என் மலர்
நீங்கள் தேடியது "cows died"
திண்டுக்கல்:
கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால் வனப்பகுதியில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
வனத்துறையினரும் அவ்வப்போது ஆய்வு செய்து வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று கூக்கால் வனப்பகுதியில் 4 காளை மாடு மற்றும் ஒரு பசு மாடு என 5 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மாடுகளின் உடலில் வன விலங்கு கடித்ததற்கான அடையாளம் இருப்பதால் புலி தாக்கி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.இதனையடுத்து வன அதிகாரி பழனிக்குமார் தலைமையில் அங்கு விரைந்து சோதனை நடத்தினர். மேலும் கால்நடை மருத்துவர் தங்கராஜ் தலைமையில் இன்று உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகே புலி தாக்கித்தான் இறந்ததா? அல்லது வேறு வன விலங்குகள் கடித்ததா? என தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.