என் மலர்
நீங்கள் தேடியது "DCvSRH"
- 14 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும்.
- டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள பத்து அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் போட்டியில் விளையாட வேண்டும்.
லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
மற்றொரு போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியி எதிர்கொண்டு விளையாடுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி உள்ளூரில் நடந்த தனது முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது.
கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து நல்ல நிலைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள ராஜஸ்தான் அணி எழுச்சி பெற்று வெற்றி கணக்கை தொடங்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
ஐ.பி.எல். தொடரில் இந்த இரு அணிகளும் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 16 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 272 ரன்கள் குவித்தது.
- டெல்லி அணி 17.2 ஓவரிலேயே ஆல்அவுட் ஆனது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வி குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-
பந்து வீச்சில் அனைத்து இடங்களின் நாங்கள் இன்னும் சற்று கூடுதலாக சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்க வேண்டும். இன்றைய பந்துவீச்சு எங்களுக்கு சரியாக அமையவில்லை. மோசமாக அமையும் நாட்களில் இதுவும் ஒன்று என நான் உணர்கிறேன்.
பேட்டிங்கில் இலக்கு மிகப்பெரியது என்பதால் கடினமானதை நோக்கி செல்ல வேண்டி இருக்கும் என நாங்கள் பேசினோம். அந்த வகையில் நாங்கள் பேட்டிங்கை அணுகினோம். சேஸிங் செய்யாமல் இருப்பதை விட ஆல் அவுட் ஆவது சிறந்தது என நாங்கள் இந்த போட்டியை அணுகினோம்.
விசாகப்பட்டினம் மைதானத்தில் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. நாங்கள் டைமரை (ரிவியூ கேட்பதற்கான வினாடிகள்) ஸ்கிரீனில் பார்க்க முடியவில்லை. ஸ்கிரீனில் சில பிரச்சனைகள் இருந்தது.
சில விஷயங்களை நாங்கள் கட்டுப்படுத்த முடிந்தது. சில விஷயங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு அணியாகவும், தனிநபராகவும் அடுத்த பேட்டிக்கு சிறந்த முறையில் வலிமையாக திரும்ப வேண்டியததை பிரபதிபலிக்கம் நேரம் இது.
நான் ஒவ்வொரு நாளையும் அனுபவித்து விளையாடுகிறேன். கிரிக்கெட்டில் ஏற்றம் இறக்கம் இருக்கும். ஆனால் தனிப்பட்ட நபராக உங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்து 272 ரன்கள் குவித்தது. பின்னர் கடினமான இலக்கை நோக்கி சென்ற டெல்லி அணி 17.2 ஓவரில் 166 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.