என் மலர்
நீங்கள் தேடியது "CSK"
- விஜய் சங்கர் 54 பந்தில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- எம்.எஸ். தோனி 26 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் 2025 சீசனின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 51 பந்தில் 77 ரன்கள் விளாசினார். அபிஷேக் பொரேல் 33 ரன்களும், அக்சர் படேல் 21 ரன்களும், சமீர் ரிஸ்வி 20 ரன்களும், ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் சேர்த்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கலீல் அகமது 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முகேஷ் சவுத்ரி 4 ஓவரில் 50 ரன்கள் வாரி வழங்கினார்.
பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. ரச்சின் ரவீந்திரா, கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரின் 5ஆவது பந்தில் ரச்சின் ரவீந்திரா 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட்டை 5 ரன்னில் வெளியேற்றினார் மிட்செல் ஸ்டார்க். 20 ரன்னுக்குள் சிஎஸ்கே முக்கிய இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் அந்த சரிவில் இருந்து சிஎஸ்கே அணியால் மீள முடியவில்லை. கான்வே 14 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷிவம் துபே 18 ரன்களும் எடுத்த நிலையிலும் விப்ராஜ் நிகம் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கம் விஜய் சங்கர் களத்தில் நின்றுகொண்டிருந்தார். ஆனால் இவரால் அதிரடியாக ரன்கள் குவிக்க இயலவில்லை. 6ஆவது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் எம்.எஸ். டோனி ஜோடி சேர்ந்தார்.
விஜய் சங்கர் 43 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி 3 ஓவரில் சென்னை அணிக்கு 67 ரன்கள் தேவைப்பட்டது. முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரில் தோனி ஒரு சிக்ஸ் பறக்க விட்டார். இதனால் சிஎஸ்கே அணிக்க 13 ரன்கள் கிடைத்தன.
கடைசி 2 ஓவரில் 54 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் சென்னை அணியால் 13 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
கடைசி ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரில் விஜய் சங்கர் ஒரு சிக்ஸ் அடித்தார். தோனி ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் சிஎஸ்கே-வால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி 25 ரன்னில் வெற்றி பெற்றது.
விஜய் சங்கர் 54 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எம்.எஸ். தோனி 26 பந்தில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் உடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை
- கே.எல். ராகுல் 77 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
- கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாக களம் இறங்கினார். டேவன் கான்வே களம் இறக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அணியின் மெக்கர்க்- கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் மெக்கர்க் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்மிழந்தார். இதனால் ரன் கணக்கை தொடங்காமல் டெல்லி விக்கெட்டை இழந்தது.
2ஆவது விக்கெட்டுக்கு கேஎல் ராகுலுடன் அபிஷேக் பொரேல் ஜொடி சேர்ந்தார். இவர் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முகேஷ் சவுத்ரி 2ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் பொரேல். இந்த ஓவில் டெல்லி 19 ரன்கள் குவித்தது. பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 51 ரன்கள் விளாசியது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
7ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் பொரேல் ஆட்டமிழந்தார். அவர் 20 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். அடுத்து அக்சார் படேல் களம் இறங்கினார். இவர் இந்த ஓவரின் கடைசி பந்தை சிக்கருக்கு தூக்கினார்.
முதல் 10 ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் குவித்தது. அப்போது கேஎல் ராகுல் 29 ரன்களுடனும், அக்சார் படேல் 20 ரன்களுடனும் சேர்த்திருந்தனர். 11ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் அக்சார் படேல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்கோர் 90 ரன்னாக இருந்தது.
4ஆவது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் சமீர் ரிஸ்வி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் விரைவாக ரன் குவிக்க முயற்சித்தது. 12ஆவது ஓவரில் டெல்லி அணிக்கு 11 ரன்கள் கிடைத்தன. 13ஆவது ஓவரில் 10 ரன்கள் கிடைத்தன.
14ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்து கே.எல். ராகுல் 33 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தன. 15ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் ராகுல் இரண்டு பவுண்டரி அடிக்க, ரிஸ்வி ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் டெல்லி அணிக்க 17 ரன்கள் கிடைத்தன.
16ஆவது ஓவரை சவுத்ரி வீசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 8 ரன்கள் கிடைத்தன. 17ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரிஸ்வி ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார். அப்போது டெல்லி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். டெல்லி அணிக்கு இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தன.

