search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deoria"

    • இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு உண்ட பின்பு ஏற்பட்டுள்ளது.
    • மகரிஷி தேவ்ரஹா பாபா மருத்துவக் கல்லூரியில் ஆகாஷ் மற்றும் நித்தேஷ் ஆகிய இரு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் உள்ள மெஹ்ரூனா கிராமத்தில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஆசிரம முறை இடைநிலைக் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 80 மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, பேதி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவர்கள் உணவு உண்டபின்பு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சாப்பிட்ட உணவில் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நீதிபதி திவ்யா மிட்டல் செய்தியாளர்களிடம் கூறுகையில், மகரிஷி தேவ்ரஹா பாபா மருத்துவக் கல்லூரியில் ஆகாஷ் மற்றும் நித்தேஷ் ஆகிய இரு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் பள்ளியிலேயே தலைமை மருத்துவ அதிகாரி (CMO) தலைமையிலான மருத்துவர்கள் குழுவிடம் முதன்மை சிகிச்சை பெற்றனர்.

    அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக மருத்துவக் குழு பள்ளியில் உள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    இதையடுத்து மாவட்ட மாஜிஸ்திரேட் மிட்டல் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சங்கல்ப் சர்மா ஆகியோர் மருத்துவக் கல்லூரிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை பார்வையிட்டனர்.

    உணவு பாதுகாப்பு உதவி ஆணையர் வினய் குமார் சஹய் கூறுகையில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்தின் குழு கல்லூரிகளுக்கு இடையேயான சமையலறை, ஸ்டோரேஜ் ரூமில் ஆய்வு செய்தது. அங்கு தயார் செய்த ரொட்டி மற்றும் அங்கிருந்த பருப்பு, காய்கறிகள், மிளகாய்த்தூள், கடலைப்பருப்பு, கடுகு எண்ணெய், ஊறுகாய் உள்ளிட்டவைகளில் ஏழு மாதிரிகளை சேகரித்தனர்.

    மாதிரிகள் சோதனைக்காக உணவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    ×