என் மலர்
நீங்கள் தேடியது "CM Rangasamy"
- மத்திய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது விரைவில் கட்டடம் கட்டி முடிக்கப்படும்.
- புதுவை சிறந்த மாநிலமாக வரவேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
புதுச்சேரி:
புதுவை கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது.
புதுவை கோர்ட்டு வளாகத்தில் ரூ.13.79 கோடியில் வக்கீல்களுக்கு 105 அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் வரவேற்றார். மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்ரிஜிஜூ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவுக்கு கவர்னர் தமிழிசை முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவையில் சிறிய பள்ளிக்கூடத்தில் சட்டக்கல்லூரி இயங்கி வந்தது. அதில் படித்தவர்கள் இன்று சிறந்த வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் உள்ளனர். தற்போது சட்டக்கல்லூரி பெரிய வளாகத்தில் காலாப்பட்டில் இயங்கி வருகிறது. சட்ட பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்ட நிலத்தை தேர்வு செய்தபோது, மரங்கள் அடர்ந்து காடுகள் இருந்த பகுதியை தேர்வு செய்தோம். இங்கு விரைந்து பணிகளை முடித்து கோர்ட்டு வளாகத்தை உருவாக்கினோம். இன்று பிற மாநிலத்தினர் வியக்கும் வகையில் கோர்ட்டு வளாகம் அமைந்துள்ளது. இங்கு வக்கீல்கள் அறைகள் கட்ட ரூ.13 கோடி அரசு ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்படும். அதை திறந்து வைக்கவும் அனைவரும் வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
வக்கீல்கள், நீதிபதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றித்தர அரசு நடவடிக்கை எடுக்கும். கோர்ட்டு வளாகத்தில் சிறிய மருத்துவ சிகிச்சை மையம் அமைத்துத்தரப்படும்.
இளம் வக்கீல்கள் உதவித்தொகை உயர்த்தித்தரப்படும். புதுவை மக்கள் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தீர்க்கப்படுகிறது. வக்கீல்கள் விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை சிறந்த மாநிலமாக வரவேண்டும் என்பதே அரசின் எண்ணம். நிர்வாகம், செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்.
அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும். புதுவை மாநில தகுதி பெற தேவையான ஆலோசனைகளை நீதிபதிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்ரிஜிஜூ பேசும் போது புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்கப்படும் என்றார்.
விழாவில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ராமன், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா, புதுவை மாவட்ட பொறுப்பு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., நேரு எம்.எல்.ஏ., தலைமை செயலர் ராஜீவ்வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் நன்றி கூறினார்.
- ரங்கசாமி சட்டைபையில் இருந்து பணத்தை எடுத்து தமிழக நோயாளியிடம் கொடுத்தார்.
- திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நோயாளி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியம் சாமிக்கு திலாசுப்பேட்டை அருகில் கோவில் எழுப்பி உள்ளார்.
இங்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை செய்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கடந்த சனிக்கிழமை பூஜை முடித்து அன்னதானம் செய்ய சென்ற முதலமைச்சரை அங்கே அமர்ந்திருந்த ஒரு முதியவர் கைகூப்பி வணங்கினார்.
மேலும் தன் கையில் இருந்த ஒரு மருந்து சீட்டை காண்பித்து 'மருந்து வாங்க காசு இல்லை' என்றும் கூறினார். உடனடியாக முதல்-அமைச்சர் தனது சட்டைபையில் இருந்து பணத்தை எடுத்து தமிழக நோயாளியிடம் கொடுத்தார். அவர் யார் என்பது குறித்து அங்கு இருந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நோயாளியான அவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2 கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவிலில் அன்னதானம் நடைபெறுவது கேள்விப்பட்டு வந்ததாகவும் தெரியவந்தது.
அவருக்கு அன்னதானம் வழங்கி காவலர்கள் பஸ்சில் ஏற்றி அனுப்பினர். முதலமைச்சர் திருவண்ணாமலை நோயாளிக்கு எவ்வளவு தொகை கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. புதுவை முதலமைச்சரிடம் தமிழக நோயாளி பண உதவி பெறும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
- புதுவையில் திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
பிஆர்.சிவா(சுயே): சுகாதாரத்துறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்காலில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? பழைய காப்பீடு திட்டத்தின் கீழ் மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு வருமான சான்றிதழ் அடிப்படையில் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த அரசு முன்வருமா?
முதலமைச்சர் ரங்கசாமி: ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் புதுவையில் ரூ.20 கோடியே 25 லட்சத்தில் 34 ஆயிரத்து 327 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். காரைக்காலில் ரூ.2 கோடியே 54 லட்சத்தில் 2 ஆயிரத்து 417 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து எதிர்கட்சி வரிசையிலிருந்த தி.மு.க.-காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் புதுவையில் எந்த நோயாளிகளும் பயனடைவதில்லை.
