என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Delhi Election Results"
- 2020 தேர்தலில் பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது.
- சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டது.
டெல்லி தேர்தல்:
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்குக் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. பாஜக 43 இடங்களைக் கைப்பற்றி சுமார் 27 வருடங்கள் கழித்து ஆட்சி அமைக்கிறது.
22 இடங்களை மட்டுமே பெற்று 10 ஆண்டுகளாக தக்கவைத்த ஆட்சியை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கோட்டை விட்டது. கடந்த 2020 தேர்தலில் 62 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆதமி ஆட்சி அமைத்தது. பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது.
ஆம் ஆத்மி - காங்கிரஸ் பிளவு:
இந்த நம்பிக்கையில் தான் இந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்காமல் ஆம் ஆத்மி தனித்து களம் கண்டது. ஆனால் கடைசியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி பிரிவு பாஜகவுக்கு சாதமாக அமைந்துள்ளது.
பல்வேறு இடங்களில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் பாஜகவிடம் ஆம் ஆத்மி தோற்றுள்ளது. காங்கிரஸ் இவ்விடங்களில் வாக்குகளை வெகுவாக பிரித்துள்ளது. காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி அமைந்திருந்தால் ரிசல்ட் மாற அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9081390-mm20.webp)
புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் சுமார் 5000 வாக்கு வித்தியாசத்தில் தொற்றுள்ளார். ஜங்கிபூரா தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 675 வாக்கு வித்தியசாத்தில் தொற்றுள்ளார்.
கட்சியின் தோல்வி என்பதையும் தாண்டி அதன் முக்கிய தலைவர்களே தோற்றுள்ளதற்கு காங்கிரசை தவிர்த்து வேறு காரணிகளும் உண்டு.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9081469-mm21.webp)
ஆம் ஆத்மி மீதான அதிருப்தி:
2015 மற்றும் 2020 தேர்தல்களில் பெரு வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டது. மின்சாரம் மற்றும் குடிநீர் சலுகைகள் டெல்லி வாசிகளைப் பெரிதும் கவர்ந்தது.
இதனால் மத்தியில் பாஜக வென்றபோதிலும் டெல்லியைப் பிடிக்கத் திணறியது. ஆனால் காலப்போக்கில், ஆம் ஆத்மியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், காற்றின் தரம் குறைவு, யமுனை நதி மாசுபாடு ஆகியவை டெல்லி மக்களை தொந்தரவு செய்யத் தொடங்கின.
மத்தியில் உள்ள பாஜக அரசு தடைகளை உருவாக்குவதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி கூறியது. ஆனால் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆன நிலையில், வாக்காளர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சாக்குப்போக்காகக் கருதினர். ஆம் ஆத்மி வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் மத்திய அரசுடன் மோதுவதிலேயே கவனம் செலுத்துவதாகக் கூறப்பட்டது.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9081394-mm22.webp)
மதுபானக் கொள்கை:
டெல்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கையைச் சுற்றியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் ஆம் ஆத்மி தோல்வியில் முக்கிய பங்காற்றியுள்ளன.
புதிய கொள்கைபடி மதுபான பாட்டில்களில் '1 வாங்கினால் 1 இலவசம்' போன்ற சலுகைகள் டெல்லியை குடிகாரர்களின் நகரமாக மாற்ற ஆம் ஆத்மி முயல்வதாக பாஜக குற்றம் சாட்ட வழிவகுத்தது.
மேலும் புதிய மதுபான கொள்கை வகுப்பதில் பல்வேறு முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி மத்திய அரசின் விசாரணைகள் அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களைக் கைது செய்தது. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு, அவர் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஆம் ஆத்மி அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டது.
பின்னர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில் இருந்தார். பல உயர்மட்டத் தலைவர்களின் கைதுகள் ஆம் ஆத்மி கட்சியை வலுவிழக்க செய்தன.
முக்கிய தலைவர்கள் இல்லாமல் 2020 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆம் ஆத்மிக்கு சிரமம் ஏற்பட்டது. சிறையிலிருந்து ஜாமீனில் வந்த கெஜ்ரிவால் மக்கள் சம்மதம் இல்லாமல் மீண்டும் முதல்வர் ஆக மாட்டேன் என பதவியை ராஜினாமா செய்து அமைச்சர் அதிஷியை முதல்வர் ஆக்கினார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9081456-mm17.webp)
ஷீஷ் மஹால்
தேர்தலுக்கு முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜக தொடுத்த அஸ்திரம் 'ஷீஷ் மஹால்'. கெஜ்ரிவால் பதவியில் இருந்தபோது புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக பிரசாரம் செய்தது. 'முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க முதற்கட்ட மதிப்பீடு ரூ.7.91 கோடி என்று கண்டறியப்பட்டது.
