என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "democratic party"

    • லட்சக்கணக்கான இந்தியர்கள் ஹெச்-1பி விசாவை நம்பியுள்ளனர்
    • விவேக் ராமசாமியின் பெற்றோர் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியாளராக முன்னிலையில் உள்ளார். அவர் மீதுள்ள வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது தகுதி உறுதிப்படுத்தப்படும் என்பதால் அவர் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையிலுள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி தீவிரமாக தன்னை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

    அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்ய லட்சக்கணக்கான இந்தியர்கள் அந்நாடு வழங்கும் ஹெச்-1பி விசா எனும் நடைமுறையை நம்பியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த விசா நடைமுறை குறித்து விவேக் தெரிவித்திருப்பதாவது:

    ஹெச்-1பி விசா அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே தீங்கை விளைவிக்கிறது. லாட்டரி திட்டம் பணியாளருக்கு பயனை அளிக்காது. நிபந்தனைக்குட்பட்ட அடிமை முறையாக பணியாளருக்கு இருப்பதனால் பணியமர்த்தும் நிறுவனத்திற்குத்தான் இது பலனளிக்கிறது. பணியாளருடன் வரும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் நாட்டிற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான பயனும் இல்லை. நான் இந்த விசா முறையை நீக்கி விடுவேன்.

    இவ்வாறு விவேக் கூறினார்.

    2018 தொடங்கி 2023 வரை, விவேக் அவரது முன்னாள் நிறுவனமான ரொய்வான்ட் சர்வீசஸ் சார்பாக இந்தியாவிலிருந்து பணியாளர்களை 29 முறை அமெரிக்காவிற்கு அழைத்துவர விண்ணப்பித்து இத்திட்டத்தால் பயனடைந்தவர். மேலும், அவரது பெற்றோர் இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள்.

    இப்பின்னணியில், விவேக் ராமசாமியின் கருத்து, இந்திய எதிர்ப்பு பேச்சாக சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகிறது.

    • இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்
    • கென்னடி ஜூனியருக்கு 19 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என ஆய்வு தெரிவிக்கின்றது

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு கட்சி ஜனநாயக முறை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (80) அதிபராக பதவி வகிக்கிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக ஆதரவு சேகரித்து வருகிறார்.

    பல வருடங்களாக இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கே அமெரிக்க மக்கள் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இரு முன்னணி வேட்பாளர்களை விட புதிய மற்றும் இளைய வயது வேட்பாளர்களை அமெரிக்கர்கள் களத்தில் காண விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார சிக்கல்கள் உருவெடுத்துள்ளது. பல துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளன. விலைவாசி கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷிய-உக்ரைன் போர் ஆகியவற்றில் அமெரிக்காவின் நிலைப்பாடு பல விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

    இப்பின்னணியில், 2024 அதிபர் தேர்தல் நடைபெற போகிறது.

    இரு கட்சிகளின் செயல்பாடுமே திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வந்ததால் சலிப்படைந்து விட்டதாகவும், மூன்றாவதாக ஒரு கட்சி தேவை எனும் மனநிலைக்கு அமெரிக்க மக்கள் வந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    இரு கட்சியை சாராமல் இதுவரை மூன்றாவதாக எந்த வேட்பாளரும் அங்கு வென்றதில்லை.

    1992ல் தொழிலதிபர் ராஸ் பெரோ (Ross Perot) இரு கட்சிகளையும் சாராத சுயேட்சை வேட்பாளராக 19 சதவீத வாக்குகள் வாங்கியிருந்தார் என்பதும் 2000ல் ரால்ஃப் நாடர் (Ralph Nader) 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது சுயேட்சை வேட்பாளராக ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், (Robert F. Kennedy Jr) மூன்றாவது வேட்பாளராக களம் இறங்கினால் உருவாகும் மும்முனை போட்டியில் 20 சதவீத வாக்குகளை அவர் வெல்ல கூடும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. தேர்தல் நெருங்கும் போது அவருக்கு ஆதரவு கூடலாம் என்றும் மக்கள் நினைக்கின்றனர்.

    நீண்ட காலமாக உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் பொதுமக்களுக்கு - குறிப்பாக இளம் வயதினருக்கு - ஒரு சலிப்பு ஏற்பட்டு விடுவதாகவும், அதனால் புதிய முகங்களையே வேட்பாளர்களாக தேட தொடங்குவதாகவும் அரசியல் நிபுணர்களும், உளவியல் வல்லுனர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். 