இந்த திட்டம் முறையாக புதுவையில் செயல்படுத்தவில்லை. இதனால் பலர் உரிய காலத்தில் நிதி கிடைக்காமல் இறந்துள்ளனர் என சரமாரியாக ஒரே நேரத்தில் குற்றம் சாட்டி பேசினர்.
இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உறுப்பினர்கள் தனித்தனியாக கருத்து தெரிவிக்கும்படி கூறினார்.
எதிர்கட்சித்தலைவர் சிவா:-பிரதமர் மிகுந்த நல்லெண்ணத்தோடு கொண்டு வந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் புதுவையில் அதிகாரிகள் முறையாக இதை செயல்படுத்தவில்லை. இதற்கான காப்பீடு அட்டையை மருத்துவமனைகளில் காண்பிக்கும் போது தூக்கி வீசி விடுகின்றனர். புதுவையில் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.
கல்யாணசுந்தரம் (பா.ஜனதா): தவறு செய்த அதிகாரிகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கின்றனர்.
வி.பி.ராமலிங்கம் (பா.ஜனதா): நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதை களைய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.
முதலமைச்சர் ரங்கசாமி: திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம். அனைவருக்குமான சுகாதார திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களையும் உள்ளடக்கும் காப்பீடு திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
- இடஒதுக்கீடு, சமூகரீதியில் வழங்கப்படும் இடஒதுக்கீடு முறைகள் ரத்தாகும். இது சமூகநீதிக்கு எதிரானது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
புதுவையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர், அரசு மருத்துவக்கல்லூரி உட்பட அனைத்து தனியார் மருத்துவ கல்லூரியின் மருத்துவ படிப்புகளிலும் தேசிய மருத்துவ ஆணையமே பொது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது கலந்தாய்வு என்ற புதிய முறையால் புதுவை மாநிலத்திற்கென ஜிப்மரில் கிடைக்கும் இடஒதுக்கீடு ரத்தாகும். புதுவை மாநில அரசு மாணவர்களுக்காக பிராந்தியவாரியாக அளித்துவரும் இடஒதுக்கீடு, சமூகரீதியில் வழங்கப்படும் இடஒதுக்கீடு முறைகள் ரத்தாகும். இது சமூகநீதிக்கு எதிரானது.
தற்போதுள்ள நடை முறையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். புதுவை மாநில மாணவர்களின் உரிமையை காக்க முதல்-அமைச்சர் முன்வர வேண்டும். உடனடியாக மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுத வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்திய கம்யூனிஸ்டு அழைப்பு
- மாநில உரிமைகளை பறித்து, மத்திய அரசிடம் அதிகாரத்தை குவிப்பதாகும், பாராளுமன்ற, சட்டமன்ற ஜனநாயகத்தை ஏற்க மறுப்பதாகும்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தன்னுடைய அதிகாரம் முற்றிலும் பறிபோய் முதல்-அமைச்சர் இருக்கையில் ஏன் உட்கார்ந்து இருக்கிறோம் பின்பக்கமாக வெளியே சென்று விடலாம் போல இருக்கிறது என்று ரங்கசாமி பகிரங்கமாக கூறுகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் என் கூற்றை மதிப்பதில்லை, மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை தினந்தோறும் மன உளைச்சலாக இருக்கிறது என்று புலம்பினார்.
கடந்த ஆகஸ்ட்டு மாதம் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் மக்களின் நலனுக்காக பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள் என்று தீர்மானம் மூலமாக அறைக்கூவல் விடப்பட்டது. டெல்லி அரசுக்கு எதிரான அவசர சட்டத்தை எதிர்த்து முதல் அமைச்சர் ரங்கசாமி குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் முதல்-அமைச்சர் இதை செவிமடுக்கவில்லை.
பா.ஜனதாவின் கொள்கை கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து, மாநில உரிமைகளை பறித்து, மத்திய அரசிடம் அதிகாரத்தை குவிப்பதாகும், பாராளுமன்ற, சட்டமன்ற ஜனநாயகத்தை ஏற்க மறுப்பதாகும்.
புதுவை மண்ணின் விடுதலையை பேணிக்காக்க, மாநில உரிமைகளை நிலைநாட்டிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் ஜனநாயகத்தை பாதுகாத்திட முதல அமைச்சர் ரங்கசாமி அரசியல் உறுதியுடன் செயல்பட வேண்டும். மத்திய பா.ஜனதா அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். புலம்பிப் பயனில்லை போராட முன்வாருங்கள் என்று ரங்கசாமியை மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறோம் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதல்-அமைச்சரிடம் சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் தானம் செய்வதை உணர்வுபூர்வமாக கருதி தானம் செய்வதை நிறுத்தி விடுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளரும் முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சம்பத் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதா வது:-
உடல் உறுப்பு தேவைக்கும் அவை கிடைப்பதற்கும் சராசரி இடைவெளி மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகம் உள்ளது. சாலை விபத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின்றன.
