என் மலர்
நீங்கள் தேடியது "cradle"
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி டி.நல்லிக் கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரவிந்திரன் (வயது 40). தொழிலாளி.
இவரது மகள் ஸ்ரீசாதனா (9) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ரவிந்திரனும், அவரது மனைவியும் வேலைக்கு சென்றனர். வீட்டில் ஸ்ரீசாதனா தனது தம்பி மற்றும் உறவினர்களின் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடினார். பாட்டி லோகநாயகி குழந்தைகளை கவனித்துள்ளார்.
குழந்தைகள் வீட்டுக்குள்ளும், வெளியேயும் தொட்டில் கட்டி அதில் கால்களை இரு புறமும் போட்டவாறு அமர்ந்து சுற்றி, சுற்றி விளையாடியதாக தெரிகிறது.
அப்போது வீட்டுக்குள் ஸ்ரீசாதனா விளையாடிக் கொண்டிருந்த தொட்டிலில் எதிர் பாராத விதமாக சேலை துணி அவரது கழுத்தில் இறுக்கியது. இதில் அவள் பரிதாபமாக இறந்தாள்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாட்டி லோகநாயகி சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் ஸ்ரீசாதனாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஸ்ரீசாதனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தை அடுத்த கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டபாடி அருகே எடவானி என்னும் மலை கிராமம் உள்ளது.
இங்கு ஆதிவாசி, பழங்குடி இனத்தை சேர்ந்த 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் இம் மலை கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், கல்வி கற்கவும், மருத்துவமனை செல்லவும் சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து அட்டப்பாடியில் உள்ள கோட்டத்துறைக்கு தான் செல்ல வேண்டும்.
இந்த பாதையில் 5 இடங்களில் வரகை ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் எடவானியில் வசித்து வரும் பழனி என்பவரது மனைவி மணி (28) 4-வது முறையாக கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

சாலை வசதி இல்லாத நிலையில் கர்ப்பிணியை மூங்கிலில் தொட்டில் கட்டி சுமந்து செல்ல தீர்மானித்தனர். அதன்படி மணியை தொட்டில் கட்டி தூக்கி கொண்டு உறவினர்கள் ஓட்டமும், நடையுமாக அட்டபாடியில் கோட்டதுறை மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர்.
மருத்துவமனையில் மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சாலை வசதி இல்லாத நிலையில் இது போன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளிகள் பலரையும் தொட்டில் கட்டிதான் மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்த நிலை மாற பாலக்காடு மாவட்ட நிர்வாகம் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.