற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
குகட்பாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒவைசி பேசியதாவது:-
பிரியாணி மீது உங்களுக்கு (பா.ஜனதா) திடீரென்று பாசம் ஏன் வந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. சந்திரசேகரராவிடம் டெலிபோனில் பேசி அமித்ஷாவுக்கு மாட்டுக்கறி பிரியாணி அனுப்ப கேட்டுக்கொள்வேன்.

பிரதமர் மோடி திடீரென்று பாகிஸ்தானுககு சென்று முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மோடியை நவாஸ்செரீப் விருந்துக்கு அழைக்கவில்லை. ஆனால் நவாஸ்செரீப் கையை பிடித்தபடி அவரது வீட்டுக்குள் மோடி சென்றார். அப்போது அங்கு என்ன சாப்பிட்டார் என்பதை அமித்ஷாவிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #AsaduddinOwaisi #AmitShah #ChandrasekharRao
ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஒரு மனநோயாளி என்று விகாராபாத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் சந்திரசேகர் ராவ் பேசினார். #ChandrasekharRao #ChandrababuNaidu
ஐதராபாத்:
தெலுங்கானாவில் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. விகாராபாத் மாவட்டத்தின் பார்கி பகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் காபந்து முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் உரையாற்றினார்.
அப்போது அவர் ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை மிகவும் கடுமையாக விமர்சித்தார். மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த உரையில் அவர் கூறியதாவது:-
சந்திரபாபு நாயுடு ஒரு மனநோயாளி என நான் கூறுகிறேன். ஏனெனில் ஒருமுறை அவர், காடுகளை பாதுகாப்பதற்காக ஆடுகளுக்கு தடை விதிப்பேன் என்று கூறினார். ஆனால் ஆட்டினம் எப்போது தோன்றியது? அவர் எப்போது பிறந்தார்? இயற்கையின் படைப்பை தடை செய்வதற்கு நீங்கள் யார்?

ஐதராபாத்தை உலக வரைபடத்தில் சேர்ப்பதற்கு அவர் ஒரு கருவியாக இருந்ததாக கூறியிருக்கிறார். இந்த மனிதரை என்ன செய்வது? அவ்வளவு திறமை பெற்றவராக இருந்தால், அமராவதியை கட்டமைப்பதில் ஏன் தோல்வியுற்றார்? வெறும் கிராபிக்ஸ் மாதிரியை தவிர உண்மையான கட்டிடங்கள் எதுவும் அங்கு அமைக்கப்படவில்லை.
இது போன்ற மோசடி பேர்வழிகள் வாக்கு கேட்டு உங்களிடம் வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் கவனமாக இல்லையென்றால் ஏமாற்றப்படுவோம்.
இவ்வாறு சந்திரசேகர் ராவ் கூறினார்.
மேலும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தெலுங்கானா ஜன சமிதி, இந்திய கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளையும் அவர் கடுமையாக தாக்கினார். அவரது இந்த பேச்சு தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ChandrasekharRao #ChandrababuNaidu
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ரூ.22 கோடி சொத்து உள்ளதாக தனது வேட்புமனு தாக்கலில் தெரிவித்து உள்ளார். #ChandrasekharRao
நகரி:
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது.
இதில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தீவிரமாக உள்ளது.
முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கெஜ்லால் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் சந்திரசேகரராவ் தனது சொத்து கணக்குகளை தெரிவித்து உள்ளார்.
அவருக்கு ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தான் விவசாய தொழில் செய்து வருவதாகவும், ஆண்டு வருமானம் ரூ.31.5 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய தொழிலில் ரூ.3.2 கோடியை முதலீடு செய்து உள்ளதாகவும், பண்ணை வீடுகள் மதிப்பு ரூ.6.5 கோடி என்றும் தெரிவித்துள்ளார். ரொக்கமாக ரூ.1.3 கோடி இருப்பதாக கூறி உள்ளார்.
மேலும் அவர் தனியார் கம்பெனிகளிலும் முதலீடு செய்துள்ளார்.
சந்திரசேகரராவ் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது கட்சியின் சின்னம் கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சந்திரசேகரராவுக்கு சொந்தமாக கார் இல்லை என்பது சுவாரசியமாக பார்க்கப்படுகிறது.
