என் மலர்
நீங்கள் தேடியது "Coach"
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறுகிறது.
- ஆண்டி முர்ரே சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்றார்.
நான்கு வகை கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் செர்பிய வீரரும், நம்பர் 2 வீரருமான நோவக் ஜோகோவிச் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவை புதிய பயிற்சியாளராக அறிவித்தார்.
அனுபவம் வாய்ந்த டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்றார்.
ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
இதுதொடர்பாக ஜோகோவிச் கூறுகையில், எனது மிகப்பெரிய போட்டியாளர்களில் ஒருவரை, வலையின் அதே பக்கத்தில், இந்த முறை எனது பயிற்சியாளராக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.
- ஞாயிற்றுக்கிழமை முகாமின் இறுதி நாளாகும்.
- தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2025 ஜனவரி 28 முதல் பிப்ரவரி 14 வரை நடைபெறும்
உத்தரகாண்டில் நடைபெற உள்ள 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிக்கு தயராகி வந்த மைனர் ஹாக்கி வீராங்கனை பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பயிற்சியாளர் பானு அகர்வால் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். புகாரின் பேரில், அகர்வாலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஹரித்துவாரில் போலீஸார் கைது செய்தனர். அவரின் பயிற்சி சான்றிதழும் ரத்து செய்யப்படுகிறது.
ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஹாக்கி தேர்வு முகாமுக்கு மூன்று பயிற்சியாளர்களுடன் சுமார் 30 சிறுமிகள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை முகாமின் இறுதி நாளாகும்.
பயிற்சியாளர் அந்த வீராங்கனையை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
சிறுமியின் உடல்நிலை ஆரம்பத்தில் நன்றாக இல்லை, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
உத்தரகாண்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2025 ஜனவரி 28 முதல் பிப்ரவரி 14 வரை நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) கடந்த திங்களன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- காபியில் போதைப்பொருள் கலந்து கொடுத்து கடந்த 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததுள்ளான்.
- போக்ஸோ மற்றும் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமி கிரிக்கெட் பயிற்சியாளரால் 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ள பாங்கி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி அங்குள்ள நியூ ஸ்டார் அகாடமிக்கு கிரிக்கெட் பயிற்சிக்கு செல்வது வழக்கம்.
அங்கு பயிற்சியாளராக இருந்த நீரஜ் வர்மா, சிறுமிக்கு பயிற்சிக் குறிப்புகள் என்ற பெயரில், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, காபியில் போதைப்பொருள் கலந்து கொடுத்து கடந்த 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததுள்ளான்.
சிறுமி எதிர்ப்பு தெரிவித்தபோது, கொலை மிரட்டல் விடுத்தும், சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியும் உள்ளான். இதனால் ஒரு கட்டத்த்தில் மனம் நொந்து போன சிறுமி, தைரியத்தை வரவழைத்து தன் குடும்பத்தாரிடம் நடந்ததை கூறினாள். இதையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் பாங்கி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட பயிற்சியாளர் மீது போக்ஸோ மற்றும் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவி காலம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்கும் முடிவுக்கு வந்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் விருப்பம் உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.
கிப்ஸ், மனோஜ் பிரபாகர், ஓவைஸ் ஷா, மாஸ்கரனாஸ், ரமேஷ் பவார் உள்ளிட்டோர் பதவிக்கு விருப்பம் தெரிவித்த நிலையில், தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டனும் பயிற்சியாளர் போட்டியில் இணைந்துள்ளார். அவரும் விண்ணப்பம் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 51 வயதான கிர்ஸ்டன், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு 3 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்ததோடு 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்கு வகித்தார்.
