என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Health"

    • அவசர உலகில் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
    • சில வகை ‘ஜங்’ உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் அறிவு மழுங்குகிறது.

    'ஜங் புட்' பற்றியும், அவை குழந்தைகளுக்கு உண்டாக்கும் தீமைகள் பற்றியும் தெரிந்து கொள்வோமா..!

    * 'ஜங் புட்' எவை?

    உடல் இயக்கத்திற்கான மூன்று வேளை உணவு போக, கூடுதலாக உட்கொள்ளும் உணவுகளும், ஸ்நாக்ஸ் எனப்படும் தின்பண்டங்களும் 'ஜங் புட்' பட்டியலில்தான் வருகிறது. குறிப்பாக ஆவியில் வேகவைத்தது தவிர, எண்ணெய்யில் பொரிப்பது, டின்களில் அடைத்து வைத்திருப்பது, பாக்கெட் உணவுகள், இனிப்பு சாக்லெட்டுகள் இவற்றுடன் அவசர கதியில் சமைக்கும் உணவுகள் போன்றவை எல்லாம் 'ஜங் புட்' உணவில்தான் வருகிறது. குறிப்பாக நூடுல்ஸ், பீட்சா, பிரைடு ரைஸ், நொடி பொழுதில் தயாராகும் அசைவ உணவுகள், சிப்ஸ் உணவுகள்... எல்லாம் ஜங் புட் ரகம்தான்.

    * ஜங் புட் உண்டாக்கும் விளைவுகள்

    'ஜங் புட்' களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதற்றம், உடற்பருமன் போன்றவை ஏற்படுகிறதாம். இந்த வகை உணவுகள் கொழுப்புச்சத்து அதிகம் கொண்டவை. குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்பு நிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவையும் ஏற்படுகின்றன. குறிப்பாக உடற்பருமனில் தொடங்கி, எல்லா வகையான வியாதிகளுக்கு வழிவகை செய்கின்றன.

    சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சில வகை 'ஜங்' உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் அறிவு மழுங்குகிறது எனவும், மறதி அதிகரிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது. இனிப்பு பதார்த்தங்கள், பல வியாதிகளை உடலுக்கு கொண்டு வருகின்றன. இனிப்பை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகிறது. அதனால் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள், செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது நலம்.

    * பாக்கெட் உணவுகள்

    வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப் பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. வறுப்பதற்காக பயன்படுத்தப்படும் சில எண்ணெய் வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை.

    அதேபோல பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஏற்கனவே சமைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன. வறுத்த உணவுகளால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இந்த மாதிரியான பாக்கெட் உணவுகளிலும் ஏற்படுகின்றன. இந்த வகை உணவுகள் உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இதனால் அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அவசர உலகில் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.

    மூன்று வேளை உணவு போக, கூடுதலாக உட்கொள்ளும் உணவுகளும், ஸ்நாக்ஸ் எனப்படும் தின்பண்டங்களும் 'ஜங் புட்' பட்டியலில்தான் வருகிறது.

    • தாமதமாகத் தூங்கி தாமதமாக எழும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
    • சீக்கிரம் படுத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக் கூர்மையும் அதிகம் இருக்கும்.

    தூக்கத்திற்கும், மனித உடல்நலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், குழந்தைகளை இரவில் சீக்கிரமே தூங்க வைத்தால் அவர்கள் உடல் பருமனற்றும், சுலபமாக வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனக் கண்டறிந்துள்ளது.

    9 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட 2,200 குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, தூங்கும் நேரம், உடற்பயிற்சி, வேலையின் அளவு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தனர். அதன்படி, இரவில் காலதாமதமாகத் தூங்கி காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளை விட, இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரமாக எழுந்திருக்கும் குழந்தைகளின் பருமன் அல்லது எடை ஒன்றரை மடங்கு குறைவாக உள்ளதாம்.

    ''சீக்கிரம் படுத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக் கூர்மையும் அதிகம் இருக்கும்'' என்கிறார் இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய கரோல் மகேர். மேலும், ''தாமதமாகத் தூங்கி தாமதமாக எழும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். இது போன்ற குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட, மூன்று மடங்கு அதிகமாக டி.வி பார்ப்பதிலும், கம்ப்யூட்டரில் ஈடுபாடு கொள்வதிலும் நேரத்தை செலவழிப்பார்கள்'' என்கிறார் டாக்டர் கரோல்.

    'பின் தூங்கி முன் எழுவது' என்பது இலக்கியத்தில் மட்டுமே இருக்கட்டும். 'முன் தூங்கி முன் எழுவதே' உடலுக்கு நல்லது என்கிறது அறிவியல்!

    • ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்கலாம்.
    • குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க வேண்டாம்.

    குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாத காலத்துக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து பிற உணவுகளையும் பழக்க ஆரம்பிக்கலாம்.

    தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டிய பருவத்தில், ஒருவேளை தாய்க்கு போதிய அளவு பால் சுரப்பு இல்லாவிட்டால் மருத்துவரை ஆலோசித்தே முடிவு செய்ய வேண்டும். நீங்களாக குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டாம்.

    ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு முழு கொழுப்புச்சத்துள்ள பால் கொடுக்கலாம்.

    பசும்பால் கொடுப்பதாக இருந்தால் குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகுதான் தொடங்க வேண்டும். ஆவின் பால் கொடுப்பதாக இருந்தால் அதில் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வரும் பால் குழந்தைகளுக்கு ஏற்றது. அதில் ஃபுல் க்ரீம் இருக்கும். அதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே காய்ச்சி ஆறவைத்துக் கொடுக்கலாம்.

    குழந்தைக்கு ஒரு நாளைக்கு 400 மில்லி அளவு வரை பால் கொடுக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது குழந்தைக்கு மலச்சிக்கல் வர வாய்ப்புண்டு. இது 5 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பொருந்தும். அந்த வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு ஆவினின் பச்சை நிற பாக்கெட் பால், அதன் பிறகு, நீல நிற பாக்கெட் என மாற்றலாம்.

    • மழைக்காலங்களில் கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளுக்குமே காய்ச்சல் வந்துவிடுகிறது.
    • சுகாதாரமில்லாத உணவுகள் காய்ச்சலுக்கு ஒரு முக்கியமான காரணம்.

    திடீர் பருவநிலை மாற்றம் காரணமாகத்தான் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இரண்டும் வருகின்றன. இவை இயல்பானதுதான் என்பதால் பயப்பட வேண்டாம். ஒரு நாளைக்கு முன்னதாக லேசான மூக்கொழுகுதலுடன் நார்மலாக இருக்கிற குழந்தைகளுக்கு அன்றைக்கு சாயங்காலமோ, இரவோ காய்ச்சல் வர ஆரம்பிக்கும். இது சளியினால் வருகிற சாதாரணக் காய்ச்சல்.

    இப்படியில்லாமல் சளிப்பிடித்து இரண்டு அல்லது மூன்று நாள்கள் கழித்து காய்ச்சல் வருகிறது என்றால், மழைக்கால தொற்றுநோய்கள் காரணமாக இருக்கலாம். இன்னும் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் இரண்டு, மூன்று நாள் இருந்துவிட்டு போய்விடும். அம்மாக்கள் 'அப்பாடா' என்று சற்று ரிலாக்ஸ் ஆகிற நேரத்தில் மறுபடியும் மெல்ல தலைகாட்ட ஆரம்பிக்கும். இதுவும் மழைக்கால தொற்றுநோய்களால் வருகிற காய்ச்சல்தான்.

    இந்த மாதங்களில், சில குழந்தைகளுக்குக் காய்ச்சலுடன் தொண்டையில் இன்ஃபெக்‌ஷனும் ஏற்படும். இதனால், தொண்டையெல்லாம் புண்ணாகி சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். இவர்களுக்கு 10 அல்லது 15 நாள் மாத்திரை தர வேண்டி வரும். நான் மேலே சொல்லியிருக்கிற நான்கு காய்ச்சல்களுக்குமே குழந்தைகளின் வயது மற்றும் எடையைப் பொறுத்து மருந்து கொடுத்தாலே சரியாகிவிடும்.

    வராமல் தடுக்க வழிகள்

    பருவநிலை மாற்றத்தால் வருகிற காய்ச்சல், ஒரு குழந்தையிடம் இருந்துதான் இன்னொரு குழந்தைக்குப் பரவும். அதனால், உங்கள் பிள்ளைக்கு லேசான காய்ச்சல் இருந்தால்கூட பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் இருப்பதுதான் நல்லது.

    இந்த மாதங்களில் குழந்தைகளுக்கு ஹோட்டல் உணவுகளை வாங்கித் தராதீர்கள். ஏனென்றால், சுகாதாரமில்லாத உணவுகள் காய்ச்சலுக்கு ஒரு முக்கியமான காரணம். கேன் வாட்டராக இருந்தாலும் கொதிக்க வைத்து ஆறிய நீரை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.

    இந்த சீஸனில் மழையும் வெயிலும் மாறி மாறி இருக்கும் என்பதால், உங்கள் வீட்டைச் சுற்றி சுத்தமான மழை நீர் எங்கும் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுதான் கொசுக்களின் பிறப்பிடம். டெங்கு கொசுக்கள் இப்படிப்பட்ட சுத்தமான நீரில்தான் முட்டையிடும் என்பதால், கவனம்.

    வீட்டுக்கு முன்னால் தேங்கியிருக்கிற மழை நீரில் வெறுங்காலுடன் குதிப்பதற்கு பிள்ளைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்தான். ஆனால், அப்படிக் குதித்தால் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, எலிக் காய்ச்சல் என மழைக்கால தொற்றுநோய்கள் அத்தனையும் வந்துவிடலாம். 10 வயதுக்கு மேல் வளர்ந்த குழந்தைகள் என்றால், அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தேவையான அளவு உடலில் இருக்கும். அதுவரைக்கும் மழை நீரில் விளையாடுவதைத் தள்ளி வைப்பதுதான் நல்லது.

