என் மலர்
நீங்கள் தேடியது "CSK"
- சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
- விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் முதலில் களமிறங்கி விளையாடினர்.
ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணி சார்பில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் முதலில் களமிறங்கி விளையாடினர். ஆட்டத்தின், 5வது ஓவரின்போது நூர் அகமதின் பந்து வீச்சில் பில் சால்ட் பேட்டிங் செய்தார்.
அதிரடியாக விளையாடி வந்த பில் சால்டை, கீப்பராக நின்றுருந்த டோனி மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் அவுட் செய்து வெளியேற்றினார்.
முன்னதாக, சிஎஸ்கே - மும்பை அணி இடையேயான ஆட்டத்தின்போது சூர்யா குமார் யாதவை இதேபோன்று டோனி அவுட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு குறைந்தது 7-8 வெற்றி தேவையாகும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
சென்னை அணி தனது முதலாவது லீக்கில் இதே மைதானத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது. இதில் மும்பையை 155 ரன்னில் கட்டுப்படுத்திய சென்னை அணியினர் அந்த இலக்கை 5 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தனர். சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவின் 4 விக்கெட் அறுவடையும், ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் அரைசதமும் வெற்றியை எளிதாக்கின. அதே உற்சாகத்துடன் களம் இறங்குவார்கள். விக்கெட் கீப்பர் டோனி முதலாவது ஆட்டத்தில் 2 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவர் பேட்டை சுழற்றுவதை பார்க்க ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழல் ஜாலம் தூக்கலாகவே இருக்கும். அதனால் நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோரது பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஊதித்தள்ளியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட்டும், விராட் கோலியும் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா (3 விக்கெட்), ஹேசில்வுட் (2 விக்கெட்) கலக்கினர். ஆனால் சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு உகந்தது என்பதால் நூர் அகமது, ஜடேஜா, அஸ்வின் ஆகியோரின் தாக்குதலை திறம்பட எதிர்கொள்வதை பொறுத்தே அவர்களின் ஸ்கோர் வேகம் அமையும். மும்பைக்கு எதிராக இவர்கள் 3 பேரும் கூட்டாக 12 ஓவர்களில் 70 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினர். அதனால் இந்த விஷயத்தில் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் அதிக விழிப்போடு இருப்பார்கள். குருணல் பாண்ட்யா, சுயாஷ் ஷர்மா ஆகியோருடன் மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளராக மொகித் ரதீயை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது. காயத்தால் முதல் ஆட்டத்தில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் உடல்தகுதியை பெற்றால் அது பெங்களூருவின் பந்து வீச்சை வலுப்படுத்தும்.
பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் நேநற்று நிருபர்களிடம் கூறுகையில், 'விராட் கோலி, சமீபத்தில் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக ஆடினார். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அதிக ரன் குவித்த இந்தியர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார். சுழற்பந்து வீச்சில் ஆடாமல் எப்படி அதிக ரன் எடுத்திருக்க முடியும். அவர் நல்ல நிலையில் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். இப்போது கூட தனது பேட்டிங் நுணுக்கத்தில் மேலும் ஒரு ஷாட்டை சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருவதை பார்த்தேன்.
அவர் தொடர்ந்து தனது ஆட்டத்திறனை மேம்படுத்த விரும்புகிறார். எப்போதும் போலவே சாதிக்கும் வேட்கையுடன் உள்ளார். உண்மையிலேயே அவர் சிறப்பு வாய்ந்த ஒரு வீரர்' என்று குறிப்பிட்டார்.
ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. கடந்த சீசனில் சென்னை அணி பெங்களூருவில் நடந்த லீக்கில் 27 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் தோற்றதால் தான் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. அதற்கு பழிதீர்க்க இதைவிட சரியான சந்தர்ப்பம் கிடைக்காது.
மொத்தத்தில் இந்திய முன்னாள் கேப்டன்கள் டோனி, விராட் கோலி நேருக்கு நேர் கோதாவில் குதிப்பதால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. அதனால் மஞ்சள் படையின் ஆர்ப்பரிப்பும், விசில் சத்தமும் சென்னை வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
சென்னை: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஷிவம் துபே, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டோனி, ஆர்.அஸ்வின், நாதன் எலிஸ் அல்லது பதிரானா, நூர் அகமது, கலீல் அகமது.
பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), தேவ்தத் படிக்கல் அல்லது மொகித் ரதீ, லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, ராசிக் சலாம் அல்லது புவனேஷ்வர்குமார் அல்லது ஸ்வப்னில் சிங், ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ரசிகர்கள் ஐ.பி.எல். டிக்கெட்டை வைத்து ஸ்டேடியத்திற்கு செல்லவும், போட்டி முடிந்து அங்கிருந்து புறப்படுவதற்கும் மெட்ரோ ரெயில் மற்றும் மாநகர பஸ்களை இலவசமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.
- வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.
மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டாலும், அணிக்கான முடிவுகளை தோனி எடுப்பதாக பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கான முடிவுகளை ருதுராஜ் கெய்க்வாட்டின் பின்னணியில் இருந்து தான் எடுப்பதாக கூறப்படுவதை தோனி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பல ஆண்டுகளாக பயணிக்கிறார். அவர் மிகவும் அமைதியானவர். அவரிடம் சிறந்த தலைமைப் பண்பு உள்ளது. அதன் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுவதற்கு அவர் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டார்.
இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு நான் ருதுராஜிடம் கூறியது என்னவென்றால், நான் ஒரு அறிவுரை கூறினால் அதனை நீங்கள் கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும் என அர்த்தம் கிடையாது. நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.
கடந்த ஐபிஎல் தொடரின்போது, ருதுராஜ் கெய்க்வாட் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான்தான் இருக்கிறேன் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், உண்மையில் 99 சதவிகித முடிவுகளை எடுத்தது அவர்தான். பந்துவீச்சில் மாற்றங்கள், ஃபீல்டிங்கில் மாற்றங்கள் போன்ற மிகவும் முக்கியமான முடிவுகளை அவர்தான் எடுத்தார். அவருக்கு நான் உதவியாக இருந்தேன். வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.
என தோனி கூறினார்.
- 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
- 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
சென்னை:
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்.
சென்னை தரப்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை 19.1 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருதுடன் நூர் அகமது குறித்து ஒரு வீடியோ ஒன்றை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் பிரபலமான டயலாக்கான நான் ஒரு தடவ சொன்னா நூரு தடவ சொன்ன மாதிரி என்ற டயலாக்கை நூர் அகமது பேசியுள்ளார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவுக்கு Baasha of spin என தலைப்பிட்டுள்ளது.
- ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐ.பி.எல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கடந்த 22ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக விளையாடிய ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், விராட் கோலி குறித்து எம்.எஸ்.தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி அணியின் வெற்றிக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 50-60 ரன்கள் அவருக்கு போதாது.
எப்போதும் சதம் அடிக்க வேண்டும். அணியின் வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றே இருப்பார்.
இறுதி வரை விக்கெட் இழக்காமல் நிலைத்து ஆட வேண்டும் என்று நினைப்பார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- சென்னை அணி பந்து வீசும் போது பால் டேம்பரிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் ஜெயித்த சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 19.1 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சென்னை அணி பந்து வீசும் போது பால் டேம்பரிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கலீல் அகமது தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை கேப்டன் ருதுராஜ் கையில் கொடுப்பார். அதனை வாங்கி கொண்ட ருதுராஜ், மறைத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்வார்.
இந்த வீடியோவை வைத்து மும்பை ரசிகர்கள் உள்பட ஐபிஎல் ரசிகர்கள் சென்னை அணி பால் டேம்பரிங் செய்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சூதாட்டத்தில் சிக்கியதாக 2 ஆண்டு சிஎஸ்கே அணி விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் பால் டேம்பரிங் செய்ததாக பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
- முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள சென்னை அணி வருகிற வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
சென்னை:
ஐபிஎல் தொடர் கடந்த 22-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ஐதராபாத் அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள சென்னை அணி வருகிற வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை பதிவு செய்துக்கொள்ளலாம். 1,700 முதல் 7,500 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நேற்று இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொளவதை ஒட்டி தக் லைஃப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. அதில், கமல்ஹாசன், எம்.எஸ்.தோனி ஒருபக்கமும் சிம்பு, ருதுராஜ் மறுபக்கமும் இடம்பெற்றுள்ளனர்.
- மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
- 2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை ஆர்சிபி பதிவு செய்தது.
இந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கவுள்ளது.
முன்னதாக நடைபெற்று முடிந்த இந்த வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக 2 அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியின்போது எம்.எஸ்.தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து ரிஷப் பண்ட் பயிற்சி மேற்கொண்ட வீடியோவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஜெயிலர் படத்தின் அலப்பறை கிளப்புறோம் பாடல் பின்னணியில் ஒலிக்கப்பட்டது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- கடந்த முறை சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஐந்தாவது இடத்தில் மட்டுமே நிறைவு செய்தது.
- முதுகு காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா, தடை விதிக்கப்பட்டதால் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடவில்லை.
ஐபிஎல் 2025 சீசன் போட்டிகள் இன்று கொல்கத்தாவில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது. ஆர்சிபி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடி வருகின்றன.
இதற்கிடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது. சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடக்க உள்ள இந்த போட்டிக்கு தற்போதிருந்தே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
டோனிக்கு இப்போது 43 வயதாவதால் சிஎஸ்கே அணியில் இதுவே அவரின் கடைசி சீசன் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த முறை சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஐந்தாவது இடத்தில் மட்டுமே நிறைவு செய்தது.