    • மீண்டும் அதிபராக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் டிரம்ப்
    • பல கண்டங்களிலிருந்தும் அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிகிறார்கள் என்றார் டிரம்ப்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    இருகட்சி ஜனநாயகம் நடைமுறையில் உள்ள அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் பிரதமராக உள்ளார். அவர் மீண்டும் அடுத்த வருட தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களம் இறங்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட தயாராகி வரும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தின் டுர்ஹாம் (Durham) நகரில் ஒரு பேரணியில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களிலும் உள்ள பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிந்து வருகின்றனர். அவர்களால் நம் நாட்டு "ரத்தம்" விஷமாகி வருகிறது. அவர்கள் உலகம் முழுவதும் உள்ள மனநல காப்பகங்கள், சிறைச்சாலைகள் உள்ளிட்ட இடங்களை "விஷம்" ஆக்கி வருகின்றனர். மீண்டும் அதிபராக நான் தேர்வானால் இவ்வாறு லட்சக்கணக்கில் மக்கள் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழைவதை முற்றிலும் ஒழித்து விடுவேன்."

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    தனது பிரசாரம் முழுவதும் எல்லைகளை பலப்படுத்த சட்ட விரோதமாக வரும் அகதிகளை தடுக்க மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்து வரும் டிரம்ப், ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் அகதிகளை "அமெரிக்க ரத்தத்தை விஷம் ஆக்குபவர்கள்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் உறவினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
    • டிரம்பிற்கு போட்டியிட உள்ள உரிமையை பறிப்பது அமெரிக்க குணம் அல்ல என்றார் ராபர்ட்

    2024 இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களமிறங்க உள்ள நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

    ஆனால், கடந்த 2020ல் அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட தனது ஆதரவாளர்களை அனுப்பி தேச துரோகம் செய்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் பெயரை வாக்கு சீட்டிலிருந்து நீக்கவும், அவர் தேர்தலில் நிற்க தடை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

    டிரம்பை தீவிரமாக எதிர்த்து வரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களில், ஜூனியர் கென்னடி.

    டொனால்ட் டிரம்பிற்கு தடை விதிக்கப்படுவது குறித்து ஜூனியர் கென்னடியிடம் கேட்கப்பட்டது.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    நான் டிரம்பின் ஆதரவாளனோ ரசிகனோ இல்லை. அதனால்தான் அவரை எதிர்த்து தேர்தலில் களம் இறங்குகிறேன்.

    ஆனால், அவரை சமநிலையற்ற ஆடுகளத்தில் வெல்ல விரும்பவில்லை.

    அமெரிக்க மக்களுக்கு ஒரு நேர்மையான தேர்தலை எதிர்பார்க்கும் உரிமை உண்டு. பல விவாதங்கள் நடைபெற்று, மக்கள் ஒரு முடிவுக்கு வந்து பிறகு ஒருவரை தேர்ந்தெடுக்கும் நியாயமான ஜனநாயகத்தை கோர அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு.

    ஒரு அமெரிக்க குடிமகனுக்கு எந்த ஆதாரமுமில்லாமல் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படுவது பெரும் தவறு. நம் நாட்டை ஒரு அறிவில்லாதவர்களின் நாடு போல் உலக அரங்கில் காட்டி விடும்.

    குறுகிய பார்வை கொண்ட இந்த முடிவு எடுக்கப்பட்டால், டிரம்ப் ஒரு கடவுளை போல் கொண்டாடப்படுபவர் ஆகி விடுவார்.

    இது அமெரிக்கர்கள் எடுக்கும் முடிவே அல்ல.

    இது தவறான திசையில் பயணிக்கும் முடிவு. மேலும், இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

    இவ்வாறு கென்னடி ஜூனியர் கூறினார்.

    1961ல் அமெரிக்காவின் 35-வது அதிபராக பதவியேற்ற ஜான் எஃப். கென்னடி (John F. Kennedy), 1963ல் டெக்ஸாஸ் (Texas) மாநில டல்லாஸ் (Dallas) நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.

    பிறகு 1968ல், அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜான் கென்னடியின் சகோதரர், ராபர்ட் எஃப். கென்னடி, கலிபோர்னியா மாநில லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.

    அந்த ராபர்ட் கென்னடியின் மகன்தான் ராபர்ட் எஃப். கென்னடி, ஜூனியர் (Robert F. Kennedy, Jr.) என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுமார் 4,000 ஜனநாயக கட்சி பிரதிநிதிகளின் வாக்களிக்கும் இந்த உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.
    • வரும் ஆகஸ்ட் 19 முதல் 22 வரை சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாடு நடைபெறும்

    அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராகக் களமிறங்குகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

    முதலில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்த நிலையில் அவரது உடல் மற்றும் மன நிலையில் உள்ள தடுமாற்றம் விமர்சனத்துக்குள்ளானதால் கடந்த மாதம் அதிபர் ரேஸில் இருந்து விலகினார். தொடர்ந்து கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக பைடன் முன்மொழிந்தார்.