அவரிடம் கார் இல்லாமல் இருந்தாலும் அவரது பாதுகாப்புக்காக அரசு சார்பில் சொகுசு கார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
சந்திரசேகரராவ் ரூ.2.4 லட்சத்துக்கு நகைகள் வைத்துள்ளார். அவரது மனைவிக்கு ரூ.96 லட்சம் மதிப்பில் நகை இருக்கிறது. அவரது மகன் கே.டி.ராமராவ் ரூ.84 லட்சமும், மருமகள் ஷலிமா ரூ.24 லட்சமும் ரொக்கம் வைத்துள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்த சந்திரசேகர ராவ் ரூ.15 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது 4 வருடத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.7 கோடி உயர்ந்துள்ளது.
இதேபோல் 2014-ம் ஆண்டு 37 ஏக்கர் நிலம் இருந்ததாக தெரிவித்து இருந்தார். தற்போது 54 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கிறார். #ChandrasekharRao
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது.
இதில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தீவிரமாக உள்ளது.
முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கெஜ்லால் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் சந்திரசேகரராவ் தனது சொத்து கணக்குகளை தெரிவித்து உள்ளார்.
அவருக்கு ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தான் விவசாய தொழில் செய்து வருவதாகவும், ஆண்டு வருமானம் ரூ.31.5 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய தொழிலில் ரூ.3.2 கோடியை முதலீடு செய்து உள்ளதாகவும், பண்ணை வீடுகள் மதிப்பு ரூ.6.5 கோடி என்றும் தெரிவித்துள்ளார். ரொக்கமாக ரூ.1.3 கோடி இருப்பதாக கூறி உள்ளார்.
மேலும் அவர் தனியார் கம்பெனிகளிலும் முதலீடு செய்துள்ளார்.
சந்திரசேகரராவ் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது கட்சியின் சின்னம் கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சந்திரசேகரராவுக்கு சொந்தமாக கார் இல்லை என்பது சுவாரசியமாக பார்க்கப்படுகிறது.
அவரிடம் கார் இல்லாமல் இருந்தாலும் அவரது பாதுகாப்புக்காக அரசு சார்பில் சொகுசு கார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
சந்திரசேகரராவ் ரூ.2.4 லட்சத்துக்கு நகைகள் வைத்துள்ளார். அவரது மனைவிக்கு ரூ.96 லட்சம் மதிப்பில் நகை இருக்கிறது. அவரது மகன் கே.டி.ராமராவ் ரூ.84 லட்சமும், மருமகள் ஷலிமா ரூ.24 லட்சமும் ரொக்கம் வைத்துள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்த சந்திரசேகர ராவ் ரூ.15 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது 4 வருடத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.7 கோடி உயர்ந்துள்ளது.
இதேபோல் 2014-ம் ஆண்டு 37 ஏக்கர் நிலம் இருந்ததாக தெரிவித்து இருந்தார். தற்போது 54 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கிறார். #ChandrasekharRao
பிரதமர் மோடி எனக்கும், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று தெலுங்கு தேசம் செயல் வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக பேசினார்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது. அதில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
“பா.ஜனதா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள். ஏனெனில் 2 தெலுங்கு மாநிலங்களுக்கும் மத்தியில் ஆளும் தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அநீதி இழைத்துள்ளது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் முழு ஆதரவுடன் பா.ஜனதா அரசு செயல்படுகிறது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அவற்றை பயன்படுத்தியது. ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் விரைவிலோ அல்லது பின்னரோ பயன்படுத்தும். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தெலுங்கானாவில் தேசிய நீர்பாசன திட்டத்தை அமல்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது.

எனக்கும், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவுக்கும் இடையே பிரச்சினைகளை உருவாக்கி மோதல் ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி தெலுங்கானா, தெலுங்கு தேசம் 2 அல்லது 3 நாளில் முடிவு எடுக்க வேண்டும். அது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தெலுங்கானாவில் போட்டியிட பல தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் போட்டியிட அனைவருக்கும் டிக்கெட் தர இயலாது.
டிக்கெட் பெறுவதில் ஏற்பட்டுள்ள போட்டியை பார்க்கும் போது தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி பலமாக இருப்பதையே காட்டுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் ரமணா பேசும் போது, “தெலுங்கு தேசத்துடன் கை கோர்க்கும் கட்சிகளுடன் தான் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்பதை தலைவர் சந்திரபாபுநாயுடு முன்னிலையில் தெரிவித்து கொள்கிறேன். தெலுங்கு தேசம் ஆதரவின்றி தெலுங்கானாவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது” என்றார்.