எனவே இந்த முறை தனது குறைகளை களைந்து வெற்றி அணியாக சிஎஸ்கே உருவெடுக்குமா என்று ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.

இதற்கு சாதகமாக அஸ்வின், நூர் அகமது, ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் சிஎஸ்கேவின் பட்டாளத்தில் புதிதாக களமாடுகின்றனர். டோனியின் அனுபவமும், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜின் முடிவுகளும் இந்த முறை ஆட்டத்தை வென்றெடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நாளைய ஆட்டத்தை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் முதுகு காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா, தடை விதிக்கப்பட்டதால் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடவில்லை. சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்த உள்ளார்

இந்த முறை சிஎஸ்கே அணியை தங்களால் வீழ்த்த முடியும் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா விளையாடாதது குறித்து பேசிய சூர்யகுமார், "ஹர்திக் விளையாடவில்லை என்றாலும் அவர் எங்களுடனேயே உள்ளார்.
அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை சேர்ப்பது சாத்தியமற்றது. அணியின் மற்ற வீரர்கள் அவரின் வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்று தெரிவித்துள்ளார். மொத்தத்தில் நாளை சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.
- சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 171 இன்னிங்சில் 4687 ரன்கள் அடித்துள்ளார்.
- எம்எஸ் தோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார்.
18-வது ஐ.பி.எல். சீசன் இன்று தொடங்குகிறது. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ரெய்னா படைத்துள்ள சாதனையை எம்.எஸ். தோனி முறியடிக்க உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 2008 முதல் 2021 வரை 171 இன்னிங்சில் விளையாடி 4,687 ரன் எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 33 அரை சதமும் அடங்கும். சராசரி 32.32 ஆகும்.
ரெய்னாவின் சாதனையை இந்த சீசனில் தோனி முறியடிக்க உள்ளார். அதற்கு அவருக்கு இன்னும் 19 ரன்களே தேவை. எம்எஸ் தோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார். அவரது ஸ்கோரில் 22 அரை சதம் அடங்கும். சராசரி 40.25 ஆகும்.
ஜடேஜா இன்னும் 8 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் கைப்பற்றிய சி.எஸ்.கே. வீரர் என்ற பெருமையை பெறுவார். பிராவோ 140 விக்கெட் (116 போட்டி) வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்சிஸ் வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா 172 போட்டியில் 133 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த சீசனில் சில போட்டிகளில் ஆட வில்லை. அவர் 6 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற சாதனையை பெறுவார். மலிங்காவை (170 விக்கெட்) முந்துவார். பும்ரா 165 விக்கெட் எடுத்துள்ளார்.
- 10 வாரங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் Fan park அமைக்கப்படுகிறது.
- தமிழகத்தில் கோவை, நெல்லை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் அமைக்கப்பட உள்ளது.
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் சீசன் நாளை தொடங்குகிறது. மார்ச் 22-ந்தேதி (நாளை) முதல் மே 25-ந்தேதி வரை சுமார் 10 வாரங்கள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஒவ்வொரு வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மைதானங்களில் சென்று போட்டியை பார்த்து ரசிக்க முடியாத ரசிகர்களுக்கு, மைதானத்தில் போட்டியை பார்த்து ரசிக்கும் அளவிற்கு உற்சாகத்துடன் போட்டியை ரசிக்க வைக்கும் முயற்சியாக கடந்த 2015ஆம் ஆண்டு ஐபிஎல் நிர்வாகம் "Fan Park" என்பதை அறிமுகப்படுத்தியது.
ஒவ்வொரு வாரமும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த "Fan park" அமைக்கப்படும். இங்கு ராட்சத திரை அமைக்கப்பட்டு போட்டி ஒளிபரப்பப்படும். அதோடு மியூசிக், பொழுது போக்கு, சிறுவர்கள் விளையாடுவதற்கான இடம், உணவுக் கடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த முயற்சி வெற்றிபெற்று ரசிகர்கள் அதிக அளவில் "Fan park" வருகை தந்து போட்டியை ரசிக்க தொடங்கினர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால் ஐபிஎல் நிர்வாகம் "Fan park" அமைக்கும் இடங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆந்திர பிரதேச மாநிலம் காக்கிநாடா, நாகலாந்து மாநிலம் திமாபூர், புதுச்சேரியில் உள்ள காரைக்கால், மேற்கு வங்கத்தில் மன்பும் (புருலியா), ஹரியானாவில் உள்ள ரோக்தத், அருணாச்சால பிரதேச மாநிலத்தில் உள்ள தின்சுகியா ஆகிய இடங்களில் முதன்முறையாக "Fan Park" அமைக்கிறது.
