search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cloud burst"

    • மேகவெடிப்பில் சனிக்கிழமை வரை 53 பேர் மாயமாகி உள்ளதாகவும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
    • மேகவெடிப்பு காரணமாக சேதமான ராம்பூர் மற்றும் சமேஜ் பகுதிகளை இணைக்கும் சாலையை மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    இந்தியாவில் பருவமழை பாதிப்பில் பல்வேறு மாநிலங்கள் சிக்கித் தவித்து வருகின்றன. சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி பலியானோர் எண்ணிக்கை 365ஆக அதிகரித்து உள்ளது. மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    வயநாடு இயற்கை பேரிடர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த புதன்கிழமை இரவு மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் ஒரு கிராமம் முழுவதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 1 வீடு மட்டுமே எஞ்சியுள்ளது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து சமேஜ் கிராமத்தை சேர்ந்த அனிதா என்பவர் கூறியதாவது:- புதன்கிழமை இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது பலத்த இடி இடித்தபோது வீடே உலுக்கியது. இதையடுத்து நாங்களே வெளியே வந்து பார்த்தபோது, கிராமம் முழுவதும் அடித்துச்செல்லப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாங்கள் கிராமத்தில் உள்ள கோவிலில் போய் இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தோம். என் வீடு மட்டும் பேரழிவில் இருந்து தப்பியது, ஆனால் மற்ற அனைத்தும் என் கண்முன்னே அடித்துச் செல்லப்பட்டன என்று கூறினார்.

    அதே கிராமத்தை சேர்ந்த வயதான பக்ஷி ராம் கூறியதாவது, "எனது குடும்பத்தினர், சுமார் 14 முதல் 15 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளம் பற்றிய செய்தி அதிகாலை 2 மணிக்கு எனக்கு கிடைத்தது. அப்போது ராம்பூரில் இருந்ததால் நான் உயிர் பிழைத்தேன். அதிகாலை 4 மணிக்கு இங்கு வந்தேன். எல்லாம் அழிந்துவிட்டன. என் குடும்பத்தினரை தேடுகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

    இதனிடையே மேகவெடிப்பு காரணமாக சேதமான ராம்பூர் மற்றும் சமேஜ் பகுதிகளை இணைக்கும் சாலையை மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மேகவெடிப்பில் சனிக்கிழமை வரை 53 பேர் மாயமாகி உள்ளதாகவும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

    முன்னதாக, கிராமத்தில் வீடுகளை மீண்டும் கட்டுவதற்கான நிதி உதவி விரைவில் அறிவிக்கப்படும் என்று இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உயர் அதிகாரிகள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
    • கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போன்று சரிந்து விழுந்தது.

    பருவமழை பாதிப்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் சிக்கித் தவிக்கின்றன. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் மழை காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இந்த வரிசையில், இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் மேக வெடிப்பு காரணமாக கனமழை வெளுத்து வாங்குகிறது.

    சிம்லாவை அடுத்த ராம்பூரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். மேக வெடிப்பு தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

    இந்த குழுவில் பேரிடர் மேலாண்மை ஆணைய ஆணையர் அனுபம் காஷ்யப் மற்றும் மாவட்ட மூத்த காவல் துறை தலைவர் சஞ்சீவ் காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். "எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி மேக வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் 20 பேர் மாயமாகி உள்ளனர்," என காஷ்யப் தெரிவித்தார்.

     

    மேக வெடிப்பு காரணமாக அந்த பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி பகுதியிலும் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேக வெடிப்பு காரணமாக கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போன்று சரிந்து விழுந்தது. மேலும் சாலைகள் சேதமடைந்துள்ளன.


    இமாச்சல பிரதேசம் மட்டுமின்றி உத்தராகண்ட் மாநிலத்தில் ஃபியூரி புயல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெய்து வரும் கனமழையில் இதுவரை இருவர் உயிரிழந்தனர். மேலும், பலர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    ×