என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dairy Milk"

    • மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த விளம்பர வீடியோ வைரலாகியுள்ளது.
    • தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கை அமலில் உள்ளது.

    தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மும்மொழி கொள்கையின் மூலம் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

    இந்நிலையில் தெற்கு Vs வடக்கு மொழி பிரச்சனையை மையப்படுத்தி கேட்பரி டைரி மில்க் சாக்லேட் நிறுவனம் இந்தியில் வெளியிட்டுள்ள விளம்பர வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    அந்த விளம்பரத்தில், இந்தி பேசும் பெண்கள் மொட்டைமாடியில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களது பக்கத்து வீட்டில் குடியேறியுள்ள சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் அவர்களுடன் இணைகிறார். அப்போது அந்த பெண்கள் இந்தியில் பேசுவதை புரிந்துகொள்ள முடியாமல் தமிழ் பெண் திணறுகிறார். இதனை உணர்ந்த ஒரு இந்தி பேசும் பெண் தனது தெரிந்த ஆங்கிலத்தில் பேசி உரையாடுகிறாள்.

    மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த விளம்பரம் வெளியாகி வைரலாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. 1967 இல் முதல்வராக பொறுப்பேற்ற அண்ணாதுரை, 1968 ஆம் ஆண்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார்.

    • நான் பல ஆண்டுகளாக கேட்பரி சாக்லேட் சாப்பிட்டு வருகிறேன்.
    • என்னுடைய கேட்பெரி சாக்லேட்டில் ஒரு புழு போன்ற பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

    கேட்பெரி டைரி மில்க் சாக்லேட்டில் புழு உள்ளதாக மகாராஷ்டிரா பிரதேச இளைஞர் காங்கிரசின் பொதுச்செயலாளர் அக்ஷய் ஜெயின் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.

    அவரது பதிவில், "என்னுடைய கேட்பெரி சாக்லேட்டில் ஒரு புழு போன்ற பூச்சி இருந்தது. நான் பல ஆண்டுகளாக கேட்பரி சாக்லேட் சாப்பிட்டு வருகிறேன். எனக்கு இது மிக மோசமான அனுபவம். இது தொடர்பாக நடவடிக்கை எடுங்கள்" என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவில் கேட்பெரி நிறுவனத்தை அவர் டேக் செய்திருந்தார்.

    இந்நிலையில், அவரது குற்றச்சாட்டிற்கு கேட்பெரி நிறுவனம் பதில் அளித்துள்ளது. கேட்பரி நிறுவனத்தின் பதிவில், "உங்களின் மோசமான அனுபவத்திற்கு வருந்துகிறோம். உங்களின் புகாரை எழுத்துபூர்வமாக அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.

    ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருக்கும் புதிய சலுகை சாக்லேட் வாங்குவோருக்கு 1 ஜிபி டேட்டா வழங்குகிறது. இலவசமாக வழங்கப்படும் 1 ஜிபி டேட்டாவை பெறுவது எப்படி? #Jio #offer



    ரிலையன்ஸ் ஜியோ சார்பில் புதிய இலவச சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் புதிய சலுகையில் பயனர்கள் சாக்லேட் வாங்கினால் போதும்.

    கேட்பரி டெய்ரி மில்க் உடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டா வழங்குகிறது. இலவச டேட்டா பெற பயனர்கள் டெய்ரி மில்க் சாக்லேட் கவரின் புகைப்படத்தை மைஜியோ செயலியில் பதிவேற்றினால் போதும்.

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டெய்ரி மில்க் இணைந்து வழங்கும் இலவச டேட்டாவை பெற என்ன செய்ய வேண்டும்?



    - மைஜியோ ஆப் சென்று ‘Get the tastiest 1GB of data ever' என்ற பேனரை க்ளிக் செய்ய வேண்டும்
    - அடுத்து சலுகையில் பங்கேற்கக் கோரும் PARTICIPATE NOW ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
    - உங்களது மொபைல் கேமராவை இயக்க செயலியை அனுமதிக்க வேண்டும்
    - டெய்ரி மில்க் சாக்லேட் காலி கவரை புகைப்படம் எடுக்க வேண்டும்
    - புகைப்படம் அப்லோடு ஆகும் வரை காத்திருக்க வேண்டும்
    - இறுதியில் ‘KEEP 1GB’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

    பயனர்களின் கணக்கில் 1 ஜிபி இலவச டேட்டா கிரெடிட் ஆக ஏழு முதல் எட்டு நாட்கள் வரை ஆகும் என ஜியோ தெரிவித்துள்ளது. ஒரு ஜியோ எண்ணிற்கு ஒருமுறை மட்டுமே இலவச டேட்டாவை பெற முடியும். இலவச டேட்டா வேண்டாம் என்போர், டெய்ரி மில்க் மற்றும் பிரதாம் அறக்கட்டளைக்கு வழங்கி, குழந்தைகளின் டிஜிட்டல் கல்விக்கு உதவ முடியும். #Jio #offer
    ×