என் மலர்
நீங்கள் தேடியது "Dileep"
- சபரிமலையில் அனைத்து பக்தர்களும் சமம் என்ற நிலையில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
- இச்சம்பவம் குறித்து நேற்று கேரள ஐகோர்ட்டின் தேவஸ்தான சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் அனைத்து பக்தர்களும் சமம் என்ற நிலையில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சபரிமலை சென்ற நடிகர் திலீப் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் இரவு நடை அடைக்கும்போது பாடப்படும் அரிவராசனம் முடியும் வரை நடிகர் திலீப் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில் இச்சம்பவம் குறித்து நேற்று கேரள ஐகோர்ட்டின் தேவஸ்தான சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் திலீப் சன்னிதானத்திற்கு வந்தது எப்படி? என கேள்வி எழுப்பிய சிறப்பு அமர்வு நீதிபதிகள், அரிவராசனம் பாடல் முடியும் வரை நடிகர் திலீப்பிற்கு சன்னிதானத்தில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி கிடைத்தது எப்படி? என்ற கேள்வியையும் எழுப்பினர்.
இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து சம்பவம் குறித்து தேவஸ்தான ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக தேவஸ்தானம் சார்பில் கோா்ட்டில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.
- நடிகை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு கேரளாவில் நடந்து வருகிறது.
- இந்த வழக்கு விசாரணையை அடுத்த வருடம் ஜனவரி 31-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மலையாள முன்னணி நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அவரும் கைதானார்.

திலீப்
தற்போது திலீப் ஜாமீனில் வந்துள்ள நிலையில் விசாரணை அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இன்னொரு வழக்கும் திலீப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை கடத்தல் வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு பின்னர் திலீப்பும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

திலீப்
இந்த விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் முடிக்கும்படி ஏற்கனவே விசாரணை குழுவுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றம் மனுதாக்கல் செய்தது. இதையடுத்து நடிகை கடத்தல் வழக்கு விசாரணையை அடுத்த வருடம் ஜனவரி 31-ம் தேதிக்குள் முடிக்க அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.