    பருவநிலை மாற்றத்தால் வருகிற காய்ச்சலைப் பொறுத்தவரைக்கும், அதிகமான வயிற்று வலி, அடிக்கடி வாந்தியெடுத்தல், கை, கால்கள் சில்லிட்டுப்போவது போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் இருந்தால், குடிப்பதற்கு நிறைய நீராகாரங்கள் கொடுங்கள். காய்ச்சல் இருந்தாலும் சின்னதாகவாவது விளையாடிக்கொண்டிருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. அதற்கு மாறாக, சோர்ந்துபோய் படுத்துக்கொண்டே இருந்தாலும், தூங்கிக்கொண்டே இருந்தாலும் உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்.

    • சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள்.
    • தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.

    தவழும் வயதில், குழந்தைகளின் உலகம் தனித்துவமானது; பார்க்கும் ஒவ்வொரு பொருளும் அவர்களுக்குப் புதுமையாகத் தெரியும். எந்தப் பொருள் அருகில் இருந்தாலும், கையில் கிடைத்தாலும் முதலில் தொட்டுப் பார்ப்பார்கள். பிறகு, கையிலெடுத்து வாயில் போட்டுக் கடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அது என்னவென்று அறிந்துகொள்ளத் துடிக்கும் ஆர்வம்தான் காரணம்.

    ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தைகள் கண்டதையும் வாயில் போட்டுக்கொள்ள ஒரு காரணம். உதாரணமாக, கால்சியம் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் சுண்ணாம்பு, சாக்பீஸ் போன்றவற்றைத் தின்பார்கள். இரும்புச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் பல்பம், சுவரிலிருக்கும் பெயின்ட் போன்றவற்றைத் தின்னத் துடிப்பார்கள். உடலில் மைக்ரோமினரல்ஸ் குறைபாடு உள்ள குழந்தைகள் சாம்பலையும், சால்ட் குறைபாடு உள்ள குழந்தைகள் ஊறுகாயையும் வாயில் போட்டுக்கொள்ளத் துடிப்பார்கள்.

    குழந்தைகளால் விழுங்கப்படும் பொருள்கள் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாய்க்குள்தான் செல்லும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக்கொள்ளலாம். மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக்கொண்டால், சுவாசப்பாதை தடைபடும். மூச்சுவிட முடியாது. உணவுக்குழாய்க்குள் என்றால், இரைப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சில பொருள்கள் எந்தத பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் வெளியேறிவிடுவதும் உண்டு.

    குழந்தைகள், ஏதாவது ஒன்றை விழுங்கும்போது நாம் பார்த்துவிட்டால் பிரச்னையில்லை . ஒருவேளை நாம் பார்க்காவிட்டால்தான் பிரச்னை. இதை எப்படி அறிந்துகொள்வது? அதுவரை ஓடி, ஆடி, பேசித் திரிந்த குழந்தை திடீரென அமைதியாக இருக்கும்; அழக்கூடச் செய்யலாம்; அவர்களின் நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் தெரியலாம். இதையெல்லாம் வைத்துத்தான் அவர்கள் எதையோ விழுங்கியிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள முடியும்.

    பேசக்கூடிய பெரிய குழந்தைகளாக இருந்தால் அவர்களிடமே கேட்டுவிடலாம். எதையோ அவர்கள் விழுங்கிவிட்டது உறுதியாகிவிட்டால், முதலில் அவர்களை இருமச் சொல்ல வேண்டும். பின்னர், அவர்களைக் குனியவைத்து, முதுகுப் பகுதியில் ஐந்து முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வெளியே வராவிட்டால், குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து அவர்களின் நெஞ்சுக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகை முஷ்டி மேல் இன்னுமொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும். அப்படியும் பொருள் வரவில்லையென்றால், மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும்.

    பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுதான் சிறந்தது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவிகளைச் செய்யலாம். முதலில், குழந்தையை மல்லாக்கப் படுக்கவைத்து நெஞ்சுப்பகுதிக்கு நடுவில் நம் கையைவைத்து நிமிடத்துக்கு நூறுமுறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படியே முப்பது தடவை செய்த பின்னர், குழந்தையின் மூக்குக்கு அருகே காதை வைத்து, மூச்சு வருகிறதா என்று கவனிக்க வேண்டும். வராவிட்டால், குழந்தையின் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். அப்படியும் குழந்தைக்கு மூச்சு வரவில்லை என்றால், மீண்டும் முதலில் செய்ததுபோல நெஞ்சுப்பகுதியில் ஐந்து முறை கைவைத்து அழுத்த வேண்டும். மீண்டும் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். இப்படியே தொடர்ச்சியாக மருத்துவ உதவி கிடைக்கும்வரை செய்ய வேண்டும். ஒன்று முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த முதலுதவிகளைச் செய்யலாம்.

