என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DC"

    • சுப்மன் கில் 7 ரன்னிலும், சாய் சுதர்சன் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • மிட்செல் ஸ்டார்க் ஓவரில் தொடர்ந்து ஐந்து பவுண்டரிகள் விளாசினார் பட்லர்.

    ஐபிஎல் தொடரின் 35ஆவது போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முதல் 6 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் அடித்தனர். அதிகபட்சமாக அக்சர் படேல் 32 பந்தில் 39 ரன்களும், அஷுடோஸ் சர்மா 19 பந்தில் 37 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களம் இறங்கியது. சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுப்மன் கில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

    அடுத்து சாய் சுதர்சன் உடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. அணியின் ஸ்கோர் 7.3 ஓவரில் 74 ரன்னாக இருக்கும் போது சாய் சுதர்சன் 21 பந்தில் 36 ர்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு பட்லர் உடன் ரூதர்போர்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. குறிப்பாக பட்லர் பட்டையை கிளப்பினார். 32 பந்தில் அரைசதம் அடித்தார். குஜராத் அணி 11.2 ஓவரில் 100 ரன்னையும், 14.3 ஓவரில் 150 ரன்னையும் தொட்டது.

    15ஆவது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் பட்லர். கடைசி பந்தில் ரன் அடிக்கவில்லை. குஜராத் 17 ஓவரில் முடிவில் 179 ரன்கள் குவித்திருந்தது.

    18ஆவது ஓவரில் குஜராத் 10 ரன்கள் அடித்தது. இதனால் கடைசி 2 ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் ரூதர்போர்டு ஆட்டமிழந்தார். அவர் 34ஆவது பந்தில் 43 ரன்கள் எடுத்தார். பட்லர்-ரூதர்போர்டு ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் குவித்தது. அடுத்து ராகுல் டெவாட்டியா களம் இறங்கினார். இந்த ஓவரில் முகேஷ் குமார் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தில் டெவாட்டியா சிக்ஸ் விளாசினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் 19.2 ஓவரில் 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பட்லர் 54 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • டெல்லி அணியின் முதல் 6 பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.
    • அஷுடோஸ் சர்மா 19 பந்தில் 37 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் 2025 தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் அபிஷேக் பொரேல், கருண் நாயகர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பொரேல் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 9 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல். ராகுல் களம் இறங்கினார். இவர் 14 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 28 ரன்கள் விளாசினார். 3ஆவது விக்கெட்டுக்கு கருண் நாயர் உடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார்.

    பவர்பிளேயில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 73 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிகபட்ச பவர்பிளே ரன் இதுவாகும். டெல்லி பேட்ஸ்மேன்கள் தங்கள் பங்கிற்கு குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கினர். இதனால் விக்கெட் வீழ்ந்தாலும் ரன் வேகத்தில் தொய்வு ஏற்படவில்லை.

    கருண் நாயர் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு அக்சர் படேல் உடன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இதனால் ஒவருக்கு 10 ரன்கள் என்ற அடிப்படையில் ஸ்கோர் உயர்ந்து கொண்டே வந்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் குவித்தது. 14ஆவது ஓவரை ரஷித் கான் வீசினார். இவர் இந்த ஓவரில் 2 சிக்சருடன் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 15ஆவது ஓவரை சிராஜ் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் ஸ்டப்ஸ் 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி 14.2 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது.

    5ஆவது விக்கெட்டுக்கு அக்சர் படேல் உடன் அஷுடோஸ் சர்மா ஜோடி சேர்ந்தார். டெல்லி 15 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.

    16ஆவது ஓவரில் 13 ரன்களும், 17ஆவது ஓவரில் 10 ரன்கள் சேர்த்தது டெல்லி கேப்பிட்டல்ஸ். 18ஆவது ஓவரின் முதல் பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்தில் 39 ரன்கள் சேர்த்தார். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் 17.1 ஓவரில் 173 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த பந்தில் விப்ராஜ் நிகம் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். ஆனால் இதே ஓவரில் அஷுடோஸ் சர்மா 4ஆவது மற்றும் 5ஆவது பந்தில் அடுத்தடுத்து சிக்சர் விளாசினார். இதனால் டெல்லிக்கு இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது.