கபில்தேவ் தலைமையிலான இடைக்கால கமிட்டி விண்ணப்பித்தவர்களிடம் வருகிற 20-ந்தேதி நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும். #GaryKirsten #Coach #IndianWomenCricket
பெங்களூரு ஞானபாரதியில் இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) செயல்பட்டு வருகிறது. இங்கு கபடி பயிற்சியாளராக ருத்ரப்பா வி.ஒசமணி (வயது 59) பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி பெண்கள் உடை மாற்றும் அறையில் அத்துமீறி நுழைந்த அவர், அங்கு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். மேலும், இந்திய விளையாட்டு ஆணையத்திலும் சம்பவம் குறித்து புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து ருத்ரப்பா வி.ஒசமணி மீதான புகாரை விசாரிக்க இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டது. தனிக்குழு நடத்திய விசாரணையின் முடிவில் ருத்ரப்பா வி.ஒசமணி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், ஞானபாரதி போலீசில், ருத்ரப்பா வி.ஒசமணி மீது புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது ‘போக்சோ‘ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, பயிற்சியாளரான ருத்ரப்பா வி.ஒசமணி தாவணகெரே மாவட்டம் ஹரிஹராவுக்கு கடந்த 14-ந் தேதி சென்றார். அங்குள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து அவர் தங்கினார். அதன்பிறகு, அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் நேற்று முன்தினம் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. கதவை தட்டியபோதும் அவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் உடனடியாக ஹரிஹரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் அவர் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஹரிஹரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவர் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், ‘எனக்கு மனவருத்தம் ஏற்பட்டதாலும், உதவ யாரும் முன்வராததாலும் இந்த முடிவை தேடிக்கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். மகனே ராகேஷ், நீ உன் அம்மா தேவிகாவை நன்றாக பார்த்து கொள். எனது உடலை தானம் செய்து விடுங்கள். உயிர் விடுவதற்கு முன்பு உங்களை பார்க்க விரும்பினேன். என்னிடம் புகைப்படம் இல்லாததால் உங்களை என்னால் பார்க்க முடியவில்லை’ என்று அவர் உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். #SAIKabaddiCoach #Suicide #MolestingGirl
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.
இங்கிலாந்துடன் மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் 5 டெஸ்டில் ஆடியது. இதில் 20 ஓவர் தொடரை மட்டும் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆனால் ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது. டெஸ்ட் தொடரில் விராட் கோலி அபாரமாக விளையாடியும் பலன் இல்லாமல் போனது.

இங்கிலாந்தில் ஏற்பட்ட தோல்வி குறித்தும் அணி நிர்வாகம் நேரில் ஆஜராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி.சி.சி.ஐ.) நிர்வாகிக்கும் குழு சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிர்வாக குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதோடு அறிக்கை ஒன்றையும் சமர்பித்தார்.
வினோத்ராய் தலைமையிலான நிர்வாக குழுவை ரவிசாஸ்திரி ஆசிய கோப்பை போட்டிக்கு புறப்படும் முன்பு சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தோல்விக்கு ரவி சாஸ்திரி கூறிய காரணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ‘டாஸ்’ போடுவதில் விராட் கோலி தவறான முடிவு எடுத்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
‘டாசில்’ தோற்றதால் தோல்வி அடைந்தோம் என்று ரவிசாஸ்திரி நிர்வாக குழுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய பயணத்தில் நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்று அவரிடம் நிர்வாக குழு தெரிவித்தது.
ஆஸ்திரேலிய பயணத்தில் அதிகமான பயிற்சி ஆட்டங்கள் இருக்க வேண்டும் என்று ரவிசாஸ்திரி அப்போது கேட்டுக் கொண்டார்.
அணி நிர்வாகத்தை பலப்படுத்துவது குறித்து நிர்வாக குழு ஆலோசித்தது. இதை தொடர்ந்து இந்திய அணிக்கு விரைவில் சுழற்பந்து பயிற்சியாளர் நியமிக்கப்படுகிறார். #INDvENG #RaviShastri
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏ.பி.சி. என பிரிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
வீரர்களின் செயல்பாட்டை பொறுத்து அவர்களுக்கு தரம் உயர்த்தப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கடந்த 18.7.2018 முதல் 17.10.2018 வரையிலான 3 மாத காலக்கட்டத்துக்கு ரூ.2.05 கோடி சம்பளம் முன்பணமாக வழங்கப்பட்டு உள்ளது.
கேப்டன் விராட்கோலிக்கு தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயண ஊதியம், ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதற்கான ஊக்க தொகை என ரூ.1.25 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.
புஜாராவுக்கு ரூ.2.83 கோடியும், தவானுக்கு ரூ.2.8 கோடியும், ரோகித் சர்மாவுக்கு ரூ.1.42 கோடி சம்பளம் வழங்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமாருக்கு அதிகபட்சமாக ரூ.3.73 கோடி தரப்பட்டு இருக்கிறது.
இதேபோல பும்ராவுக்கு ரூ.1.73 கோடி, அஸ்வினுக்கு ரூ.2.7 கோடி, இஷாந்த்சர்மாவுக்கு ரூ.1.33, பாண்ட்யாவுக்கு ரூ.1.1 கோடி, சகாலுக்கு ரூ.1.1 கோடி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.