    ஒரு வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் என்றால், முதலில் வாய்க்குள் விரலைவிட்டு ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் நம் கைகளிலோ, தொடைகளிலோ குழந்தையைக் குப்புறப் படுக்கவைத்து, தலையை தாழ்வாக வைத்துக்கொண்டு குழந்தையின் முதுகில் ஐந்து முறை தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வரவில்லையென்றால், குழந்தையை அதே நிலையில் மல்லாக்கப் படுக்கவைத்து, நெஞ்சுக்குக் கீழே நம் இரண்டு விரல்களை வைத்து மேல் நோக்கிவாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான். குழந்தைகள் எதை விழுங்கியிருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவதுதான் நல்லது. பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவி செய்யலாம்.

    சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள். அது தவறு; அப்படிச் செய்யக் கூடாது. தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.

    வாய்வழியாக மட்டுமல்லாமல், மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு. உதாரணமாக பொரி, கடலை, பாசி போன்றவை. இவற்றால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், குழந்தையின் மூக்கில் சளி வடிந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ரத்தமும் வழியலாம். சமயத்தில், நோய்த்தொற்று ஏற்பட்டு புண்ணாகிவிடும். அதனால் குழந்தையின் மூக்கில் புண் ஏதாவது இருந்தாலும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது.

    • பசுக்களுக்கு தரப்படும் தீவனத்தின் குணம் பாலிலும் எதிரொலிக்கும்.
    • பசுக்களின் பாலை குடிக்கும் போது இந்த நோய் மனிதர்களையும் தாக்கும்.

    பசுமையான மேய்ச்சல் நிலங்களை கிராமங்களில் உருவாக்கி புல், கீரைகளை தீவனமாக அளித்தார்கள். பசுக்கள் இன்று நகர-கிராம குப்பைத் தொட்டிகளில் உணவை தேடி திரிகின்றன. குப்பையில் வீசப்பட்ட கெட்டுப்போன உணவை உண்டு தரும் பால் மனிதர்களையும் பாதிக்கும் என்பதுதான் அதிர்ச்சியான தகவல்.

    தமிழகத்தில் பால் மாடு வளர்ப்பு என்பது பல லட்சக்கணக்கான மக்களுக்கான வாழ்க்கை ஆதாரமாக உள்ளது.

    கிராமங்களில் பசுக்களை வளர்ப்பவர்கள் கறந்த பாலை ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதேபோல் தனியாகவும், பண்ணைகள் மூலமாகவும் விற்கிறார்கள். பொதுவாகவே கொள்முதல் செய்யப்படும் பாலை அந்தந்த நிறுவனங்கள் ` பாஸ்டிரைசேசன் ' என்ற முறையில் 160 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் பதப்படுத்தி கிருமி நீக்கம் செய்து பாக்கெட்டில் அடைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

    நகரங்களில் பசுக்களை வளர்ப்பவர்கள் பலர் ஆங்காங்கே விற்பனை செய்கின்றனர். ஆனால், சரியான வெப்பநிலையில் காய்ச்சாத பாலில் அந்த பசுக்கள் உட்கொண்ட தீவனத்தின் மணம் மற்றும் தன்மை காணப்படுவதுடன், புருசெல்லோசிஸ் போன்ற நோய் தொற்று கிருமிகளும் இருக்கும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பசுக்களுக்கு தரப்படும் தீவனத்தின் குணம் பாலிலும் எதிரொலிக்கும். ஆரோக்கியமான சுகாதார நிலையில் பசும் புற்கள், புண்ணாக்கு, உலர் தீவனங்கள், தூய குடிநீர் தரப்பட்டு வளர்க்கப்படும் பசுக்களில் கறந்த பசும்பால் நறுமணத்துடன், இனிப்பு சுவையோடு இருக்கும்.

    மேய்ச்சலுக்கு போகும் பசுக்கள் நிலத்தில் முளைத்திருக்கும் காட்டு வெங்காயம் போன்ற களைகளை மேயும் போது அவற்றின் பாலில் இந்த களைகளின் வாடை காணப்படும். நிறமும் வேறுபடும். இதுதான் பாலின் இயல்பு.

    இப்போது நம் நாட்டில் பசுக்களின் நிலைமையை பார்க்கலாம். தற்போது நகரங்களிலும் பல கிராமங்களிலும் கூட வளர்க்கப்படும் பசுக்களை போதிய தீவனம் அளிக்க வசதி இல்லாமல் அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இந்த பசுக்கள் தெருத்தெருவாக வீடுகளில் போய் மக்கள் தரும் எஞ்சிய இட்லி, தோசை முதல் குப்பையில் வீசப்பட்ட பாலித்தீன், நாப்கின் வரை அனைத்து கழிவுகளையும் உண்கின்றன.இந்த பசுக்களின் பால் எந்த தரத்தில் இருக்கும் என்பது கேள்விக்குறி.

    இது குறித்து கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியதாவது:-

    பொதுவாக, பாலை வீட்டில் காய்ச்சும் போது அதிகபட்சமாக 100 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் தான் காய்ச்ச முடியும். இந்த கொதி நிலையிலும் தப்பி உயிர் வாழும் நுண்ணுயிரிகள் பாலில் உண்டு. இந்த நுண்ணுயிரிகள் மனித உடலுக்குள் செல்லும் போது என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று இதுவரை பகுப்பாய்வு செய்யப்படவில்லை. ஆனால், குப்பையில் வீசப்பட்ட கெட்டுப் போன உணவை உண்டு வாழும் பசுக்களுக்கு உறுதியாக பல உடல் நல குறைபாடுகளும், அவற்றின் பாலில் தரமற்ற கொழுப்பு மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் காணப்படும் என்பது உறுதி.

