என் மலர்
நீங்கள் தேடியது "dehradun"
- இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவுச் சாலைக்காக நிலத்தை கையகப்படுத்தியது.
- உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்விற்கு பரிந்துரைத்து
212 கி.மீ நீளமுள்ள டெல்லி-டேராடூன் விரைவுச் சாலைப் பணியை முடிக்க அப்பகுதியில் அமைந்துள்ள இடத்தில 1,600 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள வீடு தடையாக உள்ளது.
1998 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச வீட்டுவசதி வாரியம் தனது நிலத்தை கையகப்படுத்த முயற்சித்ததை எதிர்த்து வீர்சென் சரோஹா என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினார். உயர்நீதிமன்றம் வீர்சென் சரோஹாவிற்கு சாதகமாக தீர்ப்பளித்தது.
இப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவுச் சாலைக்காக அவரது நிலத்தை கையகப்படுத்தியதால், வீர்சென் சரோஹாவின் பேரன் லக்ஷயவீர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்விற்கு பரிந்துரைத்து. ஏப்ரல் 16 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த விரைவுச் சாலை கட்டி முடிக்கப்பட்டவுடன், டெல்லிக்கும் டேராடூனுக்கும் இடையிலான பயண நேரம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வந்தே பாரத் ரெயில் டெல்லியில் இருந்து டேராடூனுக்கு 4 மணி 45 நிமிடங்களில் சென்றடையும்.
- டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் டிக்கெட் விலை ரூ. 1065 ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லி - டேராடூன் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை இன்று துவங்கி வைக்கிறார். இது உத்தராகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் ஆகும். ரெயில் சேவை இன்று துவங்கப்படும் நிலையில், டெல்லி மற்றும் டேராடூன் இடையேயான முதல் ரெயில் சேவை மே 29 ஆம் தேதி துவங்கும் என்று ஐஆர்சிடிசி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டெல்லியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் 302 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள டேராடூனுக்கு 4 மணி 45 நிமிடங்களில் சென்றடையும். வார நாட்களில் புதன் கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

கட்டண விவரங்கள்:
டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் டிக்கெட் விலை ரூ. 1065 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எக்சிக்யூடிவ் சேர் கார் டிக்கெட் விலை ரூ. 1890 ஆகும். 22457 எண் கொண்ட இந்த ரெயில் ஆனந்த் விகார் ரெயில்வே நிலையத்தில் இருத்து 17.50 (5.50) மணிக்கு புறப்பட்டு டேராடூனுக்கு 22.35 (10.35) மணி அளவில் சென்றடையும்.
டேராடூனில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் ஆனந்த விகார் ரெயில் நிலையத்திற்கு 11.45 மணிக்கு வந்தடையும். இடையில் மீரட், முசாபர்நகர், சகாரன்பூர், ரூர்கி மற்றும் ஹரித்வார் போன்ற ரெயில் நிலையங்களில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும். இந்த ரெயிலில் மொத்தம் எட்டு கோச்கள் உள்ளன.
தற்போதைய நிதியாண்டில் ஆறு வந்தே பாரத் ரெயில்கள் ராணி கமலாபேட்-ஹசரட் நிசாமுதீன், செகந்தராபாத்- திருப்பதி, சென்னை - கோயம்புத்தூர், அஜ்மீர் - டெல்லி கண்டோன்மெண்ட், திருவனந்தபுரம் செண்ட்ரல்-கசர்கோட், ஹவுரா- பூரி ஆகிய வழித்தடங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது.
காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்த தசீன் குல் என்ற மாணவர் இமாசலபிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இவர் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அதில் அமகது தாரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவுகளை போட்டிருந்தார்.
இது பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த மாணவரை இடைநீக்கம் செய்த பல்கலைக்கழக நிர்வாகம், இது குறித்து போலீசிலும் புகார் செய்தது. அதன்பேரில் மாணவர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.
இதைப்போல ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவக்கல்வி நிறுவனம் ஒன்றில் 2-ம் ஆண்டு மருத்துவ உதவியாளர் படிப்பு படித்து வரும் காஷ்மீரை சேர்ந்த 4 மாணவிகள், புலவாமா தாக்குதலை கொண்டாடி உள்ளனர். அது தொடர்பான படங்களையும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.
அந்த மாணவிகளை இடைநீக்கம் செய்த கல்வி நிறுவனம், அவர்கள் மீது போலீசிலும் புகார் செய்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



உத்தரக்காண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ராகுல் என்ற சிறுவன் 5-ம் வகுப்பு பயின்று வருகிறான். வழக்கம்போல் நேற்று பள்ளியில் அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது. மதிய உணவின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. அதனால் ராகுல் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை நஷ்ரின் பனோவிடம் புகார் அளித்தார்.
ராகுல் மீது கோபபட்ட நஷ்ரின் அவரை இரும்புக்கம்பியால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராகுல் மயங்கி விழுந்தார். அவரை சக மாணவர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். ராகுலை அவன் பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, ராகுலின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமை ஆசிரியர் நஷ்ரினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். #DehradunBoy