ஆனால் இவர்களின் பெரும்பாலானவர்கள் உடல் தானம் செய்வதில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் தானம் செய்வதை உணர்வுபூர்வமாக கருதி தானம் செய்வதை நிறுத்தி விடுகின்றனர்.
இதன் பொருட்டே தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல் தானம் செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது பொதுமக்களிடம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது . ேமலும் தற்போது உடல் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவத்துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
சாமானியனின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடப்பது என்பது அவரின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய கவுரவத்தை கொடுக்கும் அது மட்டு மில்லாமல் உடல் உறுப்பு மாற்று என்பது மிகப்பெரிய வணிகமாவதையும் தடுக்கவும் உடல் உறுப்பு பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் இது கலைத்து விடும்.
எனவே புதுவையிலும் உடல் உறுப்பு தானம் செய்யும் நபர்களின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்ற திட்டத்தை நடைமு றைப்ப டுத்தத் தேவையான நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்
- ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.
புதுச்சேரி:
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் காலாப்பட்டு தொகுதியை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. துறை இயக்குனர் முத்துமீனா வரவேற்றார்.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
காலாப்பட்டு தொகுதியில் கடல் அரிப்பு பெரும் பிரச்சினையாக உள்ளது. அதை தடுக்க ரூ.56 கோடியில் கல் கொட்டும் பணி நடந்து வருகிறது. மக்கள் குறைகளை கேட்டு அதை தீர்ப்பதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. புதுவை மாநிலம் முழுவதும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கி அரசு கவனம் செலுத்தி வருகிறது.
சமூகநலத்துறை மூலம் மக்களுக்குரிய நலத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். சட்டசபையில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் அடுத்த கூட்டத் தொடருக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சட்டசபையில் எந்த அரசு உதவி பெறாத குடும்ப தலைவிக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தோம்.
இதில் 70 ஆயிரம் பேரை கண்டறிந்து படிப்படியாக தொகுதிவாரியாக கொடுத்து வருகிறோம். கியாஸ் சிலிண்டருக்கு சிகப்பு கார்டுக்கு ரூ.300, மஞ்சள் கார்டுக்கு ரூ.150 மானியம் வழங்கும் திட்டம் அறிவித்தோம்.
இதற்காக ரூ.8 கோடி ஒதுக்கினோம். சுமார் 20 ஆயிரம் பேருக்கு கியாஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஓரிருநாளில் 40 ஆயிரம் பேருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
பெண் குழந்தைகள் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு, செலுத்தப்பட்டு வருகிறது. 200 பேருக்கு நிதி செலுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும் விபத்து காப்பீடு திட்டத்துக்கு ரூ.92 லட்சம் அரசு செலுத்தியுள்ளது. அரசு அறிவித்த 4 திட்டத்தையும் அரசு செயல்படுத்திவிட்டது.
மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க டெண்டர் முடிவு செய்தோம். ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.
மாதந்தோறும் அரிசிக்கு பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல திட்டங்களையும் செயல்படுத்தும். உள்கட்டமைப்பு மேம்படுத்த மத்திய அரசிடம் நிதி பெற்று திட்டங்களை நிறை வேற்றுவோம்.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1600 கோடி நிதி கோரியுள்ளோம். மத்திய அரசும், பிரதமர் மோடியும் புதுவைக்க நிச்சயம் நிதி வழங்குவார்கள். இந்த ஆண்டே பணியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரம் கிடைக்கும் போது இந்திய அணி விளையாடும் போட்டிகளை கண்டு களிப்பார்.
- போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரு வீதியில் உள்ள வாட்ச் கடையில் அமந்து நண்பர்க ளுடன் பேசுவது வழக்கம்.
காலை நேர உணவை பல நாட்கள் அங்கேயே அமர்ந்து சாப்பிடுவார். கிரிக்கெட் ரசிகரான முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரம் கிடைக்கும் போது இந்திய அணி விளையாடும் போட்டிகளை கண்டு களிப்பார்.
புதுவை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் அறையில் உள்ள டிவியில் கிரிக்கெட் போட்டியை பார்ப்பார். நேரம் இல்லாத பட்சத்தில் கிரிக்கெட் போட்டி முடிவுகளை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய தினம் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குஜராத் அகமதாபாத்தில் நடந்தது. நேற்று மாலை நேரு வீதி வாட்ச் கடைக்கு வந்தார்.