    இந்த வகை மாடுகளின் பாலை சரியாக காய்ச்சாமல் குடிக்கும் போது மனிதர்களுக்கு அனீமியா என்னும் ரத்தசோகை வரும். இந்த பாலை குடிக்கும் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு உருவாகும். ஊட்டச்சத்து குறைபாடு தொடர்புடைய நோய்களும் தொடர்ந்து வரும்.சுகாதாரமற்ற நிலையில் வளரும் பசுக்களில் எலும்புருக்கி நோய் மற்றும் புருசெல்லோசிஸ் நோய் இருக்கலாம். இந்த பசுக்களின் பாலை குடிக்கும் போது இந்த நோய் மனிதர்களையும் தாக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுகாதாரமற்ற பால் உற்பத்தியை தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ` மாடு வளர்ப்பு என்றால் அதற்கு சுகாதாரமான கொட்டகை, சத்துள்ள பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனம், தூய குடிநீர் எல்லாம் இருக்க வேண்டும். நகரங்களில் மாடு வளர்ப்பவர்களுக்கு இப்படி எந்த வசதியும் இல்லை. பணம் செலவழித்து தீவனம் வாங்க தயங்கி பசுக்களை சாலையில் திரிய விட்டு குப்பையில் மேய விடுகின்றனர்.

    இதனை தடுக்க, நகர எல்லைக்குள் வளர்க்கப்படும் மாடுகளை ஒரு இடத்தில் வைத்து பராமரிக்கும் வகையில் மாநகராட்சி ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட அளவு இடம் ஒதுக்கி மாட்டு கொட்டில்களை ஏற்படுத்தி தர வேண்டும்.இதன் மூலம் மட்டுமே நகர சாலைகளிலும் குப்பை தொட்டிகளை தேடி பசுக்கள் திரிவதை தடுக்க முடியும். மக்களுக்கு ஆரோக்கியமான பசுக்களின் பால் கிடைக்கும்' என்றார்.

    தாய்ப்பாலுக்கு அடுத்ததாக போற்றப்படுவது பசுவின் பால். மனிதனுக்கு உணவாக பால், நெய், வெண்ணெய், தயிர், மோர் என்றுபல விதமான பொருட்களை தரும் பசுக்களை மனிதர்கள் பாதுகாப்பாக கொட்டில், கோசாலை, பசு மடம்என்று அமைத்து வளர்த்தார்கள்.

    • நீண்டகாலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
    • இவை குழந்தைகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை.

    பொதுவாக நாம் உண்ணும் உணவில் இருந்தும் சுற்றுச்சூழலில் இருந்தும் வேதிப்பொருட்கள் நாள்தோறும் நம் உடலை வந்தடைகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு உடலின் கழிவு நீக்க அமைப்பு மூலம் வெளியேற்றப்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் உடலில் கழிவு நீக்க அமைப்பு முழு வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளதால், தேவையற்ற நச்சு வேதிப்பொருட்களை கழிவாக வெளியேற்ற முடிவதில்லை. எனவே, இந்த வேதி பொருட்களால் பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    குழந்தைகளின் உடலை அடையும் வேதிப்பொருட்களின் பாதிப்புகள் உடனடியாக குழந்தையாக இருக்கும்போதே வெளிப்பட்டு விடுவதில்லை. நம்மைவிட குழந்தைகளின் எதிர்காலம் நீண்டது. அதனால் பின்விளைவுகள் காலம் தாழ்த்தி, அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் வெளிப்படலாம். நாம் பெரியவர்களான பிறகு எதிர்கொள்ளும் புற்றுநோய், மூளை பாதிப்பு, இனப்பெருக்க குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்களை, தாயின் கருவில் நாம் வளரத்தொடங்கிய காலத்தில் இருந்தே தேட வேண்டியுள்ளது.

    குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும் சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை என்பதை வாஷிங்டனை சேர்ந்த சுற்றுச்சூழல் பணிக்குழு என்ற அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வளர்ந்த மனிதன் வேதிமாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகளைவிட குழந்தைகள் வேதி மாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகள் கடுமையானவை. நீண்டகாலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக அவர்களுடைய முதிர்ச்சியடையாத மூளை, எளிதில் பாதிக்கப்படக்கூடியது. குழந்தைகளின் உடலில் வேதி கூட்டுப்புரதங்கள் குறைவாக இருப்பதால், வெளியிலிருந்து உள்ளே வரும் வேதி மாசுகளை வரவேற்கும் நிலையில் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அப்படி உள்ளே வரும் நஞ்சுகள், அவற்றுக்கான இலக்கு உறுப்புகளை அடைந்து அவற்றை எளிதாக நாசம் செய்கின்றன.