18ஆவது ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் ம்டுமே விட்டுக்கொடுத்தார். 19ஆவது ஓவரை சவுத்ரி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை கேஎல் ராகுல் பவுண்டரிக்கு விரட்டினார். 3ஆவது பந்தில் கொடுத்த கேட்சை சவுத்ரி தவற விட்டார். 4ஆவது பந்தை ஸ்டப்ஸ் அபாரமாக சிக்சருக்கு தூக்கினார். அதோடு 5ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் டெல்லி அணிக்கு 15 ரன்கள் கிடைத்தன. அதோடு 19 ஓவரில் 176 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 51 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 77 ரன்கள் விளாசினார். அடுத்த பந்தில் அஷுடோஸ் சர்மா ரனஅவுட் ஆனார். இந்த ஓவரில் பதிரனா 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்க 183 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டப்ஸ் 12 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னை அணி சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், ஜடேஜா, பதிரனா, நூர் அகமது ஆகியோர தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.
- சென்னை அணியை தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கேப்டனாக களம் இறங்கினார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாக களம் இறங்கினார். டேவன் கான்வே களம் இறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டியை தோனியின் பெற்றோர் கண்டுகளித்து வருகின்றனர். அவர்களுடன். தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் அவர்களது மகளும் போட்டியை கண்டு வருகின்றனர்.
சேப்பாக்கத்தில் தோனியின் பெற்றோர் முதல்முறையாக அவரது ஆட்டத்தை நேரில் காண வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுகிறார்.
- டெல்லி அணியில் டு பிளிஸ்சிஸ் விளையாடவில்லை.
ஐபிஎல் 2025 சீசனின் 17ஆவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:-
கே.எல். ராகுல், மெக்கர்க், அபிஷேக் பொரேல், அக்சார் பட்டேல், ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அஷுடோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், மோகித் சர்மா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:-
கான்வே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், விஜய் சங்கர், ஜடேஜா, டோனி, அஸ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, பதிரனா.
- இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 19-ல் சென்னையும், 11-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.
சென்னை அணி உள்ளூரில் நடந்த தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் பணிந்தது. கவுகாத்தியில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோற்றது. அந்த ஆட்டத்தில் 183 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை 176 ரன்னில் அடங்கியது. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 45 ரன் தேவையாக இருந்த போது ரவீந்திர ஜடேஜா, டோனி இருந்தும் இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் போனது ஏமாற்றத்தை அளித்தது. கடந்த 2 ஆட்டங்களில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்த சென்னை அணி அதில் செய்த தவறுகளை திருத்தி வெற்றிப் பாதைக்கு திரும்பும் வியூகத்துடன் களம் இறங்கும்.
கடந்த ஆட்டத்தின் போது முழங்கையில் காயம் அடைந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அவர் நேற்று லேசான பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டார். அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் சென்னை அணிக்கு பின்னடைவாகும். அவர் ஆடாத பட்சத்தில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக டிவான் கான்வே களம் இறங்க வாய்ப்புள்ளது. முதல் 3 ஆட்டங்களில் (2, 5, 23 ரன்) சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திரிபாதி பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமானதாகும்.

பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது (9 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் கலீல் அகமது, பதிரானா வலுசேர்க்கின்றனர். இங்குள்ள மெதுவான தன்மை கொண்ட ஆடுகளத்தில் நூர் அகமதுவின் சுழல் ஜாலம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை பதம் பார்த்தது. அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அதட்டியது. அந்த ஆட்டத்தில் 163 ரன்னில் ஐதராபாத்தை 'ஆல்-அவுட்' செய்த டெல்லி அணி 4 ஓவர்கள் மீதம் வைத்து இலக்கை எளிதாக எட்டிப்பிடித்தது.
பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக காணப்படும் டெல்லி அணி 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. பேட்டிங்கில் பாப் டுபிளிஸ்சிஸ், ஜேக் பிராசர் மெக்குர்க், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், லோகேஷ் ராகுல், அஷூதோஷ் ஷர்மா நம்பிக்கை அளிக்கிறார்கள். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ் மிரட்டக்கூடியவர்கள்.
சுழலுக்கு உகந்த சேப்பாக்கம் ஆடுகளத்தில் நூர் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் தங்கள் அணிக்கு துருப்பு சீட்டாக விளங்குவார்கள் எனலாம். வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணியும், வெற்றி உத்வேகத்தை தொடர டெல்லி அணியும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் சென்னையும், 11-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன. சேப்பாக்கத்தில் 9 முறை சந்தித்ததில் சென்னை அணி 7-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2010-ம் ஆண்டுக்கு பிறகு டெல்லி அணி சென்னையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்) அல்லது டிவான் கான்வே, ஷிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜாமி ஓவர்டான் அல்லது அன்ஜூல் கம்போஜ், டோனி, ஆர்.அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது.