அங்கு அமர்ந்து போட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ரசித்து பார்த்தார். போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு
- ஆண்டு தோறும் அக்டோபர் 21-ந் தேதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் அனுசரிக் கப்படுகிறது.
புதுச்சேரி:
காவல் துறையில் பணியில் இருந்தபோது இறந்த காவலர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தும் தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படு கிறது.
சீன படையினரால் எல்லையில் 1959-ம் ஆண்டு நடந்த சண்டையின் போது எல்லை பாதுகாப்பு வீரர்கள் வீரமரண மடைந்தனர். பலர் காணாமல் போனார்கள்.
இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 21-ந் தேதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
புதுவை கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல் -அமைச்சர் ரங்கசாமி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ், ஏ.டி.ஜி.பி. பிரிஜேந்திரகுமார் யாதவ் ஆகியோரும் மலர் வளையம் வைத்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு
- தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு பொது விடுமுறை விட முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தர விட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அரசு அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் சட்டசபையில் இன்று நடந்தது.
கூட்டத்தில், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, அரசு செயலாளர்கள் கேசவன், மணிகண்டன், பங்கஜ்குமார்ஜா உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு பொது விடுமுறை விட முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தர விட்டுள்ளார்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது ஊடகத்துறையிலும் வளர்ச்சியடைந்து வருகிறது.
புதுச்சேரி:
தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் ரங்க சாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஜனநாயக மாண்புகளைக் கட்டிக்காப்பதில் பத்திரிகை மற்றும் ஊட கங்களின் பங்கு அளப்பரியது. பத்திரிகையாளர்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றவர்கள்.வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அவ்வப்போது ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்கு உதவி வந்துள்ளன. அந்த வகையில் தற்போது, பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது ஊடகத்துறையிலும் வளர்ச்சியடைந்து வருகிறது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களுக்கும் அரசிற்கும் பாலமாக விளங்கும் பத்திரிகைத்துறையின் மகத்தான பணியினை இந்த இனிய நாளில் பாராட்டி நல்வாழ்த்துகனைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்
- பள்ளியில் படித்தவர்களும், ஆசிரியர்களாக பணியாற்றியவர்களும் பெரும் தலைவர்களாக திகழ்கின்றனர்.
புதுச்சேரி:
புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி. பள்ளி கல்வித்துறையிடம் ஒப்படைப்பு விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவை பழமை மாறாத நகரமாக உள்ளது. நகர பகுதியின் அழகிய கட்டடங்களை பார்வையிட அதிமானவர்கள் வருகின்றனர். புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதற்கு இந்த கட்டடங்களும் ஒரு காரணம். பழமையான கட்டடங்கள் வணிக வளாகங்களாக மாறி வருகின்றன.
75 கட்டடங்களை இப்போது பராமரித்து வருகிறோம். இதற்காக ரூ.75 லட்சம் வழங்கி வருகிறோம். அவர்களும் பராமரித்து வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக மேரி கட்டடம் புனரமைக்கும்போது இடிந்து விட்டது. அதன் பழமை மாறாமல் கட்டி முடித்துள்ளோம். மிகவும் பழமையான கட்டிடத்தில் வ.உ.சி. பள்ளியும் ஒன்று.
இதை பாதுகாக்க வேண்டியது அரசின் நோக்கம். இந்த பள்ளியில் படித்தவர்களும், ஆசிரியர்களாக பணியாற்றியவர்களும் பெரும் தலைவர்களாக திகழ்கின்றனர். பழமை மாறால் புதுவையின் கட்டடங்கள் பராமரிக்கப்பட வேண்டும், புனரமைக்கப்பட வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
அதன்படி வ.உ.சி. பள்ளி புனரமைக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு பள்ளிகள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும் என்பது குறையாக உள்ளது. அரசு பள்ளிகளை பராமரிக்க, புனரமைக்க, கழிப்பறைகளை பராமரிக்க தேவையான நிதி ஒதுக்கி பணிகளை செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளிகள், மருத்துவமனைகளில் பராமரிப்பு ஊழியர்கள் சரியாக பணிகளை செய்ய வேண்டும். அரசு பள்ளிகளை பராமரிக்க உரிய நிதிஒதுக்கீடு செய்யப்படும். தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சில பள்ளிகளை தத்தெடுத்து சீரமைக்க முன்வர வேண்டும்.
அரசு பள்ளியில் அதிகளவு மாணவர்கள் படிக்க வேண்டும். அதற்கான திட்டங்களை அரசு வகுத்து செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளோம். கல்வே கல்லூரியும் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்படும். அழகான புதுவையை மேலும் அழகாக்க வேண்டியது புதுவை மக்களின் கடமை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.