என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai police commissioner"

    • மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு.
    • வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து மிரட்டல் விடப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

    • சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது.
    • குழந்தை கடத்தல் குறித்த தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் குழந்தை கடத்தல் குறித்து தேவையற்ற வதந்திகளை யாரும் பகிர வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், பர்தா அணிந்து பெண் வேடமிட்ட ஆண்கள் சுற்றி வருவதாகவும், இக்கடத்தலுக்காக வடமாநிலங்களில் இருந்து 400 பேர் தமிழகத்தில் குவிந்துள்ளதாகவும், கடத்தப்படும் சிறுவர், சிறுமிகளின் உடல் உறுப்புகளை ஒரு கும்பல் எடுப்பதாக கூறப்படும் தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றன

    இதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் கடத்தல் என்ற வதந்திகளை பரப்புபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சைபர் கிரைம் குறித்த ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதுபோன்ற ஹேக்கத்தான் போட்டிகளில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் யுக்திகளையும் கண்டுபிடித்து வருகின்றனர். அவை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். குழந்தை கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதே போல் உண்மையில்லாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம்." என்று அவர் தெரிவித்தார்.

    • கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசரணை நடைபெற்று வருகிறது.
    • ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக எந்தத் தகவலும் இல்லை.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    கொலை நடந்த 3 மணிநேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசரணை நடைபெற்று வருகிறது.

    ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரியவில்லை. ஆம்ஸ்ட்ராங் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.

    எந்த இடத்தில் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆம்ஸ்ட்ராங் அரசியலுக்கு வந்த பிறகு நிறைய பேருடன் முன்விரோதம் இருந்துள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சதி திட்டம் தீட்டியது யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக எந்தத் தகவலும் இல்லை.

    கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சதி திட்டம் தீட்டியது யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் பொன்னை பாலுவுக்கு உள்ள தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பொன்னை பாலு, திருமலை மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக தகவல் இல்லை.

    தேர்தல் நடத்தை விதிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் கைத்துப்பாக்கி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    விசாரணையில் கிடைத்துள்ள பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.

    சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 4,000 பேர் உள்ளனர். ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரை 1,192 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் பதியப்பட்டிருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

    ஆற்காடு சுரேஷ் கொலைக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    சென்னையில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் கொலை குற்றங்கள் குறைந்தள்ளன. சென்னை மிகவும் பாதுகாப்பாபன நகரமாக உள்ளது,

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரியான துப்பு கிடைத்த பிறகே 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை காவல் ஆணையர் சமூக வலைதள பக்கத்தை இணைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    • புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பு.

    சென்னை காவல் ஆணையர் அருண் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    வாட்ஸ் அப் டிபி-ல் சென்னை காவல் ஆணையர் அருண் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவதாக புகைப்படம் ஆதாரத்துடன் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சென்னை காவல்துறை, சென்னை காவல் ஆணையர் சமூக வலைதள பக்கத்தை இணைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

    • 19 பெண் காவலர்கள் அவர்களது விருப்பப்படி சென்னை பெருநகர காவலில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பணிமாறுதல் ஆணையினை பெற்று சென்றுள்ளனர்.
    • சென்னை போலீஸ் கமிஷனர் அருண், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின ஆணையினை செயல்படுத்தி உள்ளார்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல் அதிகாரிகள் ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை முடிந்து, பணிக்கு திரும்பும் போது அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்கு வசதியாக, அவர்கள் மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பிய பிறகு அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சேர்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணி மாறுதல் வழங்கப்படும் என ஆணை பிறப்பித்துள்ளார்.

    அவரது ஆணைக்கிணங்க அரசு உத்தரவினை நிறைவேற்றும் வகையில் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 19 பெண் காவலர்கள் அவர்களது விருப்பப்படி சென்னை பெருநகர காவலில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பணிமாறுதல் ஆணையினை பெற்று சென்றுள்ளனர்.

    சென்னை போலீஸ் கமிஷனர் அருண், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின ஆணையினை செயல்படுத்தி உள்ளார்.

    • குற்றவாளி என உறுதியான பிறகே ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
    • புகாரில் என்ன தெரிவிக்கப்பட்டதோ அது தான் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல் தகவல் அறிக்கை என்பது பாதிக்கப்பட்டவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பதிவு செய்வது.

    குற்றவாளி என உறுதியான பிறகே ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். புகாரில் என்ன தெரிவிக்கப்பட்டதோ அது தான் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது.

    இது தெரியாமல் சிலர் முதல் தகவல் அறிக்கையை இப்படி போட்டிருக்கலாம், அப்படி போட்டிருக்கலாம் என சொல்கிறார்கள்.

    இதுபோன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை வெளியாக கூடாது, அது தவறு தான்.

    எப்ஐஆர் வெளியானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக எப்ஐஆர் லாக் ஆவதில் தாமதம் ஆகியுள்ளது. எப்ஐஆர் லாக் ஆவதில் தாமதம் ஏற்பட்டதால் டவுன்லோடு செய்து பரப்பி இருக்கலாம்.

    இதுவரை ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன. ஞானசேகரன் மீது 2019க்கு பின் எந்த வழக்கும் பதிவாகவில்லை.

    இதுவரை வேறு பெண்களிடம் இருந்து புகார்கள் எதுவும் பெறப்படவில்லை. வேறு யாரேனும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி உள்ளது. அதில் 56 சிசிடிவி வேலை செய்கிறது.

    பெண் புகார் கொடுத்த அடுத்த நாளே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற புலன் விசாரணையில் ஞானசேகரன் ஒருவர் மட்டுமே குற்றவாளி.

    காவல்துறை நடுநிலையுடன், கட்சி வேறுபாடு கடந்து நடந்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    போராட்டம் நடத்துவதற்கு என சில இடங்கள் உள்ளது. அதை மீறி போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதன் அடிப்படையில் அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே காவல்துறை பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்துவது என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    காவல்துறையை நம்பி மாணவி புகார் அளித்தார். அவர் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

    யார் பாதிக்கப்பட்டாலும் தைரியமாக புகார் அளிக்க முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை முழுவதும் செப்டம்பர் மாத இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடையும் என சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று தெரிவித்தார்.
    சென்னை :

    சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகம், நடைபாதை, உடற்பயிற்சி கூடத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் திறந்து இன்று வைத்தார்.

    அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில், ‘ வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். சென்னை மக்கள் அனைவரும் ஆர்வமுடன் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.

    தங்கள் வீட்டை பார்பத்து இருப்பது போல் மட்டும்  சி.சி.டி.வி கேமராக்களை அமைக்காமல் வீடு அமைந்துள்ள தெருவை கண்காணிக்கும் விதத்திலும் கேமாரக்களை பொருத்த வேண்டும்.

    காவலர்கள் படிப்பதற்காக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் திறக்கப்பட்ட நூலகம் போன்று அனைத்து காவல்நிலையங்களிலும் நூலகங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என அவர் தெரிவித்தார்.

    காவலர்கள் படிப்பதற்கென பிரத்யேகமாக காவல்நிலையத்தில் நூலகம் திறக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×