டெல்லி: ஜேக் பிராசர் மெக்குர்க், பாப் டுபிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், மொகித் ஷர்மா அல்லது டி.நடராஜன்.
- கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி ருதுராஜ் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
- எங்கள் அணியின் இளமையான விக்கெட் கீப்பர் கேப்டன்ஷிப் செய்வார்.
ஐபிஎல் தொடரின் நாளைய 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் நாளைய போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என சிஎஸ்கே அணி பேட்டிங் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி ருதுராஜ் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒருவேளை அவர் நாளைய போட்டியில் விளையாடாவிட்டால், வழிநடத்த ஸ்டம்புகளுக்கு பின்னே ஒருவர் உள்ளார். எங்கள் அணியின் இளமையான விக்கெட் கீப்பர் கேப்டன்ஷிப் செய்வார். ஆனால் இது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை.
ஓப்பனிங் விளையாடும் த்ரிபாதி கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் மிகப்பெரிய ஸ்கோரை அடிப்பார்.
என சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறினார்.
- நான் தோனியை என் கிரிக்கெட் தந்தையாக கருதுகிறேன்.
- நான் சிஎஸ்கேவில் இருக்கும்போது அவர் எனக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இலங்கை வீரரான மதீஷா பத்திரனா, ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவரது தனித்துவமான பந்துவீச்சு ஸ்டைல் காரணமாக "பேபி மலிங்கா" என்று அழைக்கப்படுகிறார். தோனி, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து தற்போது ஒரு வீரராக விளையாடி வருகிறார். அவர் பல இளம் வீரர்களை ஊக்குவித்து வருகிறார்.
அந்த வகையில் பத்திரனாவை ஊக்குவித்து வழிநடத்தியவர். அவர் சிஎஸ்கே அணிக்கு அறிமுகமானதில் இருந்து அவருக்கு அதிகமான ஆதரவை தோனி கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நான் தோனியை என் கிரிக்கெட் அப்பாவாக நினைக்கிறேன் என சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தோனி என் தந்தையைப் போன்றவர். ஏனென்றால் நான் சிஎஸ்கேவில் இருக்கும்போது அவர் எனக்கு அளிக்கும் ஆதரவு, வழிகாட்டுதல் எல்லாம் என் தந்தை என் வீட்டுல செஞ்சதைப் போலவே இருக்கு. அதனாலதான் நான் தோனியை என் கிரிக்கெட் தந்தையாக கருதுகிறேன்.
என்று பத்திரனா கூறினார்.
- சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பேட்டிங் ஆர்டர் பார்க்கப்படுகிறது.
- ருதுராஜ் இந்த சீசனில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வருகிறது.
ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல நகரங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
தோல்விக்கு முக்கிய காரணமாக சென்னை அணி பேட்டிங் ஆர்டர் பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வந்த கேப்டன் ருதுராஜ் இந்த சீசனில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வருகிறது.
இதனால் தொடக்க வீரராக ராகுல் திரிபாதி களமிறங்கி உள்ளார். அவர் 3 போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. மொத்தமாக 30 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். தீபக் ஹூடா, விஜய் சங்கர் ஆகியோரும் சிறப்பாக ஆடவில்லை. இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணி மும்பை வீரருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ரஞ்சி கோப்பையில் மும்பைக்காக விளையாடும் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரேவை Mid-Season Trials-காக சிஎஸ்கே அணி நிர்வாகம் அழைத்துள்ளது.
எங்களை அவர் மிகவும் கவர்ந்துள்ளார். இது ஒரு சோதனை மட்டுமே. தேவைப்பட்டால், அவரைப் பயன்படுத்துவோம் என சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
- திரிபாதிக்கு அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
- பேட்டிங் செய்யும் போது நீங்கள் அதிகமாக உடலைக் குலுக்கினால் எப்போது பந்தைப் பார்ப்பீர்கள்.
சென்னை:
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது. மும்பையை வீழ்த்தியது. பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளிடம் தோற்றது.
சென்னை அணியில் ராகுல் திரிபாதி , ரச்சின் ரவீந்திரா தொடக்க வீரர்களாக களம் இறங்கி வருகிறார்கள். இதில் ரவீந்திரா சிறப்பாக விளையாடினார். ஆனால் திரிபாதி போதுமான ரன்களை குவிக்கவில்லை.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக நியூசிலாந்தை சேர்ந்த கான்வேயை களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சென்னை அணி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளது. அவர்கள் அதிக தவறுகளைச் செய்கிறார்கள். ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக களம் இறக்குகிறார்கள்.
