என் மலர்
நீங்கள் தேடியது "Devasam Board"
- 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவிப்பு.
- ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.
சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை பாயசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமானதாக இல்லை என ஐயப்பா மசாலா நிறுவனம் கடந்தாண்டு கேரளா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், ஏலக்காயின் தரம் குறித்து திருவனந்தபுரம் அரசு ஆய்வகம் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையில், அரவணை பாயசத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமற்றது எனவும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதால், ஏலக்காய் பாதுகாப்பானது அல்ல என தெரிவிக்கப்பட்டது.
அதனால் ஏலக்காய் சேர்க்காமல் அரவணை பாயாசம் தயாரிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் ஏலக்காய் கலக்காமல் இருந்தது குறித்து பல பக்தர்கள் அதிருப்தி அடைந்ததாகவும் பக்தர்களின் கோரிக்கையை அடுத்து தற்போது எந்த விதமான கெமிக்கலும் கலக்காத ஏலக்காய் கலக்க முடிவு செய்து இருப்பதாகவும் தேவஸ்தான வட்டாரத்தில் கூறப்பட்டது.
அதன்படி சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது.
இதற்காக தீங்கு தரும் எந்த ரசாயனமும் இல்லாத 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவித்துள்ளது.
- ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும்.
- வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பு வெளியீடு.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் அடுத்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.
பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் ரேடியோ சேவையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்க உள்ளது.

"ரேடியோ ஹரிவராசனம்" என்ற பெயரில் அந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது. இது 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்கள் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் கேட்கக்கூடிய வகையில் இந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது.
ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும். இதில் வழிபாடுகள், பக்தி பாடல்கள், கோவில் விழாக்களின் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் சபரிமலையின் வரலாறு பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும்.
மேலும், கோவில் மற்றும் அதன் பாரம்பரியங்கள் தொடர்பான நேர்காணல்கள் மற்றும் பேச்சுகளும் ஒலிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டிருக்கிறது.
- பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்.
- கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வழக்கமாக விரதமிருந்து வரும் பக்தர்கள் மற்றும் கன்னி ஐயப்பமார்கள் அதிகளவில் வருவதே இதற்கு காரணம்.
தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும்போது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை செய்துகொடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகும்.
அதனை வெற்றிகரமாக மேற்கொள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்துகிறது.
அதே நேரத்தில் யாத்திரை வரக்கூடிய பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் அறிவித்து வருகிறது. சபரிமலை யாத்திரையில் பக்தர்கள் கடை பிடிக்கவேண்டிய விஷயங்களை இந்த ஆண்டும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-

செய்ய வேண்டியவை
* பக்தர்கள் மலை ஏறும் போது 10 நிமிட நடைக்கு பிறகு 5 நிமிடம் ஓய்வெடுங்கள்.
* மரக்கூட்டம், சரம்குத்தி, நடைபந்தல் - பாரம்பரிய பாதையை பயன்படுத்தி சன்னிதானம் செல்லவும்.
* பதினெட்டாம்படியை அடைய வரிசை முறையை பின்பற்றவும்.
* திரும்பும் பயணத்திற்கு நடைபந்தல் மேம்பாலத்தை பயன்படுத்தவும்.
* சிறுநீர் கழிப்பதற்கும், உடல் கழிவுகளை அகற்றுவதற்கும் கழிவறைகளை பயன்படுத்துங்கள்.
* சன்னிதானத்தில் நிலவும் கூட்டத்தின் நிலையை கண்டறிந்து, பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லுங்கள்.
* டோலியை பயன்படுத்தும் போது, தேவசம் கவுண்டரில் மட்டும் பணம் செலுத்தி ரசீதை வைத்துக் கொள்ள வேண்டும்.
* பாதுகாப்பு சோதனைச்சாவடிகளில் உங்களை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துங்கள்.
எந்த உதவிக்கும் காவல்துறையை அணுகவும்.
* சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
* உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே உண்ணக்கூடிய பொருட்களை வாங்கவும்.
* பம்பை, சன்னிதானம் மற்றும் மலையேற்ற பாதைகளை சுத்தமாக வைத்திருங்கள்.
* ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும்.
* கழிவுப் பெட்டிகளில் மட்டுமே கழிவுகளை இடுங்கள்.
* தேவைப்பட்டால், மருத்துவ மையங்கள் மற்றும் ஆக்சிஜன் பார்லர்களின் வசதிகளை பெறவும்.
* குழந்தைகள், வயது முதிர்ந்தோர், மாளிகாபுரம் (பெண்கள்) முகவரி மற்றும் தொடர்பு எண்கள் கொண்ட அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிடப்பட வேண்டும்.
* குழுக்கள் அல்லது உடன் வந்த நண்பர்களிடமிருந்து தனிமை படுத்தப்பட்டால், பக்தர்கள் காவல் உதவி நிலையங்களில் புகார் செய்யலாம்.

செய்ய கூடாதவை
* கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
* பம்பை, சன்னிதானம் மற்றும் யாத்திரை செல்லும் வழியில் புகைபிடிக்க வேண்டாம்.
* மது அல்லது போதை பொருட்களை உட்கொள்ள வேண்டாம்.
* வரிசையில் குதிக்க வேண்டாம். வரிசையில் இருக்கும்போது அவசரப்பட வேண்டாம்.
* ஆயுதங்கள் அல்லது பிற வெடிபொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.
* அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களை மகிழ்விக்க வேண்டாம்.
* கழிப்வறைக்கு வெளியே சிறுநீர் கழிக்காதீர்கள். கழிவறைக்கு வெளியே உடல்களை சுத்தம் செய்யாதீர்கள்.
* எந்தவொரு சேவைக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம்.
* எந்த உதவிக்கும் காவல்துறையை அணுக தயங்க வேண்டாம்.
* குப்பை தொட்டிகளை தவிர வேறு எங்கும் குப்பைகளை வீசக்கூடாது.
* பதினெட்டாம்படியில் தேங்காய் உடைக்க வேண்டாம்.
* பதினெட்டம்பாடியின் இருபுறமும் ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர வேறு எங்கும் தேங்காய் உடைக்க வேண்டாம்.
* புனித படிகளில் ஏறும் போது பதினெட்டாம்படியில் மண்டியிட வேண்டாம்.
* நடைப்பந்தல் மேம்பாலத்தை தவிர வேறு எந்த பாதையையும் திரும்பப் பயணத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.
* மேல் திருமுட்டம் அல்லது தந்திரிநாடு எங்கும் ஓய்வெடுக்க வேண்டாம்.
* நடைபந்தல் மற்றும் கீழ் திருமுட்டம் ஆகியவற்றில் விரிகளுக்கு (தரையில் பாய்கள்) பாதைகளை பயன்படுத்த வேண்டாம்.
பாதுகாப்பு
* பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
* ஆயுதங்கள் அனுமதிக்கப்பட வில்லை.
* சன்னிதானத்தில் சமையல் எரிவாயு, அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. அப்படி தீ எரித்தால் தீயை உபயோகித்த உடனே அணைக்க வேண்டும்.
* பதினெட்டாம் படியில் ஏறும் முன் உங்களையும், உங்கள் பொருட்களையும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துங்கள்.