தமிழகத்தில் கோவை, நெல்லை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் அமைக்கப்பட உள்ளது.
இந்திய முழுவதும் Fan Park அமைக்கப்படவுள்ள நகரங்கள் விவரம்:-
முதல் வாரம் (மார்ச் 22 மற்றும் மார்ச் 23)
மார்ச் 22- கொல்கத்தா- ஆர்பிசி
மார்ச் 23- ஐதராபாத்- ராஜஸ்தான், சிஎஸ்கே- மும்பை
தமிழ்நாடு- கோவை
அரியானா- ரோத்தக்
ராஜஸ்தான்- பிகானெர்
சிக்கிம்- கங்டோக்
கேரளா- கொச்சின்
2-வது வாரம் (மார்ச் 29 மற்றும் மார்ச் 30)
மார்ச் 29- குஜராத்- மும்பை
மார்ச் 30- டெல்லி- ஐதராபாத், ராஜஸ்தான்- சிஎஸ்கே
தமிழ்நாடு- திருநெல்வேலி
மத்திய பிரதேசம்- குவாலியர்
ராஜஸ்தான்- ஜோத்பூர்
அசாம்- தின்சுகியா
கேரளா- பாலக்காடு
3-வது வாரம் (ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 6)
ஏப்ரல் 5- சிஎஸ்கே- டெல்லி, பஞ்சாப்- ராஜஸ்தான்
ஏப்ரல் 6- கொல்கத்தா- லக்னோ, ஐதராபாத்- குஜராத்
தமிழ்நாடு- மதுரை
உத்தர பிரதேசம்- மதுரா
குஜராத்- ராஜ்கோட்
நாகலாந்து- திமாபூர்
தெலுங்கானா- நிஜாமாபாத்
4-வது வாரம் (ஏப்ரல் 12 மற்றும் ஏப்ரல் 13)
உத்தர பிரதேசம்- மீரட்
குஜராத்- நடியாட்
திரிபுரா- அகர்தாலா
மகாராஷ்டிரா- நாக்பூர்
கர்நாடகா- மைசூரு
5-வது வாரம் (ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 20)
ஏப்ரல் 19- குஜராத்- டெல்லி, ராஜஸ்தான்- லக்னோ
ஏப்ரல் 20- பஞ்சாப்- ஆர்சிபி, மும்பை- சிஎஸ்கே
புதுச்சேரி- காரைக்கால்
பஞ்சாப்- பதிண்டா
குஜராத்- சூரத்
அசாம்- தேஸ்பூர்
மகாராஷ்டிரா- சோலாப்பூர்
6-வது வாரம் (ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 27)
பஞ்சாப்- அமிர்தசரஸ்
மத்திய பிரதேசம்- போபால்
மேற்கு வங்கம்- ராய்கஞ்ச்
மகாராஷ்டிரா- கோலாபூர்
கர்நாடகா- தும்கூர்
7-வது வாரம் (மே 3 மற்றும் மே 4)
மே 3- ஆர்சிபி- சிஎஸ்கே
மே 4- கொல்கத்தா- ராஜஸ்தான், பஞ்சாப்- லக்னோ
தமிழ்நாடு- திருச்சி
இமாச்சல பிரதேசம்- ஹமிர்பூர்
ராஜஸ்தான்- கோட்டா
பீகார்- முசாபர்பூர்
கர்நாடகா- பெலகாவி
8-வது வாரம் (மே 10 மற்றும் மே 11)
இமாச்சல பிரதேசம்- ஜபால்பூர்
ஜார்க்கண்ட்- தன்பாத்
மகாராஷ்டிரா- ரத்னகிரி
ஆந்திர பிரதேசம்- விஜயவாடா
9-வது வாரம் (மே 17 மற்றும் மே 18)
உத்தர பிரதேசம்- ஆக்ரா
சத்தீஸ்கர்- பிலாய்
மேற்கு வங்கம்- மன்பும் (புருலியா)
கர்நாடகா- மங்களூரு
தெலுங்கானா- வாரங்கல்
10-வது வாரம் (மே 23 மற்றும் மே 24)
உத்தர பிரதேசம்- காசிபூர்
ஒடிசா- ரூர்கேலா
ஜார்க்கண்ட்- ஜாம்ஷெட்பூர்
கோவா- கோவா
ஆந்திர பிரதேசம்- காக்கிநாடா
இரண்டு போட்டிகளில் நடைபெறும் நாட்கள் மதியம் 1.30 மணிக்கும், ஒரு போட்டி நடைபெறும் நாட்கள் 4 மணிக்கும் Fan Park தொடங்கும். நுழைவுக் கட்டணம் கிடையாது. ஆனால் பொழுதுப்போக்கு, உணவு போன்றவற்றிக்கு ரசிகர்கள் பணம் செலுத்த வேண்டும்.