search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cinema Tree"

    • 150 ஆண்டுகள் பழமையான நித்ரா கன்னேறு மரம்.
    • மரம்‌ சினிமா படப்பிடிப்புக்கு பிரபலமானது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கோவூர் அருகே உள்ள குமாரசாமி குளித்தலை என்ற இடத்தில் உள்ள கோதாவரி ஆற்றின் கரையில் 150 ஆண்டுகள் பழமையான நித்ரா கன்னேறு மரம் ஒன்று உள்ளது.

    இந்த மரத்தை பிரபல இயக்குனர்கள் பாபு, கே. விஸ்வநாத் மற்றும் ராகவேந்திர ராவ் ஆகியோர் தங்கள் படங்களில் அதிக அளவில் காட்டி வந்தனர்.

    இதனால் இந்த மரம் சினிமா படப்பிடிப்புக்கு பிரபலமானது. இதுவரை இந்த மரத்தின் அடியில் 300 சினிமா பட பிடிப்புகள் நடந்துள்ளன.

    தெலுங்கு சினிமாவை பொருத்தவரை கிராமக் காட்சிகள் என்றால் இந்த மரம் இடம்பெறாமல் இருந்தது இல்லை. அந்த அளவுக்கு பிரபலமானதால் இதனை சினிமா மரம் என அந்த பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக 150 ஆண்டுகள் பழமையான சினிமா மரம் வேரோடு சாய்ந்தது. கிராம மக்கள் மரத்தை பார்வையிட்டு அதன் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்தனர்.

    இந்த மரம் இதற்கு முன்பு 1953, 1986, 2022 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தையும் 1996 பயங்கர சூறாவளி காற்றையும் தாங்கி நின்றது.

    இது குறித்து கிராம மக்களுக்கு கூறுகையில், `இந்த மரத்தை உள்ளூர் கிராமவாசியான சிங்குலூரி தாதாபாய் என்பவர் நட்டு உள்ளார். மரத்தின் வீழ்ச்சி எங்களை கவலை கொள்ள செய்தது.

    இதில் ஏராளமான படப்பிடிப்புகள் நடந்துள்ளன. மீண்டும் அந்த இடத்தில் புதிய மரம் ஒன்றை நட்டு சினிமா படப்பிடிப்பு தளத்தை புதுப்பிக்க வேண்டும் என்றனர்.

    ×