மேலும் அவர் பேசும் போது, தெலுங்கு தேசம் ஆந்திர மாநில கட்சி என சந்திரசேகரராவ் பேசியதற்கு பதில் அளித்தார். அப்போது “தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்துக்கு மட்டும் சொந்தமான கட்சி இல்லை. அனைத்து மாநிலத்துக்கும் சொந்தமானது. சந்திரசேகரராவ் தனது அரசியல் வாழ்க்கையை தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து தான் தொடங்கினார்” என்றார்.
முன்னதாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சந்திரபாபுநாயுடு பேசினார். அப்போது “தெலுங்கானாவில் பல சட்டசபை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியின் ஓட்டு வங்கி கணிசமான அளவில் உள்ளது” என்றார். #ChandrababuNaidu
தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது. அதில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
“பா.ஜனதா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள். ஏனெனில் 2 தெலுங்கு மாநிலங்களுக்கும் மத்தியில் ஆளும் தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அநீதி இழைத்துள்ளது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் முழு ஆதரவுடன் பா.ஜனதா அரசு செயல்படுகிறது.
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அவற்றை பயன்படுத்தியது. ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் விரைவிலோ அல்லது பின்னரோ பயன்படுத்தும். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தெலுங்கானாவில் தேசிய நீர்பாசன திட்டத்தை அமல்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது.
தெலுங்கு மாநிலங்களுக்கு மட்டும் பா.ஜனதா அரசு அநீதி இழைக்கவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் துரோகம் செய்துள்ளது.

எனக்கும், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவுக்கும் இடையே பிரச்சினைகளை உருவாக்கி மோதல் ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி தெலுங்கானா, தெலுங்கு தேசம் 2 அல்லது 3 நாளில் முடிவு எடுக்க வேண்டும். அது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தெலுங்கானாவில் போட்டியிட பல தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் போட்டியிட அனைவருக்கும் டிக்கெட் தர இயலாது.
டிக்கெட் பெறுவதில் ஏற்பட்டுள்ள போட்டியை பார்க்கும் போது தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி பலமாக இருப்பதையே காட்டுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் ரமணா பேசும் போது, “தெலுங்கு தேசத்துடன் கை கோர்க்கும் கட்சிகளுடன் தான் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்பதை தலைவர் சந்திரபாபுநாயுடு முன்னிலையில் தெரிவித்து கொள்கிறேன். தெலுங்கு தேசம் ஆதரவின்றி தெலுங்கானாவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது” என்றார்.
மேலும் அவர் பேசும் போது, தெலுங்கு தேசம் ஆந்திர மாநில கட்சி என சந்திரசேகரராவ் பேசியதற்கு பதில் அளித்தார். அப்போது “தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்துக்கு மட்டும் சொந்தமான கட்சி இல்லை. அனைத்து மாநிலத்துக்கும் சொந்தமானது. சந்திரசேகரராவ் தனது அரசியல் வாழ்க்கையை தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து தான் தொடங்கினார்” என்றார்.
முன்னதாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சந்திரபாபுநாயுடு பேசினார். அப்போது “தெலுங்கானாவில் பல சட்டசபை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியின் ஓட்டு வங்கி கணிசமான அளவில் உள்ளது” என்றார். #ChandrababuNaidu
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுடன் தெலுங்கானா சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக 11-ம் தேதி ஆய்வு செய்யப்படுகிறது. #TelanganaPolls #ECIteamvisitHyderabad #ECI
ஐதராபாத்:
ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 இடங்களில் வெற்றி பெற்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி ஆட்சியமைத்தது.
அங்கு அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அம்மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியான சந்திரசேகர் ராவும், அவரது தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சியினரும் சட்டசபையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்றும் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சட்டசபையை கலைப்பது என முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையின் முடிவை ஏற்று, சட்டசபை கலைப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். மேலும், புதிய அரசு அமைவது வரை தற்காலிக முதல்-மந்திரியாக தொடருமாறு சந்திரசேகர் ராவை அவர் கேட்டுக்கொண்டார்.
தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து இன்று அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இப்போதே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஐதராபாத் நகருக்கு துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான அதிகாரிகள் குழுவை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அனுப்பி வைக்கிறது.
வரும் 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் இதுதொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் கமிஷனரிடம் சமர்ப்பிப்பார்கள். இதன் அடிப்படையில் 4 மாத தேர்தல்களுடன் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நடத்தப்படலாமா? என்று முடிவு செய்யப்படும். #TelanganaPolls #ECIteamvisitHyderabad #ECI
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவிடம் நாட்டையே வழிநடத்தி செல்லும் திறமை இருப்பதால் பிரதமர் ஆவார் என்று அவரது மகனும், மந்திரியுமான தரகா ராமராவ் கூறியுள்ளார். #ChandrashekarRao
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு அமைந்து 4½ ஆண்டுகள் ஆவதையொட்டி ஐதராபாத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

எனது தந்தை சந்திரசேகர ராவ் முதல்-மந்திரியாக இருந்து யாரும் செய்ய முடியாத பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். 4½ ஆண்டுகளில் இந்த சாதனைகளை செய்திருப்பது மிகப்பெரிய செயலாகும்.
மாநிலத்தை மட்டுமல்ல நாட்டையே வழிநடத்தி செல்லும் திறமை அவரிடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர் பிரதமராக ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஏன் என்றால் மாநில அளவில் செயல்படும் பல கட்சிகள் பாரதிய ஜனதாவையும் விரும்பவில்லை, காங்கிரசையும் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைக்கலாம். அப்படி ஒரு ஆட்சி வருவதாக இருந்தால் சந்திரசேகரராவ் பிரதமராக வருவார்.
அப்படி அவர் பிரதமர் ஆனால் பல்வேறு வித்தியாசமான தொலைநோக்கு திட்டங்களை அவர் கொண்டு வருவார். ஏற்கனவே மாநிலத்தில் இதேபோல அவர் திட்டங்களை செயல்பட்டு சாதித்திருக்கிறார்.
பிரதமர் மோடி மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி எப்போதோ மக்கள் நம்பிக்கையில் இருந்து விலகிவிட்டது. நாட்டுக்கு இப்போது புதிய தலைமை தேவை. அதை சந்திரசேகர ராவ் செயல்படுத்துவார்.
இவ்வாறு அவர் கூறினார். #ChandrashekarRao #KTRamaRao
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு அமைந்து 4½ ஆண்டுகள் ஆவதையொட்டி ஐதராபாத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளை சேகரிக்க டெல்லியில் இருந்து தனியாக பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகனும், மந்திரியுமான தரகா ராமராவ் பேட்டி அளித்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் எங்களது கட்சி மிக வலுவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 17 இடங்களில் 15 இடங்களை நாங்கள் கைப்பற்றுவோம். அதேபோல 119 சட்டமன்ற தொகுதிகளில் 109 இடங்களை கைப்பற்றுவோம்.

எனது தந்தை சந்திரசேகர ராவ் முதல்-மந்திரியாக இருந்து யாரும் செய்ய முடியாத பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். 4½ ஆண்டுகளில் இந்த சாதனைகளை செய்திருப்பது மிகப்பெரிய செயலாகும்.
மாநிலத்தை மட்டுமல்ல நாட்டையே வழிநடத்தி செல்லும் திறமை அவரிடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர் பிரதமராக ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஏன் என்றால் மாநில அளவில் செயல்படும் பல கட்சிகள் பாரதிய ஜனதாவையும் விரும்பவில்லை, காங்கிரசையும் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைக்கலாம். அப்படி ஒரு ஆட்சி வருவதாக இருந்தால் சந்திரசேகரராவ் பிரதமராக வருவார்.
அப்படி அவர் பிரதமர் ஆனால் பல்வேறு வித்தியாசமான தொலைநோக்கு திட்டங்களை அவர் கொண்டு வருவார். ஏற்கனவே மாநிலத்தில் இதேபோல அவர் திட்டங்களை செயல்பட்டு சாதித்திருக்கிறார்.
பிரதமர் மோடி மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி எப்போதோ மக்கள் நம்பிக்கையில் இருந்து விலகிவிட்டது. நாட்டுக்கு இப்போது புதிய தலைமை தேவை. அதை சந்திரசேகர ராவ் செயல்படுத்துவார்.