    19ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன்கள் மட்டுமே அடித்தது. 19ஆவது ஓவர் முடிவில் டெல்லி 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை சாய் கிஷோர் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்கள் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அஷுடோஸ் சர்மா 19 பந்தில் 37 ரன்கள் விளாசினார். டெல்லி அணியின் முதல் 6 பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.

    • தி பென்டாஸ்டிக் 4: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.
    • பெட்ரோ பாஸ்கல், வனேசா கிர்பி, ஜோசப் குவின், எபோன் மோஸ்-பச்ராச் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஹாலிவுட் சூப்பர்ஹீரோ பாணி திரைப்படங்களில் கோலோச்சி வருவது மார்வெல் மற்றும் டிசி. இதில் மார்வெல் யுனிவர்ஸ்க்கு ரசிகர்கள் அதிகம்.

    தீவிர மார்வெல் ரசிகர்களுக்கு அவெஞ்சர்ஸ் சீரிஸ்க்கு முன்னோடியாக 2005 இல் வெளியான 'பென்டாஸ்டிக் 4' படம் நினைவிருக்கும். இந்த பென்டாஸ்டிக் 4 சீரிஸில் தற்போது புதிய உருவாகி உள்ளது.

    மார்வெல் ஸ்டுடியோஸ் பேனரில் மேட் ஷாக்மேன் இயக்கியுள்ள இப்படத்துக்கு 'தி பென்டாஸ்டிக் 4: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

    இதில், பெட்ரோ பாஸ்கல், வனேசா கிர்பி, ஜோசப் குவின், எபோன் மோஸ்-பச்ராச் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூலை மாதம் 25 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 

    • விஜய் சங்கர் 54 பந்தில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • எம்.எஸ். தோனி 26 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 51 பந்தில் 77 ரன்கள் விளாசினார். அபிஷேக் பொரேல் 33 ரன்களும், அக்சர் படேல் 21 ரன்களும், சமீர் ரிஸ்வி 20 ரன்களும், ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் சேர்த்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கலீல் அகமது 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முகேஷ் சவுத்ரி 4 ஓவரில் 50 ரன்கள் வாரி வழங்கினார்.

    பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. ரச்சின் ரவீந்திரா, கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரின் 5ஆவது பந்தில் ரச்சின் ரவீந்திரா 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட்டை 5 ரன்னில் வெளியேற்றினார் மிட்செல் ஸ்டார்க். 20 ரன்னுக்குள் சிஎஸ்கே முக்கிய இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் அந்த சரிவில் இருந்து சிஎஸ்கே அணியால் மீள முடியவில்லை. கான்வே 14 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷிவம் துபே 18 ரன்களும் எடுத்த நிலையிலும் விப்ராஜ் நிகம் பந்தில் ஆட்டமிழந்தார்.

    ஒரு பக்கம் விஜய் சங்கர் களத்தில் நின்றுகொண்டிருந்தார். ஆனால் இவரால் அதிரடியாக ரன்கள் குவிக்க இயலவில்லை. 6ஆவது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் எம்.எஸ். டோனி ஜோடி சேர்ந்தார்.

    விஜய் சங்கர் 43 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி 3 ஓவரில் சென்னை அணிக்கு 67 ரன்கள் தேவைப்பட்டது. முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரில் தோனி ஒரு சிக்ஸ் பறக்க விட்டார். இதனால் சிஎஸ்கே அணிக்க 13 ரன்கள் கிடைத்தன.

    கடைசி 2 ஓவரில் 54 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் சென்னை அணியால் 13 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    கடைசி ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரில் விஜய் சங்கர் ஒரு சிக்ஸ் அடித்தார். தோனி ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் சிஎஸ்கே-வால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி 25 ரன்னில் வெற்றி பெற்றது. 

    விஜய் சங்கர் 54 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எம்.எஸ். தோனி 26 பந்தில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் உடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை

    • கே.எல். ராகுல் 77 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
    • கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாக களம் இறங்கினார். டேவன் கான்வே களம் இறக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி அணியின் மெக்கர்க்- கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் மெக்கர்க் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்மிழந்தார். இதனால் ரன் கணக்கை தொடங்காமல் டெல்லி விக்கெட்டை இழந்தது.

