search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ChatGBT-4O"

    • மனித குரலில் பேசவும், முக பாவனங்களை புரிந்து கொள்ளவும் கூடிய புதிய ஏஐ மாடலாகும்.
    • 26 மொழிகளில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.

    மும்பை:

    'ஆர்டிபிசியல் இன்டெலி ஜென்ஸ்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புதிய வெர்சன்கள் இன்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறது.

    ஆரம்பத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் நாளடைவில் மருத்துவம், சினிமா, சேவை என பல்வேறு துறைகளிலும் பயன்பாட்டிற்கு வந்து விட்டது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய தொழில்நுட்பமான சாட்ஜி பிடி ஓபன் ஏ.ஐ. நிறுவனத் தால் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சாட்ஜிபிடி-4 வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முந்தைய சாட்ஜிபிடி வெர்சனை விட கூடுதல் அம்சங்களை கொண்டிருந்தது. இதனால் சாட்ஜிபிடி-4 வெர்சனுக்கு அதிக வரவேற்பு இருந்தது.

    இந்நிலையில் ஓபன் ஏஐ நிறுவனம் 13-ந் தேதி அன்று தங்களது புதிய வெர்சனான சாட்ஜிபிடி-4 ஓ-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

    இது மனித குரலில் பேசவும், முக பாவனங்களை புரிந்து கொள்ளவும் மற்றும் பேசும் மொழியை பின் நேரத்தில் மொழி பெயர்க்கவும் கூடிய புதிய ஏஐ மாடலாகும்.

    சாட்ஜிபிடி-4ஓ-ல் 25 ஆயிரம் வார்த்தைகள் வரை கேட்க முடியும். அல்லது டாக்மெண்ட் பைல்களை பதிவேற்றம் செய்வதன் மூலமும் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.

    மேலும் ஒரு படத்தை அப்லோடு செய்தும் கேள்விகளை கேட்கலாம். சாட்ஜிபிடியின் பழைய பதிப்பில் ஆங்கிலத்தில் மட்டுமே புரிந்து கொள்ளும் போது, சாட்ஜிபிடி4-ல் 26 மொழிகளில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.

    சாட்ஜிபி–டியின் புதிய வெர்சனான ஜிபிடி-4 ஓ இதுவரை வெளிவந்த வெர்சன்களில் அதிநவீனமாக இருப்பதுடன் மனிதர் களை போலவே பதில் அளிக்கும் என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், உலகில் இதுவரை கிடைத்திடாத சாட்ஜிபிடி வெர்சன்களில் சிறந்த மாடலை நாங்கள் உருவாக்கி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

    ஓபன் ஏஐ 3.5 வெர்சன் வரை பயனர்களுக்கு இலவசமாக கிடைக்கிற நிலையில் இந்நிறுவனம் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச சேவையை அளிக்கும் என ஆல்ட்மேன் உறுதியளித்து உள்ளார்.

    இதுவரை உரையாடல்கள் வழியாக பதில் அளித்த சாட்ஜிபிடி குரல் மற்றும் காணொலி உள்ளிடு களுக்கு பதில் அளிக்கும் வகையில் மேம்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    சினிமாக்களில் வரும் செயற்கை நுண்ணறிவு போல் உண்மைக்கு நெருக்கமாக செயல்படுவதும் இன்னும் அதிக நுண்ணறிவுடனும், நகைச்சுவை உணர்வுடனும் இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அதே நேரம் ஓபன் ஏஐ நிறுவனத்தின் இந்த புதிய வெர்சனால் சில இடையூறுகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

    ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பம் மூலம் பிரபலங்கள் சிலரின் டீப் பேக் வீடியோக்கள் வெளியான நிலையில் இந்த புதிய வெர்சனால் மேலும் இடையூறுகள் ஏற்படலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.

    ஆனால் ஜிபிடி-4ஓ பழைய மாடலை விட 2 மடங்கு வேகமானது மற்றும் கணிசமான செயல்திறன் கொண்டது. இதன் மூலம் கேள்விகளுக்கான பதில்களை இணையத்தில் தேடுதல், சாட்போட்டுடன் பேசுதல் மற்றும் பல்வேறு குரல்களில் பதில்களை கேட்பது ஆகியவை இதில் அடங்கும் என அந்நிறுவனத்தின் அதிகாரி மீரா மிராட்டி தெரிவித்துள்ளார்.

    ×