இவ்வாறு அவர் கூறினார். #ChandrashekarRao #KTRamaRao
தெலுங்கானா சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் பதிலளித்தார். #ChandrasekharRao
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அதற்கு இன்னும் 8 மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில், தற்போதே சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக அந்த கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆளுங்கட்சி சார்பில் நேற்று ஐதராபாத் அருகே ‘பிரகதி நிவேதனா சபா’ என்ற பெயரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், முன்கூட்டிய தேர்தல் குறித்த தகவலை முதல்-மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த கூட்டத்தில் பேசிய அவர் முன்கூட்டிய தேர்தல் குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியிடவில்லை. அவர் கூறுகையில், ‘சந்திரசேகர் ராவ், மாநில அரசை கலைக்கப்போவதாக சில ஊடகங்கள் கூறி வருகின்றன. தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க டி.ஆர்.எஸ். உறுப்பினர்கள் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளனர். அப்படி ஒரு முடிவு (முன்கூட்டியே தேர்தல்) எடுக்கும் போது நான் அறிவிப்பேன். மக்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டே அது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில், மக்கள் தங்கள் சொந்த தலைவர்கள் மூலம் மாநிலத்தை ஆண்டு வருவதாக கூறிய சந்திரசேகர் ராவ், அதைப்போல தாங்களும் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்றும், டெல்லி தலைமைக்கு அடிபணிய மாட்டோம் என்றும் தெரிவித்தார். அத்துடன் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் அவர் பட்டியலிட்டார்.
மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் அடங்கிய 40 லட்சம் கையேடுகளை டி.ஆர்.எஸ். கட்சி அச்சிட்டு உள்ளது. நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு இந்த கையேடுகள் வழங்கப்பட்டன. இந்த கையேட்டில் உள்ள திட்டங்கள் அடுத்த தேர்தலில் தங்களுக்கு வெற்றியை தேடித்தரும் என அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். #ChandrasekharRao
தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அதற்கு இன்னும் 8 மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில், தற்போதே சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக அந்த கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆளுங்கட்சி சார்பில் நேற்று ஐதராபாத் அருகே ‘பிரகதி நிவேதனா சபா’ என்ற பெயரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், முன்கூட்டிய தேர்தல் குறித்த தகவலை முதல்-மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த கூட்டத்தில் பேசிய அவர் முன்கூட்டிய தேர்தல் குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியிடவில்லை. அவர் கூறுகையில், ‘சந்திரசேகர் ராவ், மாநில அரசை கலைக்கப்போவதாக சில ஊடகங்கள் கூறி வருகின்றன. தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க டி.ஆர்.எஸ். உறுப்பினர்கள் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளனர். அப்படி ஒரு முடிவு (முன்கூட்டியே தேர்தல்) எடுக்கும் போது நான் அறிவிப்பேன். மக்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டே அது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில், மக்கள் தங்கள் சொந்த தலைவர்கள் மூலம் மாநிலத்தை ஆண்டு வருவதாக கூறிய சந்திரசேகர் ராவ், அதைப்போல தாங்களும் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்றும், டெல்லி தலைமைக்கு அடிபணிய மாட்டோம் என்றும் தெரிவித்தார். அத்துடன் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் அவர் பட்டியலிட்டார்.
மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் அடங்கிய 40 லட்சம் கையேடுகளை டி.ஆர்.எஸ். கட்சி அச்சிட்டு உள்ளது. நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு இந்த கையேடுகள் வழங்கப்பட்டன. இந்த கையேட்டில் உள்ள திட்டங்கள் அடுத்த தேர்தலில் தங்களுக்கு வெற்றியை தேடித்தரும் என அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். #ChandrasekharRao
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் ஐதராபாத் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #TelanganaAssembly #ChandrasekharRao
நகரி:
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து கடந்த 2014-ம் ஆண்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி வெற்றி பெற்று, அதன் தலைவரான சந்திரசேகர் ராவ் முதல்-மந்திரியானார்.
அங்கு அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் மாநிலத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தலை நடத்த ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் இதில் இறுதி முடிவு எடுக்கவில்லை என மந்திரி கே.டி.ராமராவ் நேற்று முன்தினம் கூறினார்.