    2ஆவது விக்கெட்டுக்கு கேஎல் ராகுலுடன் அபிஷேக் பொரேல் ஜொடி சேர்ந்தார். இவர் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முகேஷ் சவுத்ரி 2ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் பொரேல். இந்த ஓவில் டெல்லி 19 ரன்கள் குவித்தது. பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 51 ரன்கள் விளாசியது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

    7ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் பொரேல் ஆட்டமிழந்தார். அவர் 20 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். அடுத்து அக்சார் படேல் களம் இறங்கினார். இவர் இந்த ஓவரின் கடைசி பந்தை சிக்கருக்கு தூக்கினார்.

    முதல் 10 ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் குவித்தது. அப்போது கேஎல் ராகுல் 29 ரன்களுடனும், அக்சார் படேல் 20 ரன்களுடனும் சேர்த்திருந்தனர். 11ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் அக்சார் படேல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்கோர் 90 ரன்னாக இருந்தது.

    4ஆவது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் சமீர் ரிஸ்வி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் விரைவாக ரன் குவிக்க முயற்சித்தது. 12ஆவது ஓவரில் டெல்லி அணிக்கு 11 ரன்கள் கிடைத்தன. 13ஆவது ஓவரில் 10 ரன்கள் கிடைத்தன.

    14ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்து கே.எல். ராகுல் 33 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தன. 15ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் ராகுல் இரண்டு பவுண்டரி அடிக்க, ரிஸ்வி ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் டெல்லி அணிக்க 17 ரன்கள் கிடைத்தன.

    16ஆவது ஓவரை சவுத்ரி வீசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 8 ரன்கள் கிடைத்தன. 17ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரிஸ்வி ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார். அப்போது டெல்லி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். டெல்லி அணிக்கு இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தன.

    18ஆவது ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் ம்டுமே விட்டுக்கொடுத்தார். 19ஆவது ஓவரை சவுத்ரி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை கேஎல் ராகுல் பவுண்டரிக்கு விரட்டினார். 3ஆவது பந்தில் கொடுத்த கேட்சை சவுத்ரி தவற விட்டார். 4ஆவது பந்தை ஸ்டப்ஸ் அபாரமாக சிக்சருக்கு தூக்கினார். அதோடு 5ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் டெல்லி அணிக்கு 15 ரன்கள் கிடைத்தன. அதோடு 19 ஓவரில் 176 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 51 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 77 ரன்கள் விளாசினார். அடுத்த பந்தில் அஷுடோஸ் சர்மா ரனஅவுட் ஆனார். இந்த ஓவரில் பதிரனா 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்க 183 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டப்ஸ் 12 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சென்னை அணி சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், ஜடேஜா, பதிரனா, நூர் அகமது ஆகியோர தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

    • ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுகிறார்.
    • டெல்லி அணியில் டு பிளிஸ்சிஸ் விளையாடவில்லை.

    ஐபிஎல் 2025 சீசனின் 17ஆவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:-

    கே.எல். ராகுல், மெக்கர்க், அபிஷேக் பொரேல், அக்சார் பட்டேல், ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அஷுடோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், மோகித் சர்மா

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:-

    கான்வே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், விஜய் சங்கர், ஜடேஜா, டோனி, அஸ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, பதிரனா.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் 19-ல் சென்னையும், 11-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.

    சென்னை அணி உள்ளூரில் நடந்த தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் பணிந்தது. கவுகாத்தியில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோற்றது. அந்த ஆட்டத்தில் 183 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை 176 ரன்னில் அடங்கியது. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 45 ரன் தேவையாக இருந்த போது ரவீந்திர ஜடேஜா, டோனி இருந்தும் இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் போனது ஏமாற்றத்தை அளித்தது. கடந்த 2 ஆட்டங்களில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்த சென்னை அணி அதில் செய்த தவறுகளை திருத்தி வெற்றிப் பாதைக்கு திரும்பும் வியூகத்துடன் களம் இறங்கும்.