2020 ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டபோது இது 8.62 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை பணியை முடித்த நேரத்தில், செலவு ரூ.33.66 கோடியாக உயர்ந்தது'என்று பாஜக கூறியது. ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக கூறியது. அனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆம் ஆத்மி ஆதாரம் கேட்டது. ஆனால் கெஜ்ரிவால் அங்கிருந்து வெளியேறியபோது அனைத்தும் மாயமானதாக பாஜக கூறியது.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9081392-mm19.webp)
இதனையடுத்து ஷீஷ் மகால் ஜோடிக்கப்பட்ட பொய் என்றும் அதை நிரூபிக்க தான் தயார் என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆடம்பரமான வாழ்க்கை முறை குறித்தும், பிரதமரின் ராஜ்மகால் இல்லத்தைக் காட்ட பாஜகவுக்கு துணிவு இருக்கிறதா என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
ஆனால் பாஜகவின் இடைவிடாத ஷீஷ் மகால் பிரச்சாரம் வாக்காளர்களை வெகுவாக பாதித்ததாகத் தெரிகிறது. குறிப்பாக கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஊழலுக்கு எதிரான 'தூய்மையான அரசியல்' என்ற பிம்பத்தை உடைத்து. தேர்தல் முடிவுகள் இதை வெளிப்படுத்துகின்றன.
- 22 இடங்களை மட்டுமே பெற்று 10 ஆண்டுகாலமாக தக்க வைத்த ஆட்சியை கைநழுவ விட்டுள்ளது.
- கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆம் ஆதமி மாநிலங்களவை எம்.பியாக இருந்த ஸ்வாதி மாலிவால் கடந்த வருடம் மே மாதம் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து கெஜ்ரிவால் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போது யமுனை நதி மாசுபாட்டைக் கண்டித்து கெஜ்ரிவால் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி பாஜகவிடம் தோல்வியடைந்துள்ள நிலையில் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9079798-mm18.webp)
டெல்லியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன்மூலம் 27 ஆண்டுகள் கழித்து பாஜக டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைகிறது.
கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பெற்று 10 ஆண்டுகாலமாக தக்க வைத்த ஆட்சியை கைநழுவ விட்டுள்ளது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சர்மாவிடம் தோற்றார்.
இந்நிலையில் மகாபாரத கதையில் திரௌபதியை அவமதிக்க, கௌவர்கள் அவரை துகில் உரியும் சித்திரத்தை ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
— Swati Maliwal (@SwatiJaiHind) February 8, 2025
மேலும் தேர்தல் முடிவுகள் குறித்து பேட்டியளித்த ஸ்வாதி மாலிவால், பெண்ணுக்கு ஏதாவது தவறு நடந்தால், அதைச் செய்தவர்களை கடவுள் தண்டித்திருக்கிறார். நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் தெருக்களின் நிலை போன்ற பிரச்சினைகளால்தான் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை இழந்தார்.
அவர்கள் (ஆம் ஆத்மி) பொய் சொல்ல முடியும் என்றும் மக்கள் அவர்களை நம்புவார்கள் என்றும் நினைக்கிறார்கள். மக்கள் சொல்வதைச் செய்ய வேண்டும், ஆனால் ஆம் ஆத்மி தலைமை அதை மறந்துவிட்டு, அவர்கள் முன்பு சொன்னதுக்கு மாறாக செயல்படுகிறது. பாஜகவை நான் வாழ்த்துகிறேன். மக்கள் நம்பிக்கையுடன் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். அதை நிறைவேற்ற அவர்கள் பாடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
#WATCH | On #DelhiElection2025, Rajya Sabha MP Swati Maliwal says, "If we see the history - if something wrong happens to any woman, god has punished those who commit that... It's because of the issues like water pollution, air pollution and the condition of the streets, that… pic.twitter.com/7pxLQZGesi
— ANI (@ANI) February 8, 2025
- பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
- பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மேலும், புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.
