என் மலர்
நீங்கள் தேடியது "CM Naveen Patnaik"
- 7 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
- அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளதாக மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்டமாக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இதனை தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு நவீன் பட்நாயகை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்துள்ளது.
ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தயாநிதிமாறன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளதாக மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.



ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் இருந்து பட்ராபூர் பகுதிக்கு இறந்த உறவினரின் அஸ்தியை கரைப்பதற்காக காரில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது தீடிரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த கால்வாயில் விழுந்து மூழ்கியது.

இந்த விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்துக் கொண்ட அம்மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Accident #Odisha #NaveenPatnaik
புவனேஸ்வர்:
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.
ஆசிய போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களது சொந்த மாநில அரசுகளால் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை டுடீ சந்த், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது அபார திறமை மூலம் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதற்கு ஊக்கத்தொகையாக ஒடிசா மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக் 1.5 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து, டுடீ சந்த் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி பதக்கம் வென்று தனது திறமையை உலகுக்கு நிரூபித்தார். இவரது இந்த திறமையை பாராட்டும் வகையில், முதல்மந்திரி நவீன் பட்னாயக் கூடுதலாக 1.5 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், இந்தோனேஷியாவில் இருந்து இந்தியா திரும்பிய டுடீ சந்துக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் ரூ.3 கோடிக்கான காசோலையை இன்று வழங்கினார் #AsianGames2018 #Odisha #DuteeChand #NaveenPatnaik
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.
ஆசிய போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களது சொந்த மாநில அரசுகளால் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை டுடீ சந்த், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது அபார திறமை மூலம் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதற்கு ஊக்கத்தொகையாக ஒடிசா மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக் 1.5 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.

பூரி:
ஒடிஷா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
முதல்-மந்திரி பட்நாயக் பூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார்.
பூரி, கோனார்க் தேசிய நெடுஞ்சாலையில் முதல்- மந்திரி கார் சென்றபோது காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு திரண்டு நவீன் பட்நாயக்குக்கு எதிராக கோஷமிட்டனர். அதோடு கருப்புக் கொடியும் காட்டினார்கள்.
சில காங்கிரஸ் தொண்டர்கள் முதல்-மந்திரி கார் மீது அழுகிய தக்காளிகளை வீசினார்கள். இதை நவீன் பட்நாயக்கும், அதிகாரிகளும் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்பில் உள்ள குறைபாடே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்-மந்திரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் ஏற்பட்ட இந்த குளறுபடி குறித்து டி.ஜி.பி. சர்மா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். நவீன் பட்நாயக் கார் மீது தக்காளிகளை வீசிய காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். #CMNaveenPatnaik
