என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dayanidhi Maran"

    • எவ்ளோ பெரியார் வந்தாலும்.. இந்த மாதிரி ஒருத்தன், ரெண்டு பேரு வந்து நம்மை பின்னுக்குத் தள்ளி மூடநம்பிக்கையில் மூழ்கடிச்சிடுவாங்க.
    • நாம் தமிழ்நாட்டை கஷ்டப்பட்டு முன்னேற்றினாலும் மூட நம்பிக்கையால் நம்மை பின்னுக்கு தள்ளுகிறார்கள்.

    சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

    கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

    இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பிய மகாவிஷ்ணு குறித்து எம்.பி. தயாநிதிமாறன் பேசியுள்ளார்

    சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பேசிய எம்.பி. தயாநிதிமாறன், "இப்போது கஷ்டப்படுவதற்குப் போன ஜென்மத்தில் செய்த நீ பாவம் என்று பள்ளிக்கூடத்தில் ஒருவர் பேசுகிறார். அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

    நம் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் நாம் படிக்க வைப்பதே அவர்கள் படித்து முன்னேறி அறிவியல் பூர்வமாக சிந்தித்து அடுத்த தலைமுறையை முன்னேற்றுவார்கள் என்பதற்கு தான்.

    எவ்ளோ பெரியார் வந்தாலும்.. இந்த மாதிரி ஒருத்தன், ரெண்டு பேரு வந்து நம்மை பின்னுக்குத் தள்ளி மூடநம்பிக்கையில் மூழ்கடிச்சிடுவாங்க.

    நாம் தமிழ்நாட்டை கஷ்டப்பட்டு முன்னேற்றினாலும் மூட நம்பிக்கையால் நம்மை பின்னுக்கு தள்ளுகிறார்கள்.

    கர்நாடகாவில் படிக்காத சாமியார்கள் பிறந்த பெண் குழந்தைகளை நரபலி கொடுத்தார்கள். மூத்த ஆண் குழந்தையை நரபலி கொடுத்தார்கள். அதனால் அம்மாநிலத்தில் மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது" என்று தெரிவித்தார்.

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
    • வழக்கு விசாரணையை டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலின் போது, மத்திய சென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என குற்றம் சாட்டினார்.

    இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

    இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என ஆட்சேபம் தெரிவித்து, தயாநிதி மாறன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா எனும் பி.என்.எஸ்.எஸ். அமலுக்கு வரும் முன்பே இந்த அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதனால், அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

    குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாசித்து காட்டப்பட்டு விட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்க கோர முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.

    • பீகாரில் இந்த ஆண்டு தேர்தல் இருப்பதால், பட்ஜெட் பீகாரை நோக்கி மட்டுமே செல்கிறது.
    • நடுத்தர வர்க்கத்தினருக்கு மீண்டும் ஒரு முறை ஏமாற்றம்

    2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மாதம் 1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை" என்று அறிவித்தார்.

    மேலும் பேசிய அவர், புதிய வரி முறையின் வரி அடுக்கில் சில திருத்தங்களை நான் முன்மொழிகிறேன். ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. ஆனால் ரூ.4-8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி செலுத்த வேண்டும். ரூ.8-12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும் ரூ.12-16 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும் ரூ.16-20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும் ரூ.20-24 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரியும் 24 லட்சத்திற்கும் மேலான வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கலாம்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், பட்ஜெட் குறித்து பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், "இது மிகவும் ஏமாற்றம் தரும் பட்ஜெட். டெல்லிக்கு குறிப்பாக பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி தேர்தலுக்கு வாக்காளர்களை கவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    ரூ. 8-12 லட்ச வருமானத்துக்கு 10% வரி உள்ளது தெரிவித்துவிட்டு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று கூறுவது மிகவும் குழப்பமாக உள்ளது.

    எனவே, நடுத்தர வர்க்கத்தினருக்கு மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் தான். பீகாரில் இந்த ஆண்டு தேர்தல் இருப்பதால், பட்ஜெட் பீகாரை நோக்கி மட்டுமே செல்கிறது..

    தமிழகம் அல்லது வேறு எந்த தென் மாநிலங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை" என்று தெரிவித்தார்.

    • மத்திய சென்னை தொகுதிக்கு நடந்த பாராளுமன்ற தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
    • வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

    சென்னை:

    கடந்த ஆண்டு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். இதையடுத்து எம்.பி.யாக பதவியேற்று பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே, மத்திய சென்னை தொகுதிக்கு நடந்த பாராளுமன்ற தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி அத்தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளராக வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்து வந்து சென்னை உயர்நீதிமன்றம், மத்திய சென்னை மக்களவை தொகுதியில் எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றி செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

    மேலும், தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணமும் இல்லை எனக்கூறி மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற தயாநிதிமாறன், தி.மு.க. எம்.பி.க் கள் தமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என்று கூறினார்.
    சென்னை:

    மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதிமாறன் நேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அதன்பின்னர், நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்கள் தந்திருக்கிறார்கள். தமிழக மக்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து இந்த பெரிய வெற்றியை தந்துள்ளார்கள். இந்த வெற்றிக்கு காரணம் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் வகுத்த தேர்தல் யுக்தி தான்.

