search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DENGU"

    • சுகாதார பிரிவும், டிபிசி பிரிவும் இணைந்து வீடு வீடாக மேற்கொண்டு வருகிறார்கள்.
    • புழுக்கள் இருந்தால் அதை முழுமையாக அழிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    உடுமலை:

    உடுமலை நகராட்சி பகுதியில் டெங்கு மற்றும் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து உடுமலை நகர்மன்ற தலைவர் மு.மத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    நிபா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி சுகாதார பிரிவும், டிபிசி பிரிவும் இணைந்து வீடு வீடாக மேற்கொண்டு வருகிறார்கள்.அப்போது மழைநீர் வடிகால்கள், வீதிகளில் உள்ள பள்ளங்கள்,உபயோகப்படுத்தாத குடிநீர் தொட்டி,வெட்ட வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆட்டுக்கல், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள்,பிரிட்ஜ் பின்புறம் உள்ள தட்டு, பூந்தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் தண்ணீரில் புழுக்கள் உருவாகி உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்படுகிறது. புழுக்கள் இருந்தால் அதை முழுமையாக அழிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    பணியாளரின் சுமையை எளிதாக்கும் விதமாகவும் நோய் பரவலை தடுக்கும் விதமாகவும் பொதுமக்களே முன்வந்து மேலே குறிப்பிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும்.வைரஸ் காய்ச்சலை உருவாக்கும் புழுக்கள் தூய்மையான நீரிலேயே உருவாகும் தன்மை உள்ளது என்பதால் சேமித்து வைக்கும் குடிநீரினை நன்றாக மூடி வைப்பதுடன் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.மேலும் புழுக்கள் உருவாகி இருந்தால் உடனடியாக நகராட்சி சுகாதார பிரிவிலோ அல்லது நகரமன்ற உறுப்பினர் மூலமாக தொடர்பு கொண்டு தடுப்பு மருந்தை தெளிப்பதற்கு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • டெங்கு, இன்புளூயன்சா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • சிறுவலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் சிறுவலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு, இன்புளூயன்சா விழிப்புணர்வு முகாம் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருண் பிரகாஷ் கலந்து கொண்டு பேசுகையில் தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு, இன்புளூயன்சா தொற்று பரவி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு சென்று உரிய மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் 3 அல்லது 4 நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல் பற்றி பொதுமக்களோ, மாணவர்களோ அச்சப்பட தேவையில்லை. தற்போது மழைக்காலம் நெருங்குவதால் பள்ளி மற்றும் வீடுகளின் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதால் கொசுக்கடியில் இருந்து கொசுவலை, கொசு மருந்து கிரீம்களை பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், அருண்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×