    பெட்ரோலிய பொருட்களை எரிப்பதாலும், குப்பையை எரிப்பதாலும் வெளியிடப்படும் பி.ஏ.எச். எனப்படும் பலபடியாக்க அரோமட்டிக் ஹைட்ரோகார்பன்கள், உண்ணும் உணவின் மூலம் தாயை அடைந்து தாயின் வயிற்றில் வளரும் கருவை அடைகிறது. இவை குழந்தைகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை.

    • தட்டமை பாதிப்பு குடிசைப்பகுதிகளில் தான் அதிகளவில் பரவி உள்ளது.
    • சுகாதாரம், ஊட்டத்து விஷயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

    மும்பை பெருநகரம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நிலையில், குழந்தைகளை தட்டம்மை நோய் மிரட்டி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 வாரத்தில் மட்டும் மும்பை பெருநகரில் 5 வயதுக்கு உட்பட்ட 12 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.

    தற்போது இந்த நோய் நவிமும்பை, புனே, தானே பகுதிகளுக்கும் பரவி உள்ளது. மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 371 குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. மும்பையில் தட்டமை பாதிப்பு குடிசைப்பகுதிகளில் தான் அதிகளவில் பரவி உள்ளது. அங்குள்ள உள்ள குழந்தைகள் தடுப்பூசி போடாதது நோய் பரவலுக்கு காரணமாக கூறப்பட்டது. இந்தநிலையில் ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தைகள் இடையே தட்டம்மை பரவ காரணமாக இருப்பதாக தெரியவந்து உள்ளது.

    மும்பையில் நோய் பரவல் அதிகம் உள்ள சிவாஜிநகர் பகுதியில், கடந்த 2010-ம் ஆண்டு குப்பை சேகரிக்கும் மக்களின் 16 குழந்தைகள் ஊட்டத்துகுறைபாடு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநில தட்டம்மை தடுப்பு குழு தலைவர் டாக்டர் சுபாஷ் சலுங்கே கூறியதாவது:-

    ஊட்டத்சத்து குறைபாடு உள்ள மற்றும் தடுப்பூசி போடாத குழந்தைகள் தட்டம்மையால் பாதிக்கப்படும் போது அதிக விளைவுகளை சந்திக்கின்றனர். ஊட்டச்சத்து உணவு கிடைக்காத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு கிரேடு-4 பிரச்சினையை சந்திக்கும் போது அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குடிசைப்பகுதி குழந்தைகளுக்கு ஊட்டத்துகுறைபாடு ஏற்பட்டது குறித்து மூத்த குழந்தைகள் நல மருத்துவர் மிருதுளா பட்கே கூறியதாவது:-

    கொரோனா ஊரடங்கு உழைக்கும் வர்க்கத்தினர் இடையே கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அது அவர்களின் சுகாதாரம், ஊட்டத்து விஷயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. வேலையின்மை மற்றும் கையில் போதிய பணம் இல்லாத காரணத்தால் குடிசைப்பகுதி மக்களால் சரியாக சாப்பிட முடியாமல் போனது.

    கொரோனா ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் விகிதத்தை அதிகரித்து உள்ளது. குறிப்பாக பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் பார்க்க நன்றாக தெரிந்தாலும் அவர்களுக்கு இரும்பு, வைட்டமின் டி போன்ற சத்து குறைபாடுகள் உள்ளன. தடுப்பூசி போடாதது, ஊட்டசத்து குறைபாடு தான் தட்டம்மைக்கு அதிக உயிரிழப்புகள் ஏற்பட காரணம். நல்ல ஊட்டச்சத்துள்ள குழந்தை கூட தட்டம்மை காரணமாக ஒரு வாரத்திற்கு மேல் சாப்பிடுவதை நிறுத்துகிறது.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு செல்லலாம். அந்தவகையில் ஊட்டச்சத்தின்மை அம்மை நோயின் சிக்கலாகும். இந்த நோய் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை மிகவும் கடுமையாக பாதிக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பலவகையான புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
    • பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.

    குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆரோக்கியக் கேடுகளில் முக்கியமானது குடற்புழுப் பிரச்னை. குழந்தைக்குப் பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும்போது குடற்புழுப் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. ஆறு மாதங்கள் முதல் ஒரு வயது வரை அம்மாவின் கண்காணிப்பில் உணவு ஊட்டப்படும்போதும் குடற்புழுப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. ஒரு வயதுக்குமேல் குழந்தைகள் மண்ணில் விளையாடுவது, கைகளை அசுத்தமான இடங்களில் வைத்துவிட்டு அதே கைகளை வாயில் வைப்பது, சுத்தமற்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதுபோன்ற சுகாதார மின்மைப் பிரச்னைகளால் குழந்தைகள் குடற்புழுப் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்.

    குழந்தைகள், வளர்ந்தவர்களின் குடலில் நாடாப்புழு (Tape Worm), நூல் புழு (Thread Worm), கொக்கிப்புழு (Hook Worm), சாட்டைப்புழு (Whip worm), தட்டைப்புழு (Round Worm) எனப் பலவகையான புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம். இவை பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கும். அளவிலும் வடிவத்திலும் வேறுபடும் இந்தப் புழுக்கள், பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.

    வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, காற்று பிரியாமல் இருப்பது, உணவில் நாட்டமின்மை, எடைக்குறைவு, சத்துக்குறைவு, மஞ்சள்காமாலை போன்ற பாதிப்புகளை நாடாப்புழு ஏற்படுத்தும். உறக்கமின்மை, சிறுநீர்க் கழிக்கும்போது வலி போன்ற பிரச்னைகளை நூல்புழு ஏற்படுத்தும். கொக்கிப்புழு பாதிப்பு தீவிரமாகும்போது இருமல், மூச்சிரைப்பு, ரத்தச்சோகை, சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். கொக்கிப் புழுக்கள் ஆசனவாயைச் சுற்றி முட்டையிடும். அதனால் அங்கு குழந்தைகள் விரல்களால் சொறியும்போது, அந்த முட்டைகள் விரல் இடுக்குகள், விரல்களில் சேர்ந்துகொள்ளும். அந்த விரல்களால் புத்தகம், ரிமோட், தட்டு என்று எந்தெந்தப் பொருள்களை எல்லாம் தொடுகிறார்களோ, அங்கெல்லாம் இந்த முட்டைகள் பரவும். அந்தப் பொருள்களைத் தொடுபவர்களையும் தொற்றிக்கொள்ளும். குழந்தைகள் அந்த விரலை வாயில் வைக்க நேர்ந்தால், மிகவும் கெடுதல்களை விளைவிக்கும்.

    எளிமையான ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம் குடற்புழுப் பாதிப்பை தவிர்க்கலாம். அவை...

    * கழிவறை சென்று வந்த பின்னரும் சாப்பிடுவதற்கு முன்னரும் சோப்/ஹேண்ட்வாஷ் பயன்படுத்திக் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

    * குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களைச் சுத்தமாகக் கழுவி, தேவைப்பட்டால் ஸ்டெரிலைஸ் செய்து பராமரிக்கவும்.

    * ஈரமான இடங்கள் தொற்றுக்கு அதிக வழிவகுக்கும் என்பதால் குழந்தைகளை உலர்வான தரைகளில், காலணி அணிந்து பாதுகாப்பாக விளையாட வலியுறுத்தவும்.

    * குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை நகம் வெட்டிவிடவும்.

    * பாதுகாப்பான கழிவறைப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கவும்.

    * வீட்டுக்குள் காலணி அணிந்து வருவதை அனுமதிக்காதிருக்கவும். 

    * மதிய உணவுக்குக் கொடுத்தனுப்பும் ஸ்பூனை லஞ்ச் பையில் போடாமல், தனியாக ஒரு டப்பாவில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.

    * விளையாட்டு மைதானம், தோட்டம் என எங்கு சென்றாலும் காலணி அணிய வலியுறுத்தவும்.

    • குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை நகம் வெட்டிவிடவும்.
    • வீட்டுக்குள் காலணி அணிந்து வருவதை அனுமதிக்காதிருக்கவும். 

    மனிதக் கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து வெளியேறும் குடற்புழுக்களும் அவற்றின் முட்டைகளும் மண்ணில் கலந்திருக்கும். குழந்தைகள் அதுபோன்ற இடங்களில் விளையாடும்போது, அவற்றை எதிர்பாராதவிதமாகத் தொட்டுவிட்டு, கைகழுவாமல் உணவு உண்ணும்போது, விரலை வாயில் வைக்கும்போது அவை உடலுக்குள் செல்லும். கொக்கிப்புழுவின் லார்வாக்கள் சருமத்தைத் துளைத்துக்கொண்டு உடலுக்குள் செல்லக்கூடியவை என்பதால், குறிப்பிட்ட இடங்களில் குழந்தைகள் காலணி அணியாமல் நடக்கும்போது பாதங்கள் வழி உள்செல்கின்றன.

    படைபோன்ற பிரச்னை ஏதுமின்றி ஒருவருக்குப் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டால், கொக்கிப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்புள்ளது. சுகாதாரமற்ற தண்ணீரைக் கொதிக்கவைக்காமல் அருந்துவது, காய்கறிகள், பழங்களைக் கழுவாமல் உண்பது, முழுமையாக வேகவைக்காத இறைச்சி மற்றும் உணவுகளைச் சாப்பிடுவது என இவையெல்லாம் புழுக்கள் உடலினுள் செல்ல வாய்ப்பளிக்கும். சுகாதாரமற்ற வீடு, அறை, படுக்கை, உள்ளாடைகள் இவையெல்லாம் குடற்புழுத்தொற்று பெருகக் காரணங்களாகும்.

    குடற்புழுப் பாதிப்பைத் தவிர்க்க முடியுமா?

    எளிமையான ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம் தவிர்க்கலாம். அவை...