இந்நிலையில், டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல பிற மாநிலங்களில் இல்லை.
அதனால்தான், டெல்லியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது" என்றார்.
- பாஜக-வின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போர் தொடரும். தேர்தல் முடிவு ஆம் ஆத்மிக்கு பின்னடைவுதான்.
- ஆனால் டெல்லி மற்றும் நாட்டுக்கு மக்களுக்கான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்.
கடந்த 5-ந்தேதி நடைபெற்ற டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே பாஜக முன்னிலை பெற்றது. சுமார் 48 இடங்களை கைப்பற்றி 27 வருடத்திற்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது.
கடந்த இரண்டு தேர்தல்களில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது. 2015-ல் 67 இடங்களிலும், 2020-ல் 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். முதலமைச்சராக இருக்கும் அதிஷி பெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் டெல்லி மாநில தேர்தல் முடிவு குறித்து அதிஷி கூறியதாவது:-
எங்களுடன் உறுதியாக நின்ற டெல்லி மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பாஜக-வின் சர்வாதிகாரம் மற்றும் குண்டர்கள் ராஜ்ஜியம் ஆகிவற்றிற்கு எதிரான போர் தொடரும். தேர்தல் முடிவு ஆம் ஆத்மிக்கு பின்னடைவுதான். ஆனால், டெல்லி மற்றும் நாட்டுக்கு மக்களுக்கான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்.
என் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி. என்னுடைய அணிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு எங்களுடைய கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். என்னுடைய தொகுதியில் நான் வெற்றி பெற்றுள்ளேன். இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல. இது போராட்டத்திற்கான நேரம். பாஜக-வின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்.
இவ்வாறு அதிஷி தெரிவித்தார்.
அதிஷ் கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ரமேஷ் விதுரியும், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் போட்டியிட்டனர்.
- டெல்லி மாநிலத்தின் அனைத்து துறையின் வளர்ச்சியையும் பாஜக உறுதி செய்யும்.
- டெல்லி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம். இது எங்களுடைய வாக்குறுதி
70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநில சட்டமன்றத்திற்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை பெற்றது.
மதியம் 2.45 மணி நிலவரப்படி பாஜக 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஏறக்குறைய இதுதான் இறுதி முடிவாக இருக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஒன்றிரண்டு இடங்களில் மாற்றம் ஏற்படலாம்.
இதனால் 1998-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் தலைநகர் மாநிலமான டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது.
பாஜக ஆட்சியை பிடித்த நிலையில் பிரதமர் மோடி வெற்றி குறித்து கூறியதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த டெல்லி சகோதர மற்றும் சகோதரிகளுக்கு தலைவணங்குகிறேன். இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதில் நாங்கள் பணிவும் பெருமையும் அடைகிறோம். டெல்லி மாநிலத்தின் அனைத்து துறையின் வளர்ச்சியையும் பாஜக உறுதி செய்யும். டெல்லி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம். இது எங்களுடைய வாக்குறுதி. இதை நிறைவெற்றும் வரை ஓயமாட்டோம். விக்சித் பாரத்தில் டெல்லியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.
டெல்லி தேர்தலில் வெற்றி பெற உழைத்த அனைத்து பாஜக தொண்டர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். தேர்தல் வெற்றியை தொடர்ந்து பாஜக-வினர் மேலும் தீவிரமாக உழைத்து டெல்லி மக்களுக்கான சேவை செய்வோம்.
இவ்வாறு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- 27 வருடங்களுக்கு பிறகு பாஜக டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைகிறது.
- பர்வேஷ் சர்மா முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பாஜக 47, ஆம் ஆத்மி கட்சி 23 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலாவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜங்புராவில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவினர். ஆம் ஆத்மிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.
27 வருடங்களுக்கு பிறகு பாஜக டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைகிறது. இதனால் பாஜகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புது டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜக வேட்பாளர் பர்வேஷ் சர்மா முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஆம் ஆத்மி பின்தங்கிய போதிலும் ஆம் ஆத்மி தலைமையகத்தின் வெளியே அக்கட்சியின் தொண்டர்கள் நடனமாடி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. வெற்றி உறுதியானதும் பாஜக அலுவலகத்தில் களைக்கட்டிய கொண்டாட்டங்களின் வீடியோக்களும் வெளியாகி உள்ளது.