அவர் தனது உடலை அதிகமாக குலுக்குகிறார். ஆனால் அதற்கு தகுந்த ரன்கள் அடிக்கவில்லை. இப்படி சொல்வதற்கு மன்னித்து கொள்ளுங்கள். திரிபாதி மிகவும் கடினமாக உழைக்கக்கூடிய வீரர். ஆனால் அவர் ஆடும் லெவனில் இருக்க கூடாது என்பதில் நான் தெளிவாக சொல்கிறேன். பேட்டிங் செய்யும் போது நீங்கள் அதிகமாக உடலைக் குலுக்கினால் எப்போது பந்தைப் பார்ப்பீர்கள்? அவரிடம் இருந்து ரன்கள் வரவில்லை. அதற்கான நோக்கமும் தற்போது அவரிடம் தெரியவில்லை.
ருதுராஜ் கெய்க்வாட், சரியான தொடக்க வீரர் ஆவார். அவர் திரிபாதிக்காக 3-வது இடத்தில் களம் இறங்குகிறார். எப்போதும் தொடக்க ஜோடி சென்னை சூப்பர் கிங்சுக்கு ஒரு பெரிய பலமாக இருந்து வருகிறது. மேத்யூ ஹைடன், டுவைன் ஸ்மித், மைக் ஹசி, பிரண்டன் மெக்கல்லம், கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக இருந்தனர்.
தற்போது சென்னை அணியில் கான்வே இருக்கிறார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அணியைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்கள் இதுவரை எதுவும் தெரியாமல் இருந்தனர். திரிபாதிக்கு அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்க வில்லை. ஆனால் கான்வே நிச்சயமாக இடம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சி.எஸ்.கே. அணியை வீழ்த்திய பிறகு இன்ஸ்டாவில் அதிக Follower-களை ஆர்.சி.பி. பெற்றது
- எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி சி.எஸ்.கே. தான்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அண்மையில் படைத்தது.
அந்த சமயத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 15.4 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்ததாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலமாக ஆர்.சி.பி. அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
அவ்வகையில், 17.7 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியை முந்திய ஆர்.சி.பி அணி புதிய சாதனை படைத்துள்ளது.
தற்போது, 17.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஐபிஎல் அணிகளிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட அணி என்ற சாதனையை ஆர்.சி.பி. படைத்துள்ளது.
அதே சமயம் எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.
- போட்டியில் முதலாவதாக களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இதில், இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை அணிகள் மோதின. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்நிலையில், இதைதொடர்ந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.
இரு அணிகளுக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, இந்த போட்டியில் முதலாவதாக களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.
- ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கியது அதிர்ச்சியாக இருக்கிறது.
- டோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார்.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோற்றது.
இந்த ஆட்டத்தில் டோனி 9-வது வீரராக களம் இறங்கி 16 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 30 ரன் எடுத்தார். அவர் முன்னதாக களம் இறங்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. அஸ்வினுக்கு முன்னதாக கூட ஆட வராதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் டோனி முன்னதாக களம் இறங்க வேண்டும் என்று டெலிவிசன் வர்ணனையாளரும், சி.எஸ்.கே. முன்னாள் வீரருமான ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் ஜியோ ஹாட் ஸ்டார் நிகழ்ச்சியில் இது தொடர்பாக கூறியதாவது:-
ஆர்.சி.பி.க்கு எதிராக டோனி 16 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார். இதைப் பார்க்கத்தான் சி.எஸ்.கே. ரசிகர்கள் வருகிறார்கள். அவர் முன்னதாக களம் இறங்கினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த ஆட்டத்தில் அஸ்வினுக்கு முன்பாக டோனி களம் இறங்கியிருக்க வேண்டும். கூடுதலாக 15 பந்துகளை அவர் சந்தித்து இருக்க வேண்டும். கடைசி சில ஆண்டுகளில் தன்னால் அதிரடியாக விளையாட முடியும் என்று தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறார்.
டோனி இன்னும் முன்னதாக களமிறங்கினால் அவரது திறமையை அதிகமாக வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்கியது அதிர்ச்சியாக இருக்கிறது. ருதுராஜ் சிறப்பான தொடக்க வீரர். ருதுராஜ் அழுத்தத்தில் ஆடினார். சாம் கரணை 5-வதாக ஆட வைப்பதும் கேள்விக்குறியே. 7-வது வரிசையில் விளையாட வைக்கலாம்.
தற்போதைக்கு, சி.எஸ்.கே. அணியில் சமநிலை இல்லை. டோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக இருக்கிறார். அவரை முன்னதாக இறக்கியிருந்தால் வென்று இருக்கலாம்.
இவ்வாறு வாட்சன் கூறினார்.