இந்த தகவலை கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். #RaviShastri
1990-களில் இந்திய அணியினரின் சிறந்த ஆட்டம் வெளிவர அஜித் வடேகர் முக்கிய பங்காற்றினார் என்று முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. இடக்கை பேட்ஸ்மேனான வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் விளையாடி ஒரு சதம், 14 அரைசதம் உள்பட 2,113 ரன்கள் எடுத்துள்ளார். அவரது கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 16 டெஸ்டுகளில் பங்கேற்று 4-ல் வெற்றியும், 8-ல் டிராவும், 4-ல் தோல்வியும் கண்டது. அவரது தலைமையிலான இந்திய அணி 1971-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை (இரண்டு தொடரிலும் 1-0 என்ற கணக்கில்) வென்று புதிய வரலாறு படைத்தது. இந்திய ஒரு நாள் போட்டி அணியின் முதல் கேப்டன் என்ற சிறப்புக்குரியவரும் இவர் தான். ஆனால் வெறும் 2 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார்.

1974-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற இந்திய அணி தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அதில் லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்டில் இந்திய அணி வெறும் 42 ரன்னில் சுருண்டது. இந்த நாள் வரைக்கும் இந்திய அணியின் மோசமான ஸ்கோராக அது தான் இருந்து வருகிறது. இதனால் கேப்டன் பதவியை இழந்தார். அத்துடன் கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார்.
ஓய்வுக்கு பிறகு வங்கியில் பணியாற்றிய அஜித் வடேகர், அதன் பிறகு அசாருதீன் தலைமையிலான இந்திய அணிக்கு 1992-ம் ஆண்டு மேலாளர்-பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். தேர்வு குழு தலைவராகவும் இருந்திருக்கிறார். மத்திய அரசிடம் இருந்து பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருதுகளை பெற்றுள்ள அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தது.
1994-ம் ஆண்டு நியூசிலாந்து ஒரு நாள் தொடரின் போது சச்சின் தெண்டுல்கர் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காராக களம் இறங்கினார். அதற்கு அப்போதைய பயிற்சியாளர் அஜித் வடேகரே முக்கிய காரணமாகும். தெண்டுல்கர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய பிறகே கிரிக்கெட்டில் பல மகத்தான சாதனைகளை படைத்தார்.
இதே போல் 1990-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்துக்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே 1992-93-ம் ஆண்டில் மீண்டும் அணிக்கு திரும்பிய போது அப்போது பயிற்சியாளராக இருந்தவர் வடேகர். அதன் பிறகு கும்பிளே தொடர்ந்து 16 ஆண்டுகள் விளையாடினார்.
வடேகரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். இதே போல் இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் அவரது மறைவுக்கு சமூக வலைதளம் மூலம் அனுதாபம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
சச்சின் தெண்டுல்கர்: வடேகரின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். 1990-களில் எங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றினார். அவரது ஆலோசனைகளுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் நாங்கள் எப்போதும் நன்றிக்குரியவர்களாக இருப்போம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் துயரத்தை தாங்கும் மனவலிமையுடன் இருப்பதற்கு கடவுளை பிரார்த்திக்கிறேன்.
சுனில் கவாஸ்கர்: ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக நான் அறிமுகம் ஆன போது எனது முதல் கேப்டனாக வடேகர் இருந்தார். இதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்குள் அடியெடுத்த போது கேப்டனாக அவர் தான் இருந்தார். என்னை பொறுத்தவரை அவர் தான் எனக்கு எப்போதும் கேப்டன். உலகை விட்டு மறைந்து விட்டாலும் எனக்குள் அவர் எப்போதும் இருப்பார்.
அசாருதீன்: வடேகர் ஒரு அடையாள சின்னம். அவர் எனக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்தார். தனிப்பட்ட முறையில் அவரது மறைவு எனக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
சவுரவ் கங்குலி: அவரை நான் மிகவும் தவற விடுகிறேன். என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். இது எனக்கு சோகமான நாள்.
கும்பிளே: இந்திய அணிக்கு பயிற்சியாளர் என்பதையும் தாண்டி ஒரு அப்பா போன்று எங்களை வழிநடத்தினார். வியூகங்களை தீட்டுவதில் சாதுர்யமானவர். என் திறமை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
பிஷன்சிங் பெடி: இரண்டு வெளிநாட்டு டெஸ்ட் தொடர், ஒரு உள்நாட்டு தொடர் என்று தொடர்ந்து மூன்று தொடர்களை வென்றுத்தந்த முதல் இந்திய கேப்டன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர் மீது அளப்பரிய மதிப்பு உண்டு.
ஷேவாக்: கேப்டன், பயிற்சியாளர், தேர்வு குழு தலைவர் என்று மூன்று பணிகளையும் கவனித்த அபூர்வமான ஒரு கிரிக்கெட் வீரர். இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சேவகர். அவரது மறைவுக்கு எனது இதய அஞ்சலியை செலுத்துகிறேன்.
ரவிசாஸ்திரி (இந்திய பயிற்சியாளர்): இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனை இழந்து விட்டோம். இந்திய கிரிக்கெட்டுக்கு இது துயரமான தருணமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #AjitWadekar #SachinTendulkar