     

    இந்நிலையில் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படத் தேவையான அளவு வாக்குகளைக் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்கட்சி தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் நடந்த தேர்தலில் பைடன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் விலகியதை அடுத்து தற்போது மீண்டும் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.

    சுமார் 4,000 ஜனநாயக கட்சி பிரதிநிதிகளின் வாக்களிக்கும் இந்த உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கமலா ஹாரிஸ் மட்டுமே வேட்பாளராக இருந்த நிலையில், அவர் அதிபர் வேட்பாளராகத் தேவையான வாக்குகளைப் பெற்றார். வரும் ஆகஸ்ட் 19 முதல் 22 வரை சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாடு நடைபெறும் நிலையில், அதில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்.

     

    ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாகக் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த வாரம் வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார். 

    • ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
    • குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராகக் களமிறங்குகிறார்.

    அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராகக் களமிறங்குகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

    முதலில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்த நிலையில் அவரது உடல் மற்றும் மன நிலையில் உள்ள தடுமாற்றம் விமர்சனத்துக்குள்ளானதால் கடந்த மாதம் அதிபர் ரேஸில் இருந்து விலகினார்.

    இதனை தொடர்ந்து ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸ்டை பிரதமர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் அறிவித்தார்.

    அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாண ஆளுநராக டிம் வால்ஸ் (60) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இல்லினாய்ஸின் 7-வது தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.
    • இல்லினாய்ஸின் 7-வது தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். இல்லினாய்ஸில் உள்ள ஷாம்பர்க் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

    அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சா வளியை சேர்ந்த 9 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் 5 பேர் தற்போது எம்.பி.யாக உள்ளனர். அவர்களில் ஒருவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி.

    இவர் சிகாகோவில் வடமேற்கு பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய இல்லினாய்ஸின் 7-வது தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.

    இந்த முறையும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரீசை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.

    தெற்காசிய வாக்காளர்களை குறிவைத்து மேற்கொண்ட இவரது பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்து கோவில்கள் உள்பட வழிபாட்டு தளங்களுக்கு சென்று வந்த இவர் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அமெரிக்க சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இல்லினாய்ஸின் பியோரியில் வளர்ந்த அவர் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் எந்திர என்ஜினீயரிங் பயின்றார். மேலும் ஹார்வர்டு சட்டப்பள்ளியில் பட்டம் பெற்ற இவர் உளவுத்துறை மற்றும் மேற்பார்வை குழுக்களிலும் பணியாற்றுகிறார்.

    கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்த போது கவலை அடைந்த இவர் இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்தவதற்கு இடைக்கால வங்காளதேசம் அரசாங்கம் ஈடுபட வேண்டும் என அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரியிடம் வலியுறுத்தி இருந்தார்.

    இவர் இல்லினாய்ஸில் உள்ள ஷாம்பர்க் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி பிரியா டாக்டராக உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. #DemocraticParty #RepublicanParty #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியின் 4 ஆண்டு பதவிக்காலத்தில் 2 ஆண்டுகளின் முடிவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையின் (மேல்சபை) மூன்றில் ஒரு பகுதியான 33 இடங்களுக்கும் தேர்தல் நடத்துவது வழக்கமான ஒன்று. ஜனாதிபதி பதவிக்காலத்தின் மத்தியில் வருவதால் இடைக்கால தேர்தல் என்ற பெயரைப் பெற்றது.

    அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இது 2 ஆண்டு கால டிரம்ப் பதவிக்காலத்துக்கான பொது வாக்கெடுப்பாக அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

    தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, நாடாளுமன்றத்தின் கீழ்சபையை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவையான நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, 219 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி 193 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.



    இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி, ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும். இதன்மூலம் டிரம்ப் நிர்வாகம், தொழில் சார்ந்த முடிவுகள், வருமான வரி விவகாரங்கள் தொடர்பாக ஜனநாயக கட்சியினர் விசாரணை நடத்த முடியும் என்பதால் மீதமுள்ள 2 ஆண்டு காலம் டிரம்புக்கு போராட்டமாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    மேல்சபையான செனட் சபையில் ஏற்கனவே குடியரசு கட்சிதான் பெரும்பான்மை பெற்றிருந்தது. இப்போது 33 இடங்களுக்கு நடந்த தேர்தலிலும் முன்னிலை பெற்ற அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி, மொத்தம் 51 இடங்களையும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 45 இடங்களையும் பெற்றுள்ளது. அதிபரால் அதிக கவனம் செலுத்தப்பட்ட இந்த செனட் சபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    4 ஆண்டுகள் அதிபர் பதவிக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி கீழ் சபையை பறிகொடுத்தது அவருக்கான பின்னடைவாக கருதப்படுகிறது. #DemocraticParty #RepublicanParty #Trump
    ×