    * கழிவறை சென்று வந்த பின்னரும் சாப்பிடுவதற்கு முன்னரும் சோப்/ஹேண்ட்வாஷ் பயன்படுத்திக் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

    * குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களைச் சுத்தமாகக் கழுவி, தேவைப்பட்டால் ஸ்டெரிலைஸ் செய்து பராமரிக்கவும்.

    * ஈரமான இடங்கள் தொற்றுக்கு அதிக வழிவகுக்கும் என்பதால் குழந்தைகளை உலர்வான தரைகளில், காலணி அணிந்து பாதுகாப்பாக விளையாட வலியுறுத்தவும்.

    * குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை நகம் வெட்டிவிடவும்.

    * பாதுகாப்பான கழிவறைப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கவும்.

    * வீட்டுக்குள் காலணி அணிந்து வருவதை அனுமதிக்காதிருக்கவும். 

    * மதிய உணவுக்குக் கொடுத்தனுப்பும் ஸ்பூனை லஞ்ச் பையில் போடாமல், தனியாக ஒரு டப்பாவில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.

    * விளையாட்டு மைதானம், தோட்டம் என எங்கு சென்றாலும் காலணி அணிய வலியுறுத்தவும்.

    • இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம்.
    • இதற்கு தடுப்பூசிகள் உதவுகின்றன.

    மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களுள் நிமோனியா காய்ச்சலுக்கு முக்கிய இடம் உண்டு.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் இது ஏற்படலாம் என்றாலும், பச்சிளம் குழந்தைகளை குறிவைத்து தாக்குவது நிமோனியாவின் தனித்தன்மை.

    பலதரப்பட்ட கிருமிகள் காற்றில் கலந்துவந்து நுரையீரலை தாக்குவதால், நிமோனியா ஏற்படுகிறது. இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியை உமிழும்போது, இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதை சுவாசிக்கும் அடுத்த நபருக்கும் தொற்றிக்கொள்ளும். எனவே, இந்த நோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கு நிமோனியா பரவ வாய்ப்புகள் அதிகம்.

    5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சரவர தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், விறகு அடுப்பு புகையை சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை நிமோனியா எளிதில் தாக்கும். இந்த நோயுள்ள குழந்தைக்கு பசி இருக்காது, சாப்பிடாது.

    கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். இதனால் குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாக காணப்படும்.

    இந்த நோயை கவனிக்க தவறினால், இந்த கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளைஉறை போன்றவற்றை பாதித்து, உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம்.

    உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழக்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள். அதாவது, நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இதற்கு தடுப்பூசிகள் உதவுகின்றன. நிமோனியா சில நேரம் பெரியவர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே இதற்கு காரணம். இதைத் தவிர்க்க 50 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    • 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தம்மை சுயமதிப்பீடு செய்ய அறிந்த நிலையில் இருப்பார்கள்.
    • பதின்பருவத்துக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் அதிக மனப்பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள்.

    ''பதற்றம் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கக் கூடிய பிரச்னை அல்ல. குழந்தைகளும் தற்போது மிக அதிகமாக மனப்பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களுமே மறைமுகமான காரணமாக இருக்கிறார்கள். அது தெரிந்தோ அல்லது அவர்களுக்கே தெரியாமலோ...'' என்கிறார் உளவியல் மருத்துவரான லீனா ஜஸ்டின்.குழந்தைகளின் மனப்பதற்றத்தை ஏன் உடனடியாக கவனிக்க வேண்டும் என்பதற்கும், அதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்குமான ஆலோசனைகளை இங்கே முன் வைக்கிறார்.

    * உங்கள் குழந்தை அதீத தனிமையை விரும்புகிறதா?

    * ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை படிப்பதைத் தவிர்க்கிறதா?

    * தேர்வு நேரங்களில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளின்போது வாந்தியெடுப்பதோ அல்லது வயிறு சரியில்லை எனச் சொல்வதோ

    நடக்கிறதா?

    * உங்களின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துகிறதா?

    * பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறதா?

    * சில நேரங்களில் ஒருவித எரிச்சல், அழுகை அல்லது மனபதற்றத்துடன் காணப்படுகிறதா?,

    * உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பதுமாக இருக்கிறதா?

    மேற்கண்டவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள். இது ஓர் ஆலோசனைதான். மற்றபடி, உங்கள் குழந்தை மனப்பதற்ற நிலையில் உள்ளதா என்பதை அறிய ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து இது எந்த வகையிலான மனப்பதற்றம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.பெற்றோர் செய்ய வேண்டியவைகல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.

    அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் குழந்தையை உங்களிடமிருந்து காத தூரம் பிரித்துவிடும் என்பதை மறவாதீர்கள். குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம்... இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.

    சிகிச்சைகள்...

    நோயின் தீவிரத்தைப் பொறுத்து கவுன்சிலிங் செய்யப்படும். Cognitive behavioral therapy என்னும் எண்ணங்களை சரிபடுத்தும் சிகிச்சை மற்றும் Sensory Enrichment Therapy போன்ற சிகிச்சைமுறைகள் குழந்தையை முழுவதுமாக மனப்பதற்றத்திலிருந்து மீட்டெடுக்கும்!

    ×