இந்த நிலையில் கடந்த 4½ ஆண்டு ஆட்சியில் மாநில அரசு மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செய்து வரும் நலப்பணிகள் உள்ளிட்ட நிலவர அறிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் டி.ஆர்.எஸ். கட்சி நடத்துகிறது.
‘பிரகதி நிவேதன சபா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டம் ஐதராபாத் அருகே உள்ள கொங்கர கலான் பகுதியில் நடக்கிறது. இதற்காக அனைத்து வசதிகளுடன் 6 ஆயிரம் ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. ஆளுங்கட்சி சார்பில் நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தில் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் ஏராளமானோர் நேற்றே ஐதராபாத்தை நோக்கி புறப்பட்டு வருகின்றனர். அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 1000 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த கூட்டத்தில், முன்கூட்டிய தேர்தல் குறித்து முதல்-மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் அறிவிப்பு வெளியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்டத்துக்கு முன்னதாக அவரது தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. #TelanganaAssembly #ChandrasekharRao
#Tamilnews
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து கடந்த 2014-ம் ஆண்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி வெற்றி பெற்று, அதன் தலைவரான சந்திரசேகர் ராவ் முதல்-மந்திரியானார்.
அங்கு அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் மாநிலத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தலை நடத்த ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் இதில் இறுதி முடிவு எடுக்கவில்லை என மந்திரி கே.டி.ராமராவ் நேற்று முன்தினம் கூறினார்.
இந்த நிலையில் கடந்த 4½ ஆண்டு ஆட்சியில் மாநில அரசு மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செய்து வரும் நலப்பணிகள் உள்ளிட்ட நிலவர அறிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் டி.ஆர்.எஸ். கட்சி நடத்துகிறது.
‘பிரகதி நிவேதன சபா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டம் ஐதராபாத் அருகே உள்ள கொங்கர கலான் பகுதியில் நடக்கிறது. இதற்காக அனைத்து வசதிகளுடன் 6 ஆயிரம் ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. ஆளுங்கட்சி சார்பில் நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தில் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் ஏராளமானோர் நேற்றே ஐதராபாத்தை நோக்கி புறப்பட்டு வருகின்றனர். அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 1000 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த கூட்டத்தில், முன்கூட்டிய தேர்தல் குறித்து முதல்-மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் அறிவிப்பு வெளியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்டத்துக்கு முன்னதாக அவரது தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. #TelanganaAssembly #ChandrasekharRao
#Tamilnews
தெலுங்கானா சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. #ChandrasekharRao
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக இருக்கிறார். இங்கு அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற வேண்டும்.
ஆனால் சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இவர் ஐதராபாத்தில் கவர்னர் இ.எஸ்.எல். நரசிம்மனை திடீரென நேரில் சந்தித்து பேசினார்.
அவரது மகனும், தகவல் தொழில்நுட்ப துறை மந்திரியுமான கே.டி.ராமாராவ் டெல்லியில் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். தெலுங்கானா அரசின் தலைமை ஆலோசகரும், முன்னாள் தலைமை செயலாளருமான ராஜிவ்சர்மா டெல்லி சென்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவை சந்தித்து பேசினார்.

இந்த ஆண்டு இறுதியில் சத்திஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அத்துடன் சேர்த்து தெலுங்கானாவுக்கும் சட்ட சபை தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இவர்களின் இந்த திடீர் சந்திப்பு தேர்தல் குறித்து பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்திக்க இருப்பதாக முதல்-மந்திரி சந்திர சேகரராவ் தெரிவித்துள்ளார். #ChandrasekharRao
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக இருக்கிறார். இங்கு அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற வேண்டும்.
ஆனால் சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இவர் ஐதராபாத்தில் கவர்னர் இ.எஸ்.எல். நரசிம்மனை திடீரென நேரில் சந்தித்து பேசினார்.
அவரது மகனும், தகவல் தொழில்நுட்ப துறை மந்திரியுமான கே.டி.ராமாராவ் டெல்லியில் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். தெலுங்கானா அரசின் தலைமை ஆலோசகரும், முன்னாள் தலைமை செயலாளருமான ராஜிவ்சர்மா டெல்லி சென்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவை சந்தித்து பேசினார்.

