என் மலர்
நீங்கள் தேடியது "Congress government"
- மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தங்கவே இல்லை.
- இது ஒரு சாதாரண வீட்டின் சராசரி மின்சார சுமையை விட 1,500 சதவீதம் அதிகம்.
நடிகை கங்கனா ரனாவத், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக சார்பில் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகத் தேர்வானார். விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கங்கனா சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை அண்மையில் அவர் விமர்சித்திருந்தார்.
மாண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் "இமாச்சலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் அரசு, மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த மாதம், மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தங்கவே இல்லை. இங்குள்ள நிலைமைகளை கற்பனை செய்து பாருங்கள்" என்று பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இமாச்சல மின் வாரியம் இதற்கு பதில் அளித்துள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் சந்தீப் குமார் பேசுகையில், "ஜனவரி 16 முதல் கங்கனா ரனாவத் எந்த கட்டணத்தையும் செலுத்தவில்லை. அவர் தொடர்ந்து மின் கட்டணம் செலுத்துவதை தாமதப்படுத்தி வருகிறார். தற்போதைய கட்டணம், ஒரு மாதத்திற்கு மட்டுமே என்று அவர் கூறுவது முற்றிலும் தவறானது. அவரது வீட்டின் மின் சுமை(LOAD) 94.82 KW என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, இது ஒரு சாதாரண வீட்டின் சராசரி மின்சார சுமையை விட 1,500 சதவீதம் அதிகம்.
தோராயமாக, அவருக்கு ரூ.32,287 வரை நிலுவைத் தொகை உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 28 நாட்களுக்கு அவருடைய மின்சாரக் கட்டணம் சுமார் ரூ.55,000. இது தவிர மற்ற மாத கட்டணங்கள் உட்பட மொத்தம் கிட்டத்தட்ட ரூ.90,384 ஆகும். ஆகையால், இதையெல்லாம் மறைத்து அவர் தனது வீட்டின் ஒரு மாத மின் கட்டணம் ரூ.1 லட்சம் என்று பிரச்சனையை எழுப்பியுள்ளார்" என்று தெரிவித்தார்.
- பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
- ஊரக பகுதிகளுக்கு தனி அலுவலர்களை அரசு நியமனம் செய்துள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
அதேபோல மண்டல வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஜில்லா அளவிலான வார்டு உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் கடந்த 3-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால் தெலுங்கானாவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மொத்தமுள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதை பின்னடைவாக காங்கிரஸ் அரசு பார்க்கிறது.
இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த காங்கிரஸ் தயக்கம் காட்டி வருகிறது. ஊரக பகுதிகளுக்கு தனி அலுவலர்களை அரசு நியமனம் செய்துள்ளது.

புதுச்சேரி:
வில்லியனூர் மாவட்ட பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம் ராணி மகாலில் நடந்தது. மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
லிங்காரெட்டிபாளையம் சர்க்கரை ஆலை 4 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாக சீர்கேடு மற்றும் நிதி முறை கேட்டால் சீரழிந்தது. மிகுந்த துயரத்திற்கு உள்ளான விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்கியும், தொழிலாளர்களுக்கு தரவேண்டிய 18 மாத சம்பளத்தையும் உடனே வழங்கி, திறன்மிக்க நிர்வாக அதிகாரியை நியமித்து ஆலையை விரைந்து திறக்க வேண்டும்.
ஊசுடு ஏரி, கடந்த 30 ஆண்டுகளாக தூர் வாராப்படாமல் உள்ளதால் அதன் கொள்ளளவில் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது. எனவே உடனடியாக ஏரியையும் மற்றும் அனைத்து பாசன வாய்க்கால்களையும் உடனடியாக தூர்வாரி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.
உறுவையாறு சங்கரா பரணி ஆற்றின் தடுப்பணையை ஒரு மீட்டருக்கு உயர்த்தி, படகு குழாம் அமைத்து சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.
அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் அமைத்திட 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணி இணைப்பு பாலத்திற்கு, மத்திய அரசு சார்பில் ரூ.29 கோடி நிதி ஒதுக்கியும், புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு பாலம் அமைப்பதற்கான நிலத்தை இன்றைய தேதி வரை கையகப்படுத்தி கொடுக்காமல், தினம் தினம் ஏற்படும் விபத்து மற்றும் உயிர் இழப்புகளால் மக்கள் படும் அவதியை கண்டுகொள்ளாத மாநில அரசை கண்டிப்பதோடு, உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி மேம்பால பணியை விரைந்து முடித்திட வேண்டும்.
மணல் தட்டுப்பாட்டை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.