    கடந்த ஆட்டத்தின் போது முழங்கையில் காயம் அடைந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அவர் நேற்று லேசான பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டார். அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் சென்னை அணிக்கு பின்னடைவாகும். அவர் ஆடாத பட்சத்தில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக டிவான் கான்வே களம் இறங்க வாய்ப்புள்ளது. முதல் 3 ஆட்டங்களில் (2, 5, 23 ரன்) சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திரிபாதி பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமானதாகும்.



    பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது (9 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் கலீல் அகமது, பதிரானா வலுசேர்க்கின்றனர். இங்குள்ள மெதுவான தன்மை கொண்ட ஆடுகளத்தில் நூர் அகமதுவின் சுழல் ஜாலம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை பதம் பார்த்தது. அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அதட்டியது. அந்த ஆட்டத்தில் 163 ரன்னில் ஐதராபாத்தை 'ஆல்-அவுட்' செய்த டெல்லி அணி 4 ஓவர்கள் மீதம் வைத்து இலக்கை எளிதாக எட்டிப்பிடித்தது.

    பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக காணப்படும் டெல்லி அணி 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. பேட்டிங்கில் பாப் டுபிளிஸ்சிஸ், ஜேக் பிராசர் மெக்குர்க், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், லோகேஷ் ராகுல், அஷூதோஷ் ஷர்மா நம்பிக்கை அளிக்கிறார்கள். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ் மிரட்டக்கூடியவர்கள்.

    சுழலுக்கு உகந்த சேப்பாக்கம் ஆடுகளத்தில் நூர் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் தங்கள் அணிக்கு துருப்பு சீட்டாக விளங்குவார்கள் எனலாம். வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணியும், வெற்றி உத்வேகத்தை தொடர டெல்லி அணியும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் சென்னையும், 11-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன. சேப்பாக்கத்தில் 9 முறை சந்தித்ததில் சென்னை அணி 7-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2010-ம் ஆண்டுக்கு பிறகு டெல்லி அணி சென்னையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்) அல்லது டிவான் கான்வே, ஷிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜாமி ஓவர்டான் அல்லது அன்ஜூல் கம்போஜ், டோனி, ஆர்.அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது.

    டெல்லி: ஜேக் பிராசர் மெக்குர்க், பாப் டுபிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், மொகித் ஷர்மா அல்லது டி.நடராஜன்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது.
    • ஒரு போட்டியிலாவது 300 ரன்னைத் தொடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன.

    ஐபிஎல் 2025 சீசனில் நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக முதல் போட்டியில் 280 ரன்களுக்கு மேல் குவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோவிற்கு எதிராக 200 ரன்களை தொடமுடியவில்லை. லக்னோ அணியின் ஷர்துல் தாகூர் அபாரமாக பந்து வீசி அபிஷேக் சர்மா, இஷான் கிஷனை ஒரே ஓவரில் வீழ்த்தினார். மொத்தம் 4 விக்கெட் சாய்த்தார்.

    இந்த நிலையில் நாளைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள தயார். அவர்களுக்கு எதிராக சிறப்பு திட்டம் வைத்துள்ளோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் இளம் வீரர் விப்ராஜ் நிகம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விப்ராஜ் நிகம் கூறுகையில் "சன்ரைசர்ஸ் ஐதராபாத் சிறந்த அணி என்பது உண்மைதான். சிறந்த பேட்டிங் ஆர்டர் வைத்துள்ளனர். பந்து வீச்சு கண்ணோட்டத்தில் எங்களுடைய அணி ஆலோசனைகள், பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் போட்டியின்போது வெளிப்படுத்த முயற்சி செய்வோம்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக லக்னோ வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆகவே, நாளைய போட்டிக்கு அதுபோன்ற சில சிறந்த திட்டங்களை உருவாக்கியுள்ளோம். வரும் போட்டிகளில் அந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன போட்டியிலேயே விப்ராஜ் நிகம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். மார்கிராம் விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் 15 பந்தில் 39 ரன்கள் விளாசி 210 இலக்கை எட்டி லக்னோவிற்கு எதிராக வெற்றி பெற காரணமாக இருந்தார். அஷுடோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 7 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. விப்ராஜ் நிகம்- அஷுடோஷ் சர்மா ஜோடி 7ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் குவித்தது.