#WATCH | रुझानों में पिछड़ने के बावजूद आम आदमी पार्टी दफ्तर के बाहर जश्न का माहौल@romanaisarkhan | LIVE देखें - https://t.co/zsQONhbexR LIVE पढ़ें - https://t.co/b41Nq7XcVw#ResultsOnABP #DelhiElectionResults #DelhiElection pic.twitter.com/eV9IJCzask
— ABP News (@ABPNews) February 8, 2025
#WATCH | Delhi | Celebration continues at BJP office as official trends of #DelhiElectionResults indicating BJP's comeback in the National CapitalBJP is leading in 45 seats; AAP in 25; as per Election Commission trends pic.twitter.com/OAYyWEZU6l
— ANI (@ANI) February 8, 2025
- சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
- பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை பிரதிபலிக்கிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் 48 இடங்களில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. இதனால் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் பா.ஜ.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. வெற்றி குறித்து மாநில தலைவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியை டெல்லி மக்கள் நிராகரித்து, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து மூன்றாவது முறையாக அழித்து, சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர். இன்றைய முடிவுகள், இந்திய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பரப்பும் பிளவுபடுத்தும் அரசியலை விட, நமது பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை பிரதிபலிக்கிறது.
இந்த அற்புதமான வெற்றிக்காக டெல்லி பா.ஜ.க.வின் அனைத்துத் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
The people of Delhi have rejected the corrupt AAP, decimated the Congress party for the third consecutive time, and have given @BJP4Delhi a historic mandate in the assembly elections. Today's results reflect that people have chosen the development politics of our Hon PM Thiru… pic.twitter.com/linfBkPDsp
— K.Annamalai (@annamalai_k) February 8, 2025
- ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
- பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறேன் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், " டெல்லி சட்டசபையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது மட்டுமல்லாமல் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.
டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் பாஜகவினர் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
#WATCH | On #DelhiElection2025, AAP national convener and former Delhi CM, Arvind Kejriwal, "We accept the mandate of the people with great humility. I congratulate the BJP for this victory and I hope they will fulfil all the promises for which people have voted them. We have… pic.twitter.com/VZOwLS8OVH
— ANI (@ANI) February 8, 2025
- டெல்லியில் பொய்களின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
- ஷீஷ் மஹால் பொய்கள், வஞ்சகம், ஊழல் ஆகியவற்றை அழித்து பேரழிவு இல்லாத (Aapda-free) டெல்லிக்காக மக்கள் பாடுபட்டுள்ளனர்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் கடந்த 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என வெளியிடப்பட்டது. ஆனால், கருத்து கணிப்பை தவறானது என்பது நிரூபணம் ஆகும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை பெற்றது. தற்போதைய நிலையில் பாஜக 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா போன்ற ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். 1998-ம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கிறது.
இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து அமித் ஷா கூறியதாவது:-
டெல்லியில் பொய்களின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. டெல்லி மக்கள் இதயத்தில் பிரதமர் மோடி உள்ளார். ஷீஷ் மஹால் பொய்கள், வஞ்சகம், ஊழல் ஆகியவற்றை அழித்து ஆப்டா இல்லாத (Aapda-free) டெல்லிக்காக மக்கள் பாடுபட்டுள்ளனர். நாட்டு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருபவர்களுக்கு இதுதான் உதாணரம் என டெல்லி பாடம் கற்பித்துள்ளது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- டெல்லியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ.க. தீவிரமாக களமாடியது.
- இனி வருகிற தேர்தலிலாவது இதனை உணர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும்.
திண்டுக்கல்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
டெல்லியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ.க. தீவிரமாக களமாடியது. சமூக ஊடகங்களில் கூட வாக்காளர்களுக்கு அந்த கட்சியினர் பணம் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்தியா கூட்டணியில் ஒற்றுமையாக இருக்க வேண்டிய காங்கிரஸ், ஆம் ஆத்மி ஈகோ பிரச்சனையால் பிரிந்து தேர்தலை சந்தித்தது. இது பா.ஜ.க. வெற்றிக்கு பெரிதும் உதவியாக அமைந்து விட்டது. பா.ஜ.க.வின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது.
பாராளுமன்ற தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் தான் பா.ஜ.க. என்ற மதவாத சக்தியை வீழ்த்த முடியும். இனி வருகிற தேர்தலிலாவது இதனை உணர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தனி வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தமிழக அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - நாம் தமிழர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படவுள்ளன.