இவர்களின் இந்த திடீர் சந்திப்பு தேர்தல் குறித்து பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்திக்க இருப்பதாக முதல்-மந்திரி சந்திர சேகரராவ் தெரிவித்துள்ளார். #ChandrasekharRao
தெலுங்கானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியும், தெலுங்கானா முதல்மந்திரியும் நல்ல திட்டங்களை தலைகீழாக மாற்றிவிட்டதாக விமர்சித்துள்ளார். #RahulGandhi #Modi #Telangana
ஐதராபாத்:
காங்கிரஸ் கட்சியின் நிலையை வலுப்படுத்த அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு வழிகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். அதன் ஒருபகுதியாக இன்று தெலுங்கானா மாநிலத்தில், இளைஞர்களின் பெருந்திரள் கூட்டத்தின் நடுவே ராகுல் காந்தி உரையாற்றினார்.
அந்த உரையில், உலக நாடுகள் பலவற்றிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதற்கு முன்பே மக்களுக்கு இருந்த அனைத்து கனவுகளும் நிறைவேற்றப்படாமல் போனதற்கு முதல்மந்திரியின் குடும்பத்தினரே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே நாடு ஒரே வரி எனும் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அன்றாட உபயோக பொருட்கள் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து, பிரதமர் மோடியைப் போலவே தெலுங்கானா முதல்மந்திரியும் பொய் வாக்குறுதிகளை மட்டும் அளித்துவருவதாகவும், ஊழல் தலைநகராக தெலுங்கான மாறிவிட்டதற்கு முதல்மந்திரியின் குடும்ப அரசியலே காரணம் எனவும் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், ரபேல் திட்டத்தை தலைகீழாக மாற்றியதன் மூலம், மோடி தனது நண்பர் அனில் அம்பானிக்கு பல லட்சம் கோடிகளை பரிசாக வழங்குகிறார் என்றும், இதேபோல், காங்கிரஸ் அரசால் 38 ஆயிரம் கோடிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தெலுங்கானா நீர்ப்பாசன திட்டத்தை தற்போது 1 லட்சம் கோடி ரூபாய்க்கு முதல்மந்திரி மாற்றியுள்ளதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். #RahulGandhi #Modi #Telangana
காங்கிரஸ் கட்சியின் நிலையை வலுப்படுத்த அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு வழிகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். அதன் ஒருபகுதியாக இன்று தெலுங்கானா மாநிலத்தில், இளைஞர்களின் பெருந்திரள் கூட்டத்தின் நடுவே ராகுல் காந்தி உரையாற்றினார்.
அந்த உரையில், உலக நாடுகள் பலவற்றிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மோடியும், சந்திர சேகர் ராவும், முன்னேற்ற கனவுகள் குறித்து பேசி வருகிறார்கள் ஆனால், தெலுங்கானாவில் புதிய வரி விதிப்பும், போலீஸ் ராஜ்ஜியமும் மட்டுமே நடப்பதாகவும், பொதுமக்கள் பேச கூட அனுமதிக்கபடுவது இல்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதற்கு முன்பே மக்களுக்கு இருந்த அனைத்து கனவுகளும் நிறைவேற்றப்படாமல் போனதற்கு முதல்மந்திரியின் குடும்பத்தினரே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே நாடு ஒரே வரி எனும் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அன்றாட உபயோக பொருட்கள் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து, பிரதமர் மோடியைப் போலவே தெலுங்கானா முதல்மந்திரியும் பொய் வாக்குறுதிகளை மட்டும் அளித்துவருவதாகவும், ஊழல் தலைநகராக தெலுங்கான மாறிவிட்டதற்கு முதல்மந்திரியின் குடும்ப அரசியலே காரணம் எனவும் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், ரபேல் திட்டத்தை தலைகீழாக மாற்றியதன் மூலம், மோடி தனது நண்பர் அனில் அம்பானிக்கு பல லட்சம் கோடிகளை பரிசாக வழங்குகிறார் என்றும், இதேபோல், காங்கிரஸ் அரசால் 38 ஆயிரம் கோடிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தெலுங்கானா நீர்ப்பாசன திட்டத்தை தற்போது 1 லட்சம் கோடி ரூபாய்க்கு முதல்மந்திரி மாற்றியுள்ளதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். #RahulGandhi #Modi #Telangana