    சென்ற முறை அ.தி.மு.க. கூட்டணி இதே அளவில் வெற்றி பெற்றார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்காக அவர்கள் வாதாடவில்லை. தமிழ்நாட்டின் உரிமையை பறிகொடுத்தார்கள். இனி அது நடக்காது. நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும். உங்களின் குரலாக உங்களுக்காக நாங்கள் எல்லோரும் உழைப்போம்.

    தொடர்ந்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, அது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்பை பெருக்குகின்ற வகையில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் உழைத்து உங்களுக்காக குரல் கொடுத்து காப்போம் என்று உறுதியளிக்கிறோம். ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் அ.தி.மு.க.வை ஓரம் கட்டி விட்டார்கள். அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

    ஒரு இடத்தில் மட்டும் தப்பித்து இருக்கிறார்கள். அதுவும் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தான். பண பலத்தால் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். மற்ற இடங்களில் எல்லாம் உதறி தூசி தட்டி விடப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மக்கள் இன்னும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

    இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் யாரும் ஜெயித்தது கிடையாது. ஒருமித்த கருத்தோடு மக்கள் தெளிவாக தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும். அது மட்டுமல்ல தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக தான் அவர்கள் வாக்களித்தார்கள். சில தொகுதிகளில் நாம் வெற்றி பெற முடியாத காரணத்தால் இன்று மக்கள் நினைத்த மாற்றம் நடக்கவில்லை. மக்கள் எதிர்பார்த்தது இந்த எடப்பாடி பழனிசாமி அரசு போய்விட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தான் ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். அது தான் ஜனநாயக விருப்பம். இதை உணர்ந்து தார்மீக பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தால் அவர் நல்ல மனிதர்.

    எப்படியாவது ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்று தான் அவர் பார்க் கிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக அவர்கள் சண்டை போட்டதே கிடையாது. இப்போது அவர்கள் செய்ய மாட்டார்கள். தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவில் ஒரு பகுதி மக்கள் ஏன்? இவ்வாறு வாக்களித்தார்கள் என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உணரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில் எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வர வில்லை என்று திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கூறியுள்ளார். #DMK #LokSabhaElections2019

    சென்னை:

    மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் ஆயிரம்விளக்கு தொகுதியில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே பிரசாரத்தை தொடங்கி கோபாலபுரம் கலைஞர் இல்லம் வரை வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

    ஆயிரம்விளக்கு தொகுதியிலும் தி.மு.க. எம்.எல்ஏ.தான் உள்ளார். என்னையும் எம்.பி.யாக தேர்வு செய்தால் இந்த தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்கள் மேலும் அதிகம் கிடைக்கும். இது தொகுதி மக்களுக்கு கிடைக்கும் இரட்டிப்பு யோகமாகும்.

    கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வர வில்லை. நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒற்றுமையாக உள்ள மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பா.ஜனதா தொடர்ந்து செயல்படுகிறது.

    எனவே மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்துக்கு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ., கு.க. செல்வம் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை, வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் திருவல்லிக்கேணி வி.பி.மணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நடந்து சென்று வாக்கு கேட்டனர். பிரசாரத்தின் போது தயாநிதி மாறனுக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். #LokSabhaElections2019 #DMK

    பி.எஸ்.என்.எல். இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோரிய தயாநிதி மாறன் அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #DayanidhiMaran #SC
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்  2004-06ம் ஆண்டு வரை  தொலைத்தொடர்பு துறை மந்திரியாக தயாநிதி மாறன்  பதவி வகித்தார்.

    அப்போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது இல்லத்துக்கு அருகே தனியாக தொலைத்தொடர்பு எக்சேஞ்ச் ஒன்று அமைத்து சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இணைப்புகளைப் பயன்படுத்தி, அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த மோசடி தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், பி.எஸ்.என்.எல்.  பொதுமேலாளர் பிரம்மநாதன், துணை மேலாளர் எம். வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன்நெட்வொர்க் துணைத் தலைவர் கண்ணன், தொழில்நுட்ப ஊழியர் ரவி ஆகியோர் மீது சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அதே ஆண்டு அக்டோபர் மாதம் 7 பேரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி நடராஜன் முன்னிலையில் நடந்து வந்தது. மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரின் மீதான மனுவின் மீதான விசாரணை, வாதங்கள் முடிந்தன. இதில் மாறன் சகோதரர்கள் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

     பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக எந்த முகாந்திரமும் இல்லை. ஆதலால், இந்த வழக்கில் இருந்து 7 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிபதி நடராஜன் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தீர்ப்பளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த மாதம் 25-ம்  வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்தது செல்லாது என்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.



    இந்த உத்தரவை எதிர்த்தும் இவ்வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு மாறன் சகோதரர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளுமாறு மனுதாரர்களை அறிவுறுத்தியுள்ளது. #DayanidhiMaran #SC

    ×