    • கடைசி அணியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்று கேப்டன் யார் என்பதை அறிவித்துள்ளது.
    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்துள்ளது.

    ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா), சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன் கில்), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (பேட் கம்மின்ஸ்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய ஐந்து அணிகள் கேப்டன்களை தக்கவைத்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தக்கவைக்கவில்லை.

    மெகா ஏலத்திற்குப் பிறகு ஒவ்வொரு அணிகளாக கேப்டன்களை அறிவித்து வந்தது. இறுதியான இன்று காலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா ஆகிய ஐந்து அணிகள் புது கேப்டன்களாக களம் இறங்குகின்றன.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக நியமித்துள்ளது. ஆர்சிபி ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் ஷ்ரேயாஸ் அய்யரை கேப்டனாக நியமித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானேவை கேப்டனாக நியமித்துள்ளது.

    இதில் ரஜத் படிதார் தற்போது புதிதாக கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். அக்சார் பட்டேல் பகுதி நேர கேப்டனாக பணியாற்றியுள்ளார். தற்போது முழு நேர கேப்டனாக செயல்பட உள்ளார்.

    10 அணிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மட்டும் வெளிநாட்டு வீரரை கேப்டனாக கொண்டுள்ளது.

    • சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா 67 ரன்களை குவித்தார்.
    • அப்துல் சமத் தன் பங்கிற்கு 21 பந்துகளில் 28 ரன்களை குவித்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்த போதிலும், சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா 67 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டை இழந்தனர். இறுதியில் ஹென்ரிச் கிளாசென் தீவிர ரன் குவிப்பில் ஈடுபட்டார். இவருடன் ஆடிய அப்துல் சமத் தன் பங்கிற்கு 21 பந்துகளில் 28 ரன்களை குவித்தார்.

    இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹென்ரிச் கிளாசென் 27 பந்துகளில் 53 ரன்களை குவித்து அசத்தினார். இவருடன் ஆடிய அகேல் ஹூசைன் 16 ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை குவித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய மிட்செல் மார்ஷ் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை அணி 11 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 13 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 ஆட்டங்களில் 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

    16-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

    இந்த தொடரில் சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 13 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இதேபோல, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

    இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் டுவிட்டர் பக்கத்தில் இன்றைய போட்டி குறித்து டோனி -வார்னர் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த பதிவில், வணக்கம் வாழவைக்கும் சென்னை..இன்னைக்கு மேட்சுக்கு ரெடியா என குறிப்பிட்டுள்ளனர். அந்த பதிவில் டோனி மற்றும் டேவிட் வார்னர் பாரம்பரிய உடையுடன் கையில் இளநீர் வைத்தபடி இருந்தனர்.

    இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணி தக்கவைத்துக் கொண்டது.
    • ஒருவேளை அவர் மும்பை அணிக்கு சென்றால் சுப்மன கில் கேப்டனாக செயல்படுவார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள் விவரத்தை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

    10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள்தான் அதிகமான வீரர்களை தக்க வைத்துள்ளன.

    சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

    குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டயா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதே நேரத்தில் வீரர்களின் பரிமாற்றம் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை தங்களது அணிக்கு கொண்டுவர மும்பை அணி தொடர்ந்து முயற்சிக்கும் என்று தெரிகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வீரர்கள் விடுவிப்புக்கு பிறகு 10 அணிகளிடமும் ரூ.262.95 கோடி கையிருப்பு இருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம்தான் அதிகபட்சமாக ரூ. 40.75 கோடி கையிருப்பு உள்ளது. அந்த அணி 11 வீரர்களை விடுவித்தது.


    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை வெளியேற்றி உள்ளதால் ரூ. 31.4 கோடி கைவசம் இருக்கிறது.

    ஐதராபாத் அணி ரூ.34 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.32.7 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.29.1 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.28.95 கோடியும், குஜராத் ரூ.23.15 கோடியும், மும்பை இந்தியன்ன்ஸ ரூ.15.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.14.5 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